18 மே 2015

அணைத்தல்,அலறல்,கடித்தல்....

 மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.  நேற்று அதாவது2015 மே மாதம் 17-ந்தேதி மாலை தாளவாடியிலிருந்து பனகஹள்ளி செல்லும் வழித்தடத்தில் 3.45மணிக்கு செல்லும்போது பாளையம் என்ற ஊருக்கு அருகில் எதிரில் வந்த காரின் மேல் குரங்கு அமர்ந்துகொண்டு வருவதைக்கண்ட நான் பேருந்தை வேகத்தைக்குறைத்து எதிரில் வந்த காரினை நிறுத்தச்சொல்லி சைகை செய்து குரங்கு காரின்மேல் பயணிப்பதை சொல்லும்போது அந்தக்குரங்கு நான் பணி புரிந்த பேருந்தினுள் தாவி ஏறிவிட்டது.சுமார் அரை மணி நேரம் அதனுடன் போராடி குரங்கை சமாதானப்படுத்தி பிரிந்து செல்வதற்குள் போதும் என்றாகிவிட்டது. என்னை நம்பி பேருந்தினுள் உள்ள பயணிகளை காக்க வேண்டும் அல்லவா? ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அருகிலுள்ள பனகஹள்ளி என்ற ஊரில் ஒரு சிறுவனை கடித்துவிட்டது அந்தக்குரங்கு.....அதன் எண்ணமும் எதிர்பார்ப்பும் நம்மால் உணர இயலவில்லை!. காரணம் என்னவோ?















அன்பைத்தேடும்  குரங்கு தற்போது பனகஹள்ளியில் உலா வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...