05 ஜூலை 2025

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இந்திய தேசிய கீதம்....அனைவரும் நினைவில் வைத்திருப்போம்.

                                     தமிழ்த்தாய் வாழ்த்து 

     தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் என்பவராவார்.இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும். இது பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா என்ற பாவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ் தாய் வாழ்த்து பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழரான திரு. “மனோன்மணியம்” சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், “ஆரியம் போல தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை” என்கிற ஆட்சேபகரமான வரி நீக்கப்பட்ட பிறகே அதிகாரபூர்வ பாடலாக அறிவிக்கப்பட்டது.

முழு உண்மை பாடல் வரிகள்..! 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந்தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 

வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

     2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் “நீராரும் கடலுடுத்த” என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டாயம் பாட வேண்டும் எனவும். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் பொழுது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் 

 நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

 சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

 தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

 தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! 

தமிழணங்கே! 

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து..
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வந்தே மாதரம் தேசியப்பாடல்

  வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே) சரணங்கள் 1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராய...