15 ஜூன் 2020

(3) இசைக் கருவிகள் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

                                   (பதிவு - 3 )         இசைக் கருவிகள்

                                       
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
                 தமிழர்களின் இசைக்கருவிகளின் எண்ணிக்கையே  நூற்றுக்கணக்கில் இருக்கும்போது,இந்தியா உட்பட உலக நாடுகளின் இசைக் கருவிகளை இங்கு பட்டியலிட இயலாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் உள்ளதாக அறிய நேரிடுகிறது. https://konguthendral.blogspot.comஆதலால் தமிழர்களின் மிக முக்கியமான இசைக் கருவிகளை மட்டும் இங்கு காண்போம்.

                மிடறு என்றழைக்கப்படும் கற்தூண்கள் இசையை எழுப்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது தமிழர்களின் கட்டிடக்கலையில் நுட்பமானதாகும்.மிடறு எனப்படும் இந்த இசைத்தூண்கள் இன்றும் கோயில்களில் உள்ளன.சென்னையில் உள்ள யானைக்கோயில் உதாரணமாகும். https://konguthendral.blogspot.comமேலும் இசைத்தூண்கள் மதுரை,சுசீந்திரம்,திருநெல்வேலி,புதுக்கோட்டையிலும் உள்ளதாக அறியமுடிகிறது.
 தமிழ் இலக்கியத்தில்  இசைக் கருவிகளின் பட்டியல்.....
 இசைப்புலவர்: தமிழிசை மரபின் ...

(1) விண் அதிர் இமிழ் இசை கடுப்ப,பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு,ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும்பீலி அணித்தழைக்க்க் கோட்டோடு,
கண் இடை விடுத்த களிற்று உயிர்த்தும்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தும்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்க குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
நொடி தரு பாணிய பதலையும்,பிறவும்
             என 'மலைபடுகடாம்' என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

(2)மண் குடங்களின் வாயில் தோல் கட்டி விலங்குகளையும்,பறவைகளையும் ஓட்டத் தினைப்புனத்தில்(கழனிகளில்) பயன்படுத்தப்பட்ட குடமுழவு என்ற கருவி  பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது.
‘‘பாடுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே‘‘
                                                - குறுந்தொகை 291 (2–3)


(3) தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.தற்காலத்தில் பித்தளையில் கொம்பு என்ற பெயரில் செய்யப்பட்டு இசைக்கப்படுகிறது. https://konguthendral.blogspot.com
‘‘விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப
முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத
யாணர் வண்டினம் யாழிசை பிறக்க‘‘
                          - பரிபாடல் 21 (31–35)

தமிழர் இசைக் கருவிகளை இரு கூறாகப் பிரிக்கலாம். பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.  https://konguthendral.blogspot.com
தற்காலங்களில் நான்கு வகை இசைக்கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அவை..
(1)நரம்புக் கருவிகள்
 உதாரணம்-யாழ்,தம்புரா,வீணை,வயலின்,கோட்டு வாத்தியம் முதலியன.,(2)தோல் கருவிகள் 
உதாரணம் - பறை,தவில்,மிருதங்கம்,கஞ்சிரா,உடுக்கை முதலியன,
(3)துளைக் கருவிகள்
 உதாரணம் - நாதசுரம்,புல்லாங்குழல்,கிளாரிநெட் முதலியன,
(4)கன கருவிகள் 
உதாரணம்- ஜால்ரா எனப்படும் பாண்டில்(தாளம்),சேமக்கலம், முதலியனவாகும்.

  என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (4) இசையின் அடிப்படை  
என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...