17 டிசம்பர் 2018

ஓய்வூதியம் என்பது பிடிபணத்தை தருவது!



ஓய்வூதியம் ஒரு கருணைச் செயலாகப் பார்க்கப்படுகிறது. 1977ல் தாராள ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஆனால், 1979 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குத்தான் அது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.எஸ். நகரா என்பவர் வழக்குத் தொடுத்தார். 1982ல் உச்சநீதிமன்றம், “ஓய்வூதியம் என்பது அரசாங்கத்தால் கருணையோடு அளிக்கப்படுகிற பிச்சையல்ல. மாறாக வியர்வை சிந்தி உழைத்த உழைப்பிற்குக் கொடுபடாமல் நிறுத்திவைக்கப்பட்ட ஊதியமேயாகும்,” என்று தீர்ப்பளித்தது. அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு எழுதப்பட்ட டிசம்பர் 17 நாடு முழுவதும் ஓய்வூதியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நான் ஒன்றும் அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவனல்ல. ஆனால் இதை ஏன் இங்கே பதிவிடுகிறேன்?
இன்று காலை 10.30 மணிக்கு, திருவள்ளூர் கோட்டாட்சியர் வளாகத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஓய்வூதியர்களுடன், “ஓய்ந்துகிடப்பதல்ல ஓய்வு” என்ற தலைப்பில் உரையாடுகிறேன். என்னோடு சேர்ந்து அவர்களும் உள்ளூர் நண்பர்களை வரவேற்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...