20 ஆகஸ்ட் 2015

PAYMENT BANK - சம்பள வங்கி பற்றி தெரிந்து கொள்ளுங்க...

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். PAYMENT BANK என்னும் சம்பள வங்கி பற்றி தெரிந்து கொள்வோம்.

(1) PAYMENT BANK பேமெண்ட் வங்கிகள் என்றால் என்ன? பயன்கள் என்ன?

          ஆதித்ய பிர்லா, ஏர்டெல். ரிலையன்ஸ்,  வோடஃபோன்,  உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வங்கிகள் செயல்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற அளவில் வங்கி சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(2) PAYMENT BANK  பேமெண்ட் வங்கி எப்படி செயல்படும்?
              பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ( ஆரம்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை) டெபாசிட்டுகளை பெறலாம். மேலும் இண்டர்நெட் பேங்கிங், பண பரிமாற்ற வசதி, இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளை அளிக்கலாம்.


(3) PAYMENT பேமெண்ட்வங்கியின் நோக்கம் என்ன?
            பேமெண்ட் வங்கி அமைக்கப்படுவதினால் நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேலும் அதிகமாகும். குறிப்பாக சேமிப்பு கணக்குகள், பேமண்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் ( remittance ) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்பு சாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கிடைக்கும்.


(4) DEBIT & CREDIT டெபிட்/கிரெடிட் கார்டு கிடைக்குமா?
            கிரெடிட் கார்டு கிடைக்காது. ஆனால் பேமெண்ட் வங்கிகள் ஏடிஎம்./டெபிட் கார்டுகளை வழங்கும்.


(5) BANKING &PAYMENT பேங்கிங் முறைக்கு பேமண்ட் வங்கிகளின் பங்களிப்பு என்ன?
                   வழக்கமான வங்கிகளுக்கு மேலும் அதிகமான நிதி வருவதையும், கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கவும் இதுபோன்ற பேமண்ட் வங்கிகள் உதவும். மேலும் தற்போது பேமெண்ட் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள், நாடு முழுவதும் உள்ள 1,54,000 தபால் அலுவலகங்களும் ( 1,30,000 கிராமப்புற தபால் அலுவலகங்கள் உட்பட) மக்களுக்கு வங்கி சேவைகள் அளிக்க வகை செய்யும்.


(6)NRI  என்ஆர்ஐ கணக்கு தொடங்க முடியுமா?
          இந்த பேமெண்ட் வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இதில் கணக்கு தொடங்க முடியாது.


(7) LOAN லோன் கிடைக்குமா?
          இந்த பேமெண்ட் வங்கிகள் கடன் வழங்குதல் போன்ற சேவைகள் எதிலும் ஈடுபட ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.எனவே லோன் பெற நினைப்பவர்கள் வழக்கமான வங்கிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.


(8) COMPLAINT குறை தீர்க்கும் அமைப்பு உண்டா?
           நிச்சயம் உண்டு. பேமெண்ட் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க உயரதிகாரம் கொண்ட வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு அமைப்பு செயல்படும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரத்தை ஒட்டி இந்த வங்கியின் செயல்பாடுகள் அமைய உறுதி செய்யப்படுவதோடு, பேமண்ட் வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் வலையமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

          முன்னதாக நேற்று தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டது.
சன்பார்பா தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி, ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.

      இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
                18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும்.
                    இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. 
                 அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
விகடன் செய்திகள் - 20.08.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...