03 அக்டோபர் 2015

நாட்டாமை உங்க தீர்ப்பை சொல்லுங்க!.......2015

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.இணையத்தில் தமிழ் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற போட்டிகளையும் அறிவித்து,கரும்பு தின்னக்கூலி கொடுப்பதைப்போல! அதற்கு வெகுமதியாக பணமுடிப்பும் கொடுக்குறாங்க!.தீர்ப்புச்சொல்ல தகுதி உங்களுக்கு இணையதளத்தில் தமிழ் வாசிக்கத்தெரிந்தால் மட்டுமே போதுமுங்க,அதனால் வாங்க! வாங்க! நீங்க வாங்க!! மேலும் விவரங்கள் அறிய உடனே போங்க http://bloggersmeet2015.blogspot.com/ வலைத் தளத்திற்குத்தாங்க.......நான்கூட மூன்று கட்டுரைகளை எழுதி அனுப்பி இருக்கிறேங்க................

உங்களுக்கு வலைப்பக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை இணையத்தில் வாசிக்க மட்டும் தெரிந்தாலே! போதும்..நீங்களும் நாட்டாமைதாங்க!.

செய்ய வேண்டியது என்ன?
http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு!
விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)
நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 
போட்டிக்கான விதிமுறைகள் –
(1) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம் கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்திலர் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப் படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்
(2)     ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ( ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை , (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை  இதே வரிசையில் தெரிவித்து     பதினைந்து பரிசுக்கும் ( 5x3=15)  தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது.  இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.
(3)     ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.
(4)     வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.
   (5) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம். 
(6)     இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.
(7)     விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.
(8)     வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.
(9)     மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.
(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.
---------------------------------------------------------
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
இதனைப் பார்க்கும் நமது வலைப்பதிவர்கள், குறிப்பாகப் போட்டியாளர்கள் அனைவரும் மற்றும் நண்பர்களும் 
தத்தம் வலைப்பக்கங்களில் இதனைப் பகிர்ந்தும் தொடர்புள்ள செய்தித்தாள் ஊடகங்களில் வெளியிடச் செய்தும் பலரும் இப்போட்டியில் பங்கேற்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
--விழாக்குழு--

8 கருத்துகள்:

  1. மரியாதைக்குரிய D D ஐயா,
    வணக்கம். புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா-2015க்காக தங்களது இடைவிடா இரு மாத பங்களிப்புக்கு இது தூசிதாங்க..வாழ்த்தி வணங்கும் அன்பன்,C பரமேஸ்வரன், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்638402

    பதிலளிநீக்கு
  2. நன்றி அய்யா


    நேரமிருப்பின் என்னுடைய இதர இரு கட்டூரைக்கும் தங்களின் கருத்தை தாருங்கள்! ஏனென்றால் இந்தஇந்த வலைபூவுக்கே புதியவன! தவறுயிருந்தால் வருங்காலங்களில் திருத்திக்கொள்வேன்!

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா கரூர் பூபகீதன் அவர்களே,
      வணக்கம். தமிழ் இணைய வளர்ச்சிக்காக திருமிகு. திண்டுக்கல் தனபாலன் ஐயா ,திருமிகு.தமிழ்வாசி பிரகாஷ் ஐயா,போன்ற சான்றோர்கள் இருக்கும்போது தங்களுக்கு எதுக்குங்க தயக்கமும்,தடுமாற்றமும் வருகிறது.?.சாதாரண ஓட்டுநர் பணி புரியும் நானே இந்தளவு முன்னேற்றம் காண காரணமே தமிழ் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஜாம்பவான்களின் வலைத்தளங்களை பின்பற்றுங்க.அதுவே போதுமானது.தங்களுக்கு என்ன சந்தேகம் இருப்பினும் என்னைக்கேளுங்க.என்ன்றிவுக்கு எட்டியவரை வழிகாட்டுவதும், மின் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும் சான்றோர்களை அடையாளப்படுத்துவதும் எனது தமிழ்ச் சமூகக் கடமைங்க.என அன்பன்,C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம்638402

      நீக்கு
  3. ஆஹா அருமையாக சொல்லியுள்ளீர்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நன்றிங்க,
      மரியாதைக்குரிய அம்மையீர்,
      வணக்கம். தங்களது கருத்துரைக்கு எங்க கொங்கு மண் சார்பாக நன்றிங்க..என அன்புடன்,
      C.பரமேஸ்வரன்,
      சத்தியமங்கலம்,
      ஈரோடு மாவட்டம் 638402

      நீக்கு
  4. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே,
      வணக்கம். தங்களது தகவலுக்கு நன்றிங்க.

      நீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...