12 ஆகஸ்ட் 2016

சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு-தாளவாடி



மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். ஈரோடு மாவட்டம்,தாளவாடி வட்டத்தில் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பாக  சேவையாற்றி வருகிறோம்.
 அதற்கு முன்னதாக தாளவாடி வட்டார சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து PET  என்னும்  ''பார்த்தீனியச்செடி அகற்றும்  குழு''என்ற பெயரிலும் செயல்பட்டு வந்தோம்..ஆக தாளவாடி வட்டார பொது மக்களின் நலனுக்காக சேவையாற்றும் அனைவரையும் அழைத்து பொதுக்குழு கூட்டம்  2016ஆகஸ்டு12ந் தேதி வெள்ளிக்கிழமை நேற்று மாலை4.00மணியளவில் தாளவாடி தொன்போஸ்கோ தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. அப்போது PET  என்னும் பெயரில் செயல்பட்டு வந்தவர்களும் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்புடன் இணைந்து   ''சமூக  ஆர்வலர்களின் கூட்டமைப்பாக''  செயல்பட முடிவு எடுக்கப்பட்டது

         அது சமயம் 
 ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி, 
ஆஷாகேந்திரா குழந்தைகள் நல மையம்,
பாம்2 சமூக சேவை நிறுவனம்,
தொன்போஸ்கோ தொழிற் பயிற்சி மையம்,
தாளவாடி சமூக சேவை மையம்,
மலைவாழ் மக்கள் சங்கம்,
மனித உரிமைகள் கழகம்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
ரீடு நிறுவனம் 
 உட்பட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானம்
    (1) தாளவாடி பொதுமக்களின் நலனுக்காக பாடுபடும் அனைவரும் ஒன்றாக இணைந்து  அரசியல்,சாதி,மதம்,மொழி, வேறுபாடின்றி    செயல்படுவது.
 (2) சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்புக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது.

(3)ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமை சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு கூட்டம் நடத்துவது.
(4)சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஏற்கனவே மக்களுக்காக சேவையாற்றி வருவது நீடிக்கட்டும்.சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு தனிப்பட்ட  சேவை நிறுவனங்களின் தேவைக்கேற்ப முடிந்த உதவிகளை செய்யலாம்.
(5)தாளவாடி மக்களுக்கான தேவைகள்,குறைகள் என்னென்ன?என்பதை பட்டியலிட்டு  தீர்வு காண முயற்சிப்பது.
(6)சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு மாதாந்திரக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு மாதக்கூட்டத்திலும் ஒருவர் வீதம் அவரவர் செயல்பாடுகளை,திட்டங்களை,கருத்துக்களை பதினைந்து நிமிடம் பேச வேண்டும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மேற்கண்ட தீர்மானங்களின்படி,
 சீட்டு எழுதிக் குலுக்கி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
திருமிகு.மரிய அருள் வியானி அவர்கள்,ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி தலைவர் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்புக்கும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமிகு.A.P. ராஜூ அவர்கள் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர்களின் கூட்டமைக்கு செயலாளராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமிகு. T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்புக்கு பொருளாளராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஏழாயிரம் ரூபாய் நிதியினை பொருளாளர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

வருகிற  2016 செப்டெம்பர் 21 ந் தேதி புதன்கிழமை நடைபெறும்  மாதாந்திரக்  கூட்டத்தில் திருமிகு.C.பரமேஸ்வரன்  செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் பொது  மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களைக்  கூற வாய்ப்பளிக்கப்பட்டது.

மேற்கண்ட நான்காவது  தீர்மானத்தின்படி   இளைய  சமுதாய நலன் கருதி செயல்படுத்தும் தாளவாடி  மாணவர்கள் நூலகத்தை  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பே  செயல்படுத்துவது என்றும் தேவையான உதவிகளை சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பில் பெறுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

             தொடர்புக்கு  9585600733  paramesdriver@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...