05 ஜூலை 2015

சித்த மருத்துவத் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு கொள்வோம்.

          சித்த மருத்துவமே உணவுக்கும்,மருந்துக்கும் பயனளிப்பவை

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். நம் முன்னோர்களின் தமிழ் மருத்துவமுறைகளை பரப்புரை செய்வதை நோக்கமாக கொண்டு இயன்றளவு சித்த வைத்தியர்களை ஒன்றிணைப்போம்.அனைவரின் முகவரி மற்றும் தொடர்பு எண்களை தொகுத்து அளிப்போம்.
கல் தோன்றி மண் தோன்றா முன்
தோன்றிய மூத்த குடி தமிழ் குடி


என்ற பழமொழிக்கு ஏற்ப  தமிழன் ஆதியில்
கண்டறிந்த மருத்துவமாம் தமிழ் மருத்துவ முறையினை
சித்தர் பெருமக்கள் தங்களின் ஞானத்தால் மென்மேலும்
சீர்படுத்தி வடிவமைத்த "சித்த மருத்துவ" முறையினில்
மனித உடலில் தோன்றும் நோய்களை 4448 -என வகை
பிரித்து இந்த நோய்களை நீக்கும் பொருட்டு மூலிகைகள்,சம்பைச்
சரக்குகள்,உப்பு வகைகள்-25
,பாசான வகைகள்- 64,உலோகங்
கள்-9
,உபரசங்கள்-120,என்று அவைகளைக் கண்டறிந்து சூரணம்,
குடிநீர்,இளகம்,தைலம்,பஸ்பம்,செந்தூரம்,சுண்ணம்,பாசாணக்
கட்டு,களங்கு என்ற மருந்துகளாகவும்
செய்து நமக்கு அளித்து நாட்பட்ட
கொடிய நோய்களையும் இலகுவாக நீக்கும் முறைகளை மனித குல
நலனுக்கென அர்ப்பணித்த மருத்துவ முறைகள் ஏராளம் .

மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு
ஏற்படுத்துவதே நமது நோக்கம்...

  என அன்பன்,
C. பரமேஸ்வரன்.செயலாளர்,
மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்.
(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
          சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...