01 ஏப்ரல் 2015

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - PROTECT GIRLS ....


மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.கோபி சார் ஆட்சியர் திருமிகு.கிருஷ்ணன் உண்ணி அவர்கள் ஈரோடு மாவட்ட அளவில் நடைபெறும் பெண் குழந்தைகளை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப்பயணத்தினை   2015 மார்ச் 30 ஆம் தேதி அன்று காலை   கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்.
    கோபி பேருந்து நிலையம் அருகில் 30.03.2015அன்று நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ...

             தொடர்ந்து சத்தியமங்கலத்தில்31.03.2015அன்று காலை பேருந்து நிலையத்தில்  பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 
     சத்தியமங்கலம்  பேருந்து நிலையத்தில் கலைக்குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்......

 குழந்தைகள் ..........
       பதினெட்டு வயது பூர்த்தியாகும் வரை அனைவரும் குழந்தைகள்தாங்க!..
 குழந்தைகளுக்கு தேவை படிப்பு,விளையாட்டு,ஓய்வு மட்டும்தாங்க..வேலையல்ல என்பதை நினைவில் வையுங்க!!.
     குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது சட்டப்படி குற்றம் ஆதலால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறைத்தண்டனைதாங்க.....


   உங்க பகுதியில் குழந்தைகளுக்கு பிரச்சினையா?
          குழந்தைகளுக்கு பிரச்சினை எதுவாக இருப்பினும் உடனே தொடர்பு கொள்ள...
(1)மாவட்ட ஆட்சித்தலைவர்,ஈரோடு-0424 2260207
(2)குழந்தைகள் நலக்குழு(CWC) ஈரோடு - 9443354884
(3)மாவட்ட சமூக நலத்துறை (DSW)ஈரோடு - 0424 2261405
(4)மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU) ஈரோடு - 04242275010
(5)தேசிய குழந்தை தொழிலாளர் முறை 
                       ஒழிப்புத்திட்டம் (NCLP) - ஈரோடு - 04242266736
 (6)குழந்தைகளுக்கான தனிப்பிரிவு CHILD LINE - 1098
(7)ஒருங்கிணைந்த குழந்தைகள்
              வளர்ச்சித்திட்டம்  (ICDS)ஈரோடு - 0424 2273607
(8)மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,ஈரோடு-04242261100
(9) அனைத்து பகுதி காவல் நிலையங்கள் - 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...