09 பிப்ரவரி 2011

அரசு சாரா நிறுவனம் -N.G.O.

                அரசு சாரா நிறுவனம்.-  N.G.O-என்றால் என்ன?
  
      ரசு சாரா அமைப்பு என்பது தனியாரால் அல்லது அரசு பங்களிப்போ,அரசு சார்ந்தோ இல்லாத நிறுவனங்களினால் சட்டப்படி உருவாக்குகிற அமைப்பு ஆகும்.
   
         ந்த அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திடம் முழுமையாகவோ,அல்லது பகுதியாகவோ நிதியுதவி பெற்றும் செயல்படுகின்றன.ஆனால் அரசுக்கு தமது அமைப்பில் எவ்விதமான  உறுப்பினர் உரிமையையும்  கொடுக்காமல்  தங்களது அரசு சார்பின்மையைக் காத்துக்கொள்கின்றன.
 
         ரசு சாரா அமைப்புகளானது இன்றைய சமூகப் பார்வையில் பல விதமாக,தவறாக விமர்சிக்கப்படுகின்றன.அதன் காரணங்களால் முடங்கியும் போய் விடுகின்றன.
          
           தற்கு   காரணங்கள்                                                                                                      
   
           (1) ரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ,அல்லது

         (2)திட்டத்தில் அதிக உதவி செய்து முன்னணிப் பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ  அந்தத் திட்டத்தைத் தன்னோடு தொடர்பு படுத்தி ஒட்டுமொத்தப் பெயரினையும் அதாவது பெருமைகளை தானே எடுத்துக்கொள்வது,அல்லது முயற்சி செய்வது.மேலும்,                                                                                                       

      (3) க்கமுடன் தன்னார்வத்தொண்டுப் பணியாற்ற வரும் புதியவர்களைப் புறக்கணிப்பது.                                                                                                                              

     (4) மிகவும் முக்கியமான திட்டங்களை வகுத்து அதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஆர்வம் மற்றும் சில காரணங்களால் அந்த செயல்பாட்டை இன்னொரு திட்டத்திற்கு பங்களித்து ,நமது பங்களிப்பைச் சிதறச் செய்து எந்தத்திட்டமும் முழுமையடையாமல் (இயலாமல்) நின்று போவது.                                                                                                                  

    (5) முக்கியமில்லாத திட்டங்களில் பங்களிப்பது ,                                                             

    (6 ) ரசு அல்லது பிற நிதிகளைத் தனது சுய நலனுக்காக எடுத்துக்கொள்வது.அல்லது முறைகேடாகப் பயன்படுத்துவது.
    
            போன்ற காரணங்களால் சமூகத்திடம் தவறான விமர்சனத்திற்கு  ஆளாக நேரிடுகிறது. எனவே,
             
        ன்னுடைய ஆக்கங்களைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும்.அப்போதுதான்,
           
        எந்த ஊதியமும் பெறாமல் உழைப்பு, திறமை,அறிவு போன்றவற்றைக் கொடுக்க முன் வருபவர்களை ஈர்த்துக்கொள்ள முடியும்
           
      .இந்த அமைப்பும் விரிவடையும்.அதன் காரணமாக,                                             
          இந்த சமூக முன்னேற்றத்திற்காக,நாட்டின் வளர்ச்சிக்காக அதிக சேவைகளைச் செய்ய முடியும்.
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...