17 டிசம்பர் 2018

வாழ்க்கை ஒரு வரம்💥


வாழ்க்கையே ஒரு வரமாகும்
வரமாக வந்த அந்த வாழ்க்கையை
வளமான வழிகளில்
வாழ்ந்து பார்த்திடுவோம்
வாருங்களேன்!

நமக்குள்ளே மண்டிக் கிடக்கும்
கவலை என்ற களைகளை
கவனமாய் களையெடுத்து!
உயர்ந்த சிந்தனைகளால்
உள்ளமதை உழவு செய்து....
நேர்த்தியுடனே விதை பாவி
நம்பிக்கை என்ற உரம் தூவி!
முளைத்து நிற்கும்
நம் லட்சியப் பயிர்கள்
தழைத்து தினம்
உயிர் வாழ்ந்திட....
சளைக்காமலே
உழைத்திடுவோம்
சிறப்பான மகசூல் பெற்று
பகையாளிக்கும் பந்தி வைத்திடுவோம்!
 Kavi Rasigan





ஓய்வூதியம் என்பது பிடிபணத்தை தருவது!



ஓய்வூதியம் ஒரு கருணைச் செயலாகப் பார்க்கப்படுகிறது. 1977ல் தாராள ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஆனால், 1979 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குத்தான் அது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.எஸ். நகரா என்பவர் வழக்குத் தொடுத்தார். 1982ல் உச்சநீதிமன்றம், “ஓய்வூதியம் என்பது அரசாங்கத்தால் கருணையோடு அளிக்கப்படுகிற பிச்சையல்ல. மாறாக வியர்வை சிந்தி உழைத்த உழைப்பிற்குக் கொடுபடாமல் நிறுத்திவைக்கப்பட்ட ஊதியமேயாகும்,” என்று தீர்ப்பளித்தது. அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு எழுதப்பட்ட டிசம்பர் 17 நாடு முழுவதும் ஓய்வூதியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நான் ஒன்றும் அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவனல்ல. ஆனால் இதை ஏன் இங்கே பதிவிடுகிறேன்?
இன்று காலை 10.30 மணிக்கு, திருவள்ளூர் கோட்டாட்சியர் வளாகத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஓய்வூதியர்களுடன், “ஓய்ந்துகிடப்பதல்ல ஓய்வு” என்ற தலைப்பில் உரையாடுகிறேன். என்னோடு சேர்ந்து அவர்களும் உள்ளூர் நண்பர்களை வரவேற்கிறார்கள்.

ஒரு தாயின் புலம்பல் கவிதை,,,,,,,,,,,,


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குடும்ப உறவை பேணி காப்பது நமது தலையாய கடமை!
இது  நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!
நமது தாய், தந்தையை பேணி காப்பது நமது தலையாய கடமை,
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேணி காப்போம்.
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.

ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை..
எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே.....
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம்
வரும்போது - இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????

கணிதம் தொடர்பான சந்தேகம் எதுவானாலும் கேளுங்க!

கணிதம் தொடர்பான சந்தேகம் எதுவானாலும் கேளுங்க!
  Maths Hero
16 டிசம்பர், பிற்பகல் 2:02
வணக்கம் நண்பர்களே..
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியா லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து இணைந்து கொள்ளலாம் கணிதம் தொடர்பான சந்தேகங்களை மட்டும் பகிரவும்
நன்றி
மேலும் தகவலுக்கு
9566954702

மதுரை
https://chat.whatsapp.com/IDd2dMZOV3N94P6UB9O0BT
ராமநாதபுரம்
https://chat.whatsapp.com/KdBsQG3pRo14Vdv26jG8vn
திருவண்ணாமலை
https://chat.whatsapp.com/B5W5C7m6NuI8MYerXoCOmR
பெரம்பலூர்
https://chat.whatsapp.com/GUn3TFSB5Qr22IqIyQEhwe
கரூர்
https://chat.whatsapp.com/Gaz1tagaBZBEPVzKGv15da
திருவள்ளூர்
https://chat.whatsapp.com/Kb02P6W5EpA2EYaPZJZ96Z
காஞ்சிபுரம்
https://chat.whatsapp.com/FQFQN3A19aBDtFooGvSl3q
சேலம்
https://chat.whatsapp.com/BaLvXg7vyNjKJW7c5oBPCj
தஞ்சாவூர்
https://chat.whatsapp.com/GKm3jO3VeEUHIRhQ9Zwipq
சென்னை
https://chat.whatsapp.com/E7obVfotly9LDSVVx02FDc
நாமக்கல்
https://chat.whatsapp.com/FZ87dngZyyL5lFN7oL67EB
திருச்சி
https://chat.whatsapp.com/DZAAWX1rwNxIrXhisuqPKJ
கடலூர்
https://chat.whatsapp.com/Dguey98fAnTAla0rWnxUKy
தர்மபுரி
https://chat.whatsapp.com/DMOqq2s5vjm1SpvyuauCen
விழுப்புரம்
https://chat.whatsapp.com/DaocxiBsHEi90GNX362bRO
கோவை
https://chat.whatsapp.com/LvUOMpPzfdt4nmkIgvvLUT
ஈரோடு
https://chat.whatsapp.com/EluUS3JtLtcClwbXEHleW5
திருநெல்வேலி
https://chat.whatsapp.com/DH3XGBMG4jYF8GPUU4Ief3
நாகை
https://chat.whatsapp.com/DB5DQxWTC6eAqmjz7029I0
திருப்பூர்
https://chat.whatsapp.com/CbFfbxs1ZnwBhIh04aIRou
அரியலூர்
https://chat.whatsapp.com/G8YkAr6RmPJFFe0ebrgtqY
கிருஷ்ணகிரி
https://chat.whatsapp.com/D2Lm84Gt7pjJpGD31TG1Xu
தேனி
https://chat.whatsapp.com/L1c5XMa01UnIxT9TINRXFS
திண்டுக்கல்
https://chat.whatsapp.com/DNEkMJ9NblFB9NxoPji0Kj

8595959595 சென்னைக்கு போனா கேளுங்க!

 8595959595 எண்ணுக்கு போன் செய்து நீங்க செல்லவேண்டிய இடத்தைக் கூறுங்க! அதற்கான வழித்தடம் மற்றும் ரயில்,பஸ்,என தேவையான வாகனம்பற்றியவிபரமும் கூடவே நேரத்தையும் சொல்லுவாங்க!!
மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.
                                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நீங்க சென்னைக்கு புதியவரா?சென்னைக்கு சென்று வழிதெரியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே வழித்தடம் வழிகாட்டும் அலைபேசி எண் 8595959595 காத்துக்கிட்டு இருக்குது.

"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.
கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?
பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?''
இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது *'ரூட்ஸ்’*. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,
''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.
அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?
அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.
ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.
அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
*Cell No., -> 86 95 95 95 95*
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.
அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
நல்ல தொடக்கம்!
                   தகவல்
                 திரு.நாகூர்கனி காதர் மைதீன் பாஷா அவர்கள்...

16 டிசம்பர் 2018

ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அவர்கள் கவனிப்பாரா?...

மலையைத் தோண்டி எலி பிடிக்கும் கதையாக!
                                            நன்றி! நன்றி!! நன்றி!!!
     ஈரோடு மாவட்ட கர்ப்பிணிகளின் துயரைப்போக்க உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து தற்போது மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அம்மையார் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.               



            பெருந்துறை வட்டார கிராம மக்களை அவதிக்குள்ளாக்கும் அவலநிலையை போக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா??

                                      இந்தியாவில் உள்ள 23,109 Primary Health Centre  என்னும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம்,பெருந்துறை,விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிற கிராம சுகாதார செவிலியர் மலர்விழி VHN(மொபைல் எண் 9442525385) நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று சேவை வழங்க கடமைப்பட்டுள்ள மலர்விழி VHN ,இருபத்திநான்கு மணி நேரமும் சேவையாற்ற தயாராக இருக்கவேண்டிய கடமையுள்ள மலர்விழி VHN கர்ப்ப பதிவு எண் பெற்று அனுப்பிய RCH ID  என்னும்  Reproductive and Child Health  எண்ணை அதற்கான அடையாளஅட்டையில் எழுதித்தருவதைக்கூட செய்யாமல்  ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பதன் காரணமாக ஒருமாதமாக அங்குமிங்கும் அலையவைத்து  சுகாதார செவிலியர் பணியின் புனிதத்தன்மைக்கே களங்கம் ஏற்படுத்தி வருகிறார். பலமுறைவாடகைக்கார் எடுத்து  நேரில் சந்திக்க சென்றும் அவரது 9442525385 வாட்ஸ் அப் எண்ணுக்கு போன் செய்தும் பணிக்கே வராமல் (வீட்டில் இருந்துகொண்டே ) அவசரவேலையில் இருப்பதாகவே கூறி வருகிறார். கர்ப்பிணி நோயாளிகளின் இருப்பிடம் செல்லாமல் தான் இருக்கிற இடம் தேடி வந்து சிகிச்சைபெற வேண்டும் என்றும் கூறிவருகிற செவிலியரான மலர்விழி VHNபோன் எண் 9442525385....
இதனால் பொது மக்கள் மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்களாம்.குறிப்பாக கர்ப்பிணிகள் மிகவும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்களாம்..
        நான்பட்ட துன்பத்தை படியுங்க!..  எனது மகளின் கர்ப்பத்தினை பதிவு செய்து ஆன்லைனில் பதிவெண் பெறப்பட்டு மேற்படியான செவிலியர் மலர்விழி கிராம சுகாதார செவிலியர் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியே அனுப்பியும் அலைபேசியில் கூறியும் உள்ள நிலையில் அதற்கான அதாவது RCH ID அடையாள அட்டையை வழங்காமல் போன் செய்த போதெல்லாம் திங்கட்கிழமை நான் இருக்கிற இடத்துக்கு வா என்றும்,சனிக்கிழமை நான் இருக்கும் இடம் சொல்கிறேன் அங்கு வந்து வாங்கிச்செல் என்றும் கூறிவிட்டு மீண்டும்,மீண்டும் போனில் கேட்டால் இன்றைக்கு அவசரவேலை இருக்கிறது பிறகு பார்ப்போம் என்றும் ஆணவமாக பதிலளிப்பதோடு அலைக்கழிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்.போதாக்குறைக்கு நர்ஸ் என்று கூப்பிடக்கூடாதாம்! சிஸ்டர் என்றுதான் கூப்பிட வேண்டுமாம்!என்றும் கண்டிசன் போடும்  மலர்விழி VHN 9442525385.செவிலியரிடம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி கடந்த 15-12-2018 ஆம் தேதிசனிக்கிழமைவரை ஒரு மாதமாக உரையாடியவற்றில் நான் பதிவு செய்த எட்டுஆடியோ உட்பட புகார் மனு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.அவற்றின் ஆதாரத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கடமைகளும்,பணிகளும் பற்றிய விபரத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக கேட்டுப்பெற்று அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் உள்ளோம் என்பது மட்டும் உணர முடிகிறது.ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து அதன் எண்ணை பதிவு செய்து அதனால் ஏழை தாய்மார்களுக்கு உதவிப்பணம் கிடைக்குமாம்.அவ்வாறு வங்கி கணக்கை பதிவு செய்ய ஒரு கர்ப்பிணிக்கு சூழலுக்கேற்ப இரண்டாயிரம்,மூவாயிரம் ரூபாய்வரை அன்பளிப்பாக கேட்பதாக தகவல்???மலர்விழி கண்காணிக்கும் பகுதியிலுள்ள கர்ப்பிண தாய்மார்களை விசாரித்துப்பாருங்க,அவர்களது வேதனையை  போக்க உதவுங்க.
இருபத்திநான்கு மணிநேரமும் மருத்துவசேவை புரியவேண்டிய செவிலியர்கள் பணியே செய்யாமல் அதிகாரத்தோரணையில் பேசியும் கடமை தவறியும் இருப்பதால்தாங்க இன்னும் கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

சத்தியமங்கலத்திலிருந்து பெருந்துறைக்கும்,விஜயமங்கலத்திற்கும்,திங்களூருக்கும்,பயணித்த வாடகைக்கார்...திங்களூர் ஆரம்ப சுகாதார மருத்துமனை முன்பாக நின்றபோது..
திங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..








06 நவம்பர் 2018

துளசி நாற்றுகள் வழங்கி,பசுமைத்தீபாவளி கொண்டாடப்பட்டது..


பசுமைத் தீபாவளி நம்ம சத்தியமங்கலத்தில் .........


மரியாதைக்குரியவர்களே,
            அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.கட்டணமில்லா தனியார் ஆம்புலன்ஸ் சேவையான RELIEF AMBULANCE SERVICE சார்பாக 6-11-2018இன்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் துளசியின் மருத்துவக்குணத்தை எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு துளசிநாற்றுகள் வழங்கப்பட்டன.அதன்விளக்கம் கீழே படியுங்க....












மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம்.மூலிகைகளின் ராணியான துளசிச்செடி இந்துக்களின் புனித செடியாகவும் வணங்கப்படுகிறது.சித்த மருத்துத்திலும்,ஆயுர்வேத மருத்துவத்திலும்,இயற்கை மருத்துவத்திலும்,நாட்டு மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றும் பலநோய்களை வராமல் பாதுகாக்கிறது.வந்த நோய்களை போக்குகிறது.
துளசிச்செடி விதை,வேர்,இலை,பூ, என சமூலமே மருத்துப்பயன்கொண்டது.துளசிவாசனையை நுகர்ந்தாலே நிறைய பயன்களைத் தருகிறது.நமது உடலின் பாதுகாப்புக் கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தும் ஆற்றல்மிக்கது.தினசரி20மணிநேரம் ஆக்சிஜனையும் 4மணிநேரம் ஓசோனையும் வெளியிடுகிறது அதிகாலை 2மணி முதல் 6மணிவரை ஓசோனை வெளியிடுகிறது..(பரமேஸ்வரன் டிரைவர் சத்தியமங்கலம்) நான்காயிரம் விதமான நோய்களைகுணமளிக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது.எனவே மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.சளி,இருமல்,ஆஸ்த்துமா,கல்லீரல் நோய்கள்,தொண்டைவலி,வயிற்றுவலி,சிறுநீரகக்கோளாறு,மார்புவலி,மலச்சிக்கல்  என பெரும்பாலான நோய்களை தனிமருந்தாகவோ,கூட்டுமருந்துப்பொருட்களில் சேர்ந்தோ போக்குகிறது.கிருமிநாசினியாகவும் விளங்குகிறது.பலநோய்களை வராமல் தடுக்கிறது.இந்துக்களின் கோயில்களில் துளசிஇலை சேர்க்கப்பட்ட தீர்த்தம் வழங்கப்படுகிறது.பெருமாள்கோயில்களில் துளசி இலைஇல்லாமல் வழிபாடே இல்லை.மகாவிஷ்ணுவாக போற்றி வணங்கப்படுகிறது.மகாலட்சுமியாக வணங்கப்படுகிறதுஆதலால் துளசியை தெய்வீக மூலிகையாகவும் போற்றப்படுகிறது.காயகற்ப மூலிகையாக போற்றப்படுகிறது. தினசரி 4இலைகள் காலையில் தின்றுவந்தால் உடல் ஆரோக்கியம்பெறும்.இதனாலேயே சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் ரிலீப் ஆம்புலன்ஸ் இலவச சேவை அமைப்பு  சார்பாக தீபாவளியன்று(06-11-2018) பொதுமக்களுக்கு ஆயிரம் துளசிச்செடிகளை வழங்கி துளசியின் பெருமையை போற்றியது.