17 டிசம்பர் 2018

வாழ்க்கை ஒரு வரம்💥


வாழ்க்கையே ஒரு வரமாகும்
வரமாக வந்த அந்த வாழ்க்கையை
வளமான வழிகளில்
வாழ்ந்து பார்த்திடுவோம்
வாருங்களேன்!

நமக்குள்ளே மண்டிக் கிடக்கும்
கவலை என்ற களைகளை
கவனமாய் களையெடுத்து!
உயர்ந்த சிந்தனைகளால்
உள்ளமதை உழவு செய்து....
நேர்த்தியுடனே விதை பாவி
நம்பிக்கை என்ற உரம் தூவி!
முளைத்து நிற்கும்
நம் லட்சியப் பயிர்கள்
தழைத்து தினம்
உயிர் வாழ்ந்திட....
சளைக்காமலே
உழைத்திடுவோம்
சிறப்பான மகசூல் பெற்று
பகையாளிக்கும் பந்தி வைத்திடுவோம்!
 Kavi Rasigan





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...