04 ஆகஸ்ட் 2013

திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை என்றும் மறவோம்!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                        2013 ஆகஸ்டு 03-ந்தேதி முதல் நம்ம ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
   


                மரியாதைக்குரிய ஐயா'' ஸ்டாலின் குணசேகரன்'' அவர்களை இவ்வுலகம் உள்ளவரை ஈரோடு மாநகர மக்கள் மட்டும்-இல்லைங்க!., நம்ம ஈரோடு மாவட்ட மக்களே மறக்கக்கூடாதுங்க! 
     (தவறி மறந்தால் அதைவிடக்கேவலம் இவ்வுலகில் இல்லை)
           புத்தகத்திருவிழா! என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவது சாதாரண விசயம் இல்லைங்க!.அதிலும் 2005 முதல் வருடந்தோறும் எத்தனை சிக்கல்களை,சவால்களை,இடையூறுகளை,இன்னல்களை,எதிர்கொண்டு இருநூற்றைம்பது கடைகளை அறிவுப்பெட்டகமாம், புத்தக்ககளஞ்சியங்களைக் கொண்டு வந்து இந்த அற்புத திருவிழாவை நடத்தி வருகிறார் என்பதை சற்றேனும் சிந்தித்துப்பாருங்கள்.
                                 நமக்காக,நமது மக்களுக்காக,மாணவர்களுக்காக,இளைஞர்களுக்காக,இல்லத்தரசிகளுக்காக,பாமர மக்களுக்காக,தமிழர்களுக்காக,என்ற சமூக நோக்கில் எத்தனை துயரங்களை சந்தித்துக்கொண்டு,சகித்துக்கொண்டு இந்த அத்தியாவசிய நிகழ்வை நடத்தி வருகிறார்.மேலும் தமிழமெங்கும் வாசகர் வட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.


         நமக்காக இல்லையாகினும் நமது சந்ததியினருக்காகவாவது  நாமும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்குவோம். அல்லது ஒருமுறை நம்ம குடும்பத்தோடு சென்று கண்டு களிப்போம். மதிப்பிற்குரிய ஸ்டாலின் குண சேகரன் ஐயா  அவர்களது அயராத உழைப்பைப் போற்றுவோம்.
                     புத்தகத்திருவிழாவில் குவிந்துள்ள புத்தகப்புதையல் பற்றி ஊரெங்கும் பரப்புரை செய்வோம்.வாங்க!
                                                               என சமூக அக்கறையுடன்,
                                                                      பரமேஸ்வரன்.C, 
                                                                                 ஓட்டுனர், 
                                                                    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், 
                                                                             தாளவாடி கிளை.
 -                                                                         ஈரோடு மண்டலம்.
                                                                        கோயமுத்தூர் கோட்டம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...