05 செப்டம்பர் 2015

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்று ஆசிரியர் தினம்...


தலையில தட்டியே அடிப்பாருங்க ,,,,,,,
தமிழ் வாத்தியார் ---தகர டப்பாங்க------

 இழுத்து இழுத்து பேசுவாருங்க,,,,,
இங்கிலீசு-- வாத்தியாருங்க ---------
அவரு கூட அக்கபோருங்க ,,,,,,
அறிவியல்--- வாத்தியாருங்க ----
கம்முன்னு இருக்க மாட்டாருங்க ,,,,
கணக்கு-- வாத்தியாருங்க -------------
வள வளன்னு பேசுவாருங்க ,,,,
வரலாறு --வாத்தியாருங்க

------ஆனா இப்போ தெரியுதுங்க ,,,,,,,,,,,,,,
"கண்ணுக்கு தெரியும் கடவுளுங்க
கத்து குடுத்த வாத்தியாருங்க ,,,,,,,,,,,,

ஏத்தி விட்ட ஏணிதாங்க ,,,எங்க வாத்தியாருங்க ,,,,,,,,,,

கவிதை தந்தவர்,
  திரு. J.M.பூபதி ஐயா அவர்கள்-சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ்.
============================================================== 

                     ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.M. தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.E.O. வந்தார். அவரை பார்த்த H.M. ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் D.E.O. தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் C.E.O. வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்C.E.O.தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் J.D. வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் J.D.தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிறேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து தானுங்க, இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று உறுதி எடுத்தான்.

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துககள்.

2 கருத்துகள்:

  1. உண்மைதான் படிக்கும் போது ஆசிரியர்களின் அருமை தெரிவது இல்லை தான்....நல்ல பதிவு ....புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு வரவேற்கின்றோம்....வலைப்பதிவர் விழாக்குவின் சார்பாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய அம்மையீர்,
      வணக்கம். தங்களது கருத்துரைக்கும் வருகிற 2015அக்டோபர் 11 ந் தேதி புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு வரவேற்று அழைத்தமைக்கும் மிக்க நன்றிங்க..
      என
      அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,9585600733
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்.

      நீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...