12 மார்ச் 2019

DRIVER CHESS சதுரங்கம் விளையாட தெரியுமா?

அன்புடையீர்,
            இலவசமாக சதுரங்க விளையாட்டு பயிற்சி  வகுப்பு  ........
(2019 மே மாதம் ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்காக இலவசமாக சதுரங்கப் பயிற்சியளித்ததன் அனுபவமே இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.)
              - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
             சதுரங்கப் பயிற்சி இலவசமாக நடத்த அறிவித்ததால் என்னை நோக்கி வந்த கேள்வி...
            (1) செஸ் சொல்லித்தர யார் வருகிறார்கள்? கிராண்ட் மாஸ்டரா?ஆர்பிட் வீரரா?சாம்பியனா? செஸ் விளையாட்டு மெட்ரிக் போன்ற வசதியுள்ள பள்ளிகளில்தானே பயிற்சியளிக்க முடியும்! உன்னால் முடியுமா?என்று பலரும் அவரவரின் எண்ணங்களுக்கேற்ப கேள்வி கேட்டவண்ணம் உள்ளார்கள்!.அவர்களுக்கு
என்னுடைய பதில்....
  செஸ் விளையாட அறிவு ஒன்றே போதும்..
சாதனையாளர்கள் யாருமே பிறப்பதில்லை.,உருவாக்கப்படுகிறார்கள்..
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் விஸ்வநாதன் அவர்கள் தன் சொந்த முயற்சியால் பயிற்சி எடுத்து சாதனை புரிந்தவர்.அதாவது,'தானாக முளைத்த வேப்ப மரம்!'..
 செஸ் விளையாட அடிப்படை என்னவென்றால்!
கம்ப்யூட்டர் கையாள கீபோர்டு பயன்பாடு அவசியமாக தெரிந்திருப்பதைப்போல, செஸ் விளையாட அடிப்படையான செஸ்மொழி அறிந்திருத்தலும் சுயமாக சிந்தித்து விளையாடும் வழிகாட்டுதலும் தேவை....

                             தலையும் புரியாமல்,வாலும் புரியாமல் செஸ் விளையாடினால் அலுப்பு தட்டும்.வெறுப்பினை ஏற்படுத்தும்.அதுவே முறையாக, கட்டங்களில் முழுப் பயிற்சியளித்து, செஸ் குறியீடுகளைக் கற்பித்து,காய்களின் திறன் மற்றும் நகரும் போக்கு உள்ளிட்ட விதிகளைக் கற்பித்தால் ,யாவரும் மூளை செயல்பாட்டால்,அறிவை உபயோகித்து,சிந்தித்து,திட்டமிட்டு,தந்திரங்களைக் கையாண்டு,வியூகம் அமைத்து ஆர்வமாக விளையாடலாம்.இந்த அடிப்படைத்  தகவல்களை சொல்லிக்கொடுத்தாலே மனதில் வைத்து தன் திறமைகளை கையாண்டு சுயமாக சிந்தித்து ஆர்வத்துடன் விளையாடுவர்.
  1980ஆம் ஆண்டுவரை இந்தியாவில் ஒருவராவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற மாட்டார்களா? என ஏங்கியகாலங்களில் தானாக முளைத்த வேப்பமரமாக,நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறையில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் சென்னையில் படிக்கும்போது ஆர்வத்தினால் தானே பயிற்சிசெய்து 1988 ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக பட்டம் பெற்ற வரலாறு  படித்து பாருங்க!..
  நடுத்தர குடும்பத்தில் பிறந்த சென்னை மாணவர் பிரக்ஞாநந்தா 2018ஆம் ஆண்டில் இத்தாலியின் மோரோனி லைகா ஜூனியருடன் மோதி வெற்றிபெற்றபின்பு  நெதர்லாந்தின் ரோலண்ட்(2514 புள்ளி) மோதி வெற்றிபெற்று (12வருடம் 10மாதம்13நாள்) இளம் வயது  கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும், உலகளவின் 2வது இளம்வீரர் என்ற சாதனை படைத்தார்.அவருடைய வரலாறும் படித்துப் பாருங்க!!..
  இந்த ஆண்டு நம்ம ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசை சேர்ந்த ப.இனியன் என்ற (16வயது) மாணவன் 'ஒளிரும் ஈரோடு' என்னும் தன்னார்வ அமைப்பின் உதவியால்  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச செஸ்போட்டியில் பங்கேற்று 2513 புள்ளிகள் பெற்று இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இந்தியாவின் 61கிராண்ட் மாஸ்டர்களில் தமிழ்நாடு19க்கும் அதிகமான கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி முதலிடத்திலும்,மேற்குவங்கம் 8 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஆக...அடிப்படை பயிற்சிகளை முறையாக கொடுத்தாலே ஆர்வமுள்ள அனைவரும் விளையாட கற்றுக்கொண்டு சுயமாக சிந்தித்து ஆர்வமுடன் விளையாடுவர்.வெற்றியும் பெறுவர்..
   என நம்பிக்கையுடன்,
   C. பரமேஸ்வரன்,
  விதைகள் வாசகர் வட்டம்,
 சத்தியமங்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...