14 ஆகஸ்ட் 2018

CHESS TOURNMENT @ THALAVADI -2018

தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப் - முதலாம் ஆண்டு செஸ்போட்டி. 
மரியாதைக்குரிய சான்றோர்களே,
 வணக்கம்.
        இன்று காலை  (14-08-2018 செவ்வாய்க்கிழமை)  சத்தியமங்கலத்திலிருந்து 7 மணிக்கு புறப்பட்டு தாளவாடிக்கு காலை 9மணிக்கு சென்றடைந்தேன். பிறகு திரு.N.பிரபு அவர்களுடன் இருசக்கரவாகனத்தில் தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகளுக்கும் பயணித்தோம்.செஸ்போட்டி நடத்தும் பொறுப்பேற்றுள்ள KCT மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சென்றோம்.சிறப்பான உபசரிப்பினை ஏற்றுக்கொண்டு சிற்றுண்டி முடித்துவிட்டு 17-08-2018, THALAVADI TALUK CHAMPIONSHIP முதலாம் ஆண்டு செஸ் போட்டிக்கான மாணவர்களின் விபரங்களை அனைத்து பள்ளிகளிலும் சேகரித்தோம்.தாளவாடி வட்டார பழங்கால எழுத்தாளர்கள் மற்றும் சமகால எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்தோம்.
(1)J.S.S.MATRIC SCHOOL,
(2)KCT MATRIC SCHOOL,
(3)MARIADEEPTHI MATRIC SCHOOL,
(4)DONBOSCO MAT.Hr.Sec.School,
(5)அரசு உயர்நிலைப்பள்ளி திகினாரை,
(6)புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி திகினாரை,

(7)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி,
(8)அரசு மேல்நிலைப் பள்ளி பனகஹள்ளி,
(9)அரசு உயர்நிலைப் பள்ளி குன்னன்புரம்(கெட்டவாடி),
(10)அரசு மேல்நிலைப் பள்ளி தாளவாடி,
(11)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காஜனூர்,

(12)புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி சூசைபுரம்,
(13)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பாரதிபுரம்,
(14)அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி-மல்லன்குழி -
என பெரும்பாலான பள்ளிகளுக்கு சென்று 

                       மாணவ,மாணவியர்களின் பெயர்விபரங்களைப்பெற்றுக் கொண்டு அனைத்தையும் தொகுத்து திரு.T.V.ஆனந்தநாராயணன் வசம் ஒப்படைத்துவிட்டு,திரு K.பெருமாள் , வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சந்தித்து அய்யா அவர்களிடமும் அனுமதி பெற்றோம்.பிறகு தாளவாடி வட்டார கல்வி அலுவலகம் சென்றோம்,அதிகாரிகள் பள்ளி ஆய்வுக்காக வெளியில் சென்றுவிட்டதால் அலுவலகத்தில் புத்தகக்கண்காட்சி நோட்டீஸ்களை வைத்தோம்.பிறகு அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலகம் சென்றோம் .மேற்பார்வையாளர் அவர்கள் அலுவல் வேலையாக ஈரோடு சென்றுவிட்டதாக தகவலறிந்து அங்கிருந்த ஆசிரியப்பெருமக்களிடம் புத்தகக்கண்காட்சி பற்றிய விபரத்தினை கூறிவிட்டு அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு சென்று நோட்டீஸ்களையும் கொடுத்தோம்.பிறகு மதிய உணவுக்காக தாளவாடி ஜெயராஜ் அவர்கள் ஓட்டலில் இருவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு! சாப்பிட்டதற்கான தொகையினை கொடுத்தபோது? ஏற்கனவே
 CID POLICE திரு.கந்தவேல் அய்யா  
         அவர்கள் எங்களுக்கான தொகையினை கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக அறிந்து அப்படியே அதிர்ச்சியடைந்தோம்.உடனே பிரபுவிடம் சொல்லி காவலர் கந்தவேல் அய்யா அவர்களுக்கு போன் செய்யக் கூறினேன்.பிரபு அவர்களும் போனில் தொடர்பு கொண்டபோது தாளவாடி வட்டார மக்களுக்காக உழைக்கும் உங்களுக்கு தன்னால் ஆன சிறு உதவி என்று பதிலுரைத்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.கிடைத்ததை ஏற்றுக்கொள்வோம் என சமாதானமடைந்துவிட்டு, தாளவாடி வணிகர் சங்க தலைவர் திரு.G.R.வெங்கடேஷ் அய்யா அவர்களை சந்தித்தோம்.பல பயனுள்ள தகவல்களை பரிமாற்றம் செய்துகொண்ட திருப்தியோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளைக்கு சென்று கிளை மேலாளர் அவர்களை சந்தித்து புத்தகக்கண்காட்சிக்கு அழைப்பு விடுத்தோம்.பின்னர் தொன்போஸ்கோ இல்லம் சென்றோம்.அங்கு அருட்தந்தை அவர்களை சந்தித்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு,உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு இடம் கேட்டு அனுமதி பெற்றோம்.இரண்டு அரசு பள்ளிகளில் நாளைய சுதந்திர தினத்திற்கு சிறப்பு விருந்தினராக எனக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றேன்.எனது பணிச்சூழல் காரணமாக நாளைய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க இயலாது! என்பதை பணிவோடு தெரிவித்துவிட்டு நாளை தாளவாடி சென்று பணிக்கு செல்லவேண்டும் என மன அமைதி அடைந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...