23 ஜூலை 2018

தாளவாடி புத்தகக்கண்காட்சி-2018

          களப்பணிகள் ......இன்று
தாளவாடி சமூக ஆர்வலர்கள் நடத்தும்.....
2-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி ...மற்றும் 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்' மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான முதலாம் ஆண்டு செஸ்போட்டி!
மரியாதைக்குரியவர்களே,
வருகிற ஆகஸ்டு 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் தாளவாடியில் 2ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தாளவாடி சமூக ஆர்வலர்கள் சார்பாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 20ஆம் தேதி ஜூலைமாதம் வெள்ளிக்கிழமையன்று காலை 9மணிக்கு T.V.ஆனந்தநாராயணன் அவர்களுடன் ஸ்கூட்டரில்  புறப்பட்டு
திகினாரை அரசு உயர்நிலைப்பள்ளி,புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி,

கெட்டவாடி-குன்னன்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,(KGBV) கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டுஉறைவிடப் பள்ளி ,

பனகஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி,மரியதீப்தி மெட்ரிக் பள்ளி,

மல்லன்குழி அரசு மாதிரிப் பள்ளி,

சூசையபுரம் புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி,CCF என்னும் ஆஷாகேந்திரா குழந்தைகள் நல சேவை நிறுவனம்,

தாளவாடி-ராமாபுரம் கேசிடி மெட்ரிக் பள்ளி,பாரதிபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,

அரேப்பாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி ஆசிரியர் திரு.செந்தில்,
ஆசனூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி -
தலைமை ஆசிரியர்களை சந்தித்து புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான கருத்துப்பரிமாற்றம் செய்தோம்.

தொடர்ந்து.....

சமூக ஆர்வலர் திரு.வெங்கட்ராஜ் அவர்கள்(ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர்),தாளவாடி சமூக சேவை மையம் நிறுவனர்.

 திரு.R.மாதேஷ் அவர்கள்(ஊத்துக்குளி உதவி தொடக்க கல்வி அலுவலர்) ,

திரு.சிவா (சமூக ஆர்வலர்),USSS மெட்டல்வாடி

 திரு. முருகன் (சமூக ஆர்வலர்),தொட்டபுரம்

 திரு. ஏ.பி.ராஜூ (சமூக ஆர்வலர்),

திரு.சுஹைல் அகம்மது (சமூக ஆர்வலர்),

திரு.இனாயத்துல்லா பாய் (சமூக ஆர்வலர்),

திரு.மணி ,(சமூக ஆர்வலர்) விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

திரு.பிரபு (சமூக ஆர்வலர்) விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி,

திரு.கிறிஸ்டோபர் (சமூக ஆர்வலர்) ,CCFஆஷாகேந்திரா-சூயையபுரம்,

ஆகிய தாளவாடி சமூக ஆர்வலர்களை சந்தித்தோம்.

இனி....
                                   விரைவில்,READ என்றழைக்கப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்,   தாளவாடி வட்ட கல்வி அலுவலர்,  SSA சர்வ சிக்ச அபியான் மேற்பார்வையாளர்,  தாளவாடி வட்டாட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம்,அரசு நூலகர்,  காவல் ஆய்வாளர், ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடிகிளை மேலாளர், தமிழ்நாடு மின்சாரவாரியம் செயற்பொறியாளர்,  வனத்துறை ,  தீயணைப்புத்துறை,  அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  நெடுஞ்சாலைத்துறை, வங்கிகள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையம் உட்பட

    தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  ஜே.எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி மற்றும் ஜே.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி மையம்,   சிக்கள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி,    தலமலை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி,    தொட்டபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,    நெய்த்தாளபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி,    மெட்டலவாடி ஊ.ஒ.ந.நி.பள்ளி,    அருளவாடி ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஊ.ஒ.ந.நி.பள்ளி,கோட்டாடைஊ.ஒ.ந.நி.பள்ளி,சுஜில்கரைஊ.ஒ.ந.நி.பள்ளி மற்றும் கெத்தேசால்,கேர்மாளம்,கோட்டாமாளம் பகுதியிலுள்ள பள்ளிகள் என தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் சந்திக்க உள்ளோம்.ரோஸ் சேவை அமைப்பு, ஒய்ஸ்மென்கிளப் உட்பட தாளவாடி மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரையும் சந்தித்து ஒன்றிணைத்து மக்கள் நலனுக்காக,குறிப்பாக மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அறிவுசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள்அரசியல்,மதம்,சாதி,மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலப்பணியாற்ற எப்போதும் இணைந்துகொள்ள வருக! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
 என சமூக ஆர்வலர்கள் சார்பாக...............
(1) திரு. வெங்கட்ராஜூ, தாளவாடி சமூக சேவை மையம்
(2) T.V.ஆனந்தநாராயணன் - 9442437103
(3) மணி - 9865700800
(4)சுஹைல் முகம்மது -9442316608
(5)யேசுதாசன் (PALM2NGO)
(6)மரிய அருள் வியானி(ரோட்டரி கிளப் தாளவாடி)
(7)சிவா (USSS)மெட்டல்வாடி
(8) தாளவாடி கணேசன் செய்தியாளர் - 9047222642
(9)C.பரமேஸ்வரன் - 9585600733

20 ஜூலை 2018

தாளவாடியில் செஸ்போட்டி நடத்துவது எதற்காக?

தாளவாடியில் 2 ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியில்
பள்ளி மாணவர்களுக்கு THALAVADI PANCHAYAT UNION CHAMPIONSHIP -CHESS MATCHES
செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடத்துவது எதற்காக?


மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
        நம்ம தாளவாடியில் 2ஆம் ஆண்டாக புத்தகக்கண்காட்சி நடைபெற இருக்கும் இத்தருணத்தில் மாணவர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுகள் நடத்தலாமே! என ஆலோசனை வழங்கியவர்களுக்கு நன்றிங்க.


           ஒரு நிகழ்வை நடத்த பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.எனவே இயன்றளவு புத்தகக்கண்காட்சியையாவது தாளவாடியில் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு ஆண்டுதோறும் தவறாமல் நடத்த முயற்சியெடுத்து வருகிறோம்.இந்நிலையில்

                   செஸ் எனப்படும் சதுரங்கப்போட்டி மட்டும் நடத்துவது ஏன்?என்ற வினாவும் சிலரால் எழுப்பப்பட்டது.

    அதற்கான விளக்கமான பதிவு இது...
 

        சென்ற ஆண்டு கல்வி வளர்ச்சி நாளான 2017 ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி இருநாட்கள் 
              மதிப்பிற்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களது ஆதரவோடு    சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் 
 திரு .வியானி அவர்கள் தலைமையில் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு புத்தகத்திருவிழாவினை  ..திகினாரை அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜடேசாமி அய்யா அவர்கள் திறந்து வைத்து நடைபெற்ற அறிவுத்திருவிழாவிற்கு  

             தம் பள்ளிக்குழந்தைகளையும் இருபால் ஆசிரியர் பெருமக்களையும் அழைத்து வந்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியும் பேனர் உட்பட பல உதவிகளையும் செய்துகொடுத்து தானும் நேரில் பங்கேற்று ஊக்குவித்த

                   KCT MATRIC SCHOOL THALAVADI -PRINCIPAL திரு.சுரேஷ்குமார் அய்யா அவர்களது அறிவுரைப்படி ,
               தாளவாடி சமூக ஆர்வலர்கள் இந்த ஆண்டு நடத்தும் 2ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியினை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையைத்தூண்டும் செஸ் போட்டியினை

     தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளின் மாணவ,மாணவியருக்காக
 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்"  
என்ற பெயரில் சான்றிதழ் வழங்கும் அடிப்படையில் செஸ் போட்டி (THALAVADI PANCHAYAT UNION CHAMPIONSHIP - CHESS COMPETITION ) நடத்தப்படுகிறது.  
            செஸ் எனப்படும் சதுரங்கப்போட்டியினை KCT MATRIC பள்ளியே சமூக ஆர்வலர்கள் சார்பாக இந்த ஆண்டு போட்டியை  தம் சொந்த செலவில் நடத்திக்கொடுப்பதாக கூறியதின்பேரில் தாளவாடி சமூக ஆர்வலர்கள் ஆகிய நாம் KCT MATRIC SCHOOL THALAVADI பள்ளியையே இணைத்துக்கொண்டு செஸ்போட்டியை நடத்துகிறோம்.

               இவ்வாறாக ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் மக்களுக்குப் பயன்படும் நிகழ்வினை நம்முடன் இணைந்து தாராளமாக செய்யலாம்.

                 நெருக்கடியான சூழலிலும் சதுரங்கப்போட்டியை நடத்த ஏற்றுக்கொண்டதற்கான காரணம்,

                   KCT MATRIC SCHOOL PRINCIPAL கூறியவாறு (CHESS) சதுரங்கப்போட்டியானது இரு மன்னர்களுக்கிடையே நடைபெறும் யுத்தத்தின் பிரதிபலிப்பு ஆகும். 

              போர்க்களத்தில் யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை என பல்வேறு படைப்பிரிவுகள் இருந்ததைப்போன்று 

                  செஸ்(CHESS) விளையாட்டிலும் கருப்பு,வெள்ளை என இரு மன்னர்களாக உருவகப்படுத்தி 
              ஒவ்வொருவருக்கும்  King ராஜா-1, Queen ராணி-1, Bishop பிஷப் என்னும் மந்திரி-2(தற்போது பாதிரியார்), Knight நைட்ஸ் என்னும் குதிரை-2, Rookரூக் என்னும் யானை-2(தற்போது கோட்டை),Pawns பான்ஸ் எனப்படும் சிப்பாய்கள்-8 என ஆறுவித மதிப்பெண்கள் கொண்ட  தனக்குரிய 16 காய்களை ஒருவர் எட்டு விதமான போக்குகளில் நகர்த்தி விளையாடும் விளையாட்டு ஆகும்.

                    பதினாறு காய்களையும் வைத்து a,b,c,d,e,f,g,h என FILE எழுத்துக்களாக கருப்பு,வெள்ளை என மாறி மாறி எட்டுக்கட்டங்கள் கொண்ட நிற்கும் வரிசையிலும்   ,1,2,3,4,5,6,7,8 என RANK எண்களாக கருப்பு,வெள்ளை என மாறி மாறி எட்டுக்கட்டங்கள் கொண்ட படுக்கைவரிசையிலும், ஆக 64 சம சதுரக் கட்டங்கள் அமைந்த போர்டில் 

                  ராஜாவுக்கு (castling) கோட்டை கட்டுதல்,
(en-passant ) பொருந்தாநிலை விதிப்படி பான் எதிரியின் பானை அடித்தல்,
Pinned எனப்படும் ஆப்பு வைத்து(மறைத்து) ராஜாவை செக் நிலையிலிருந்து காப்பாற்றுதல்,
Skewers எனப்படும் இரட்டைக்குறி வைத்தும்,Fork எனப்படும் இரண்டில் ஒன்று முறையில் குறி வைத்தும் எதிரியின் காயை அடித்தல் அல்லது பயமுறுத்தல்,
தந்திரமாக தன் காயை கொடுத்து எதிரியின் காயை அடித்தல்,
டிரா செய்தல், 
stale-mate செய்து டிரா செய்தல்,
ராஜாவுக்கு செக் வைத்தல்,டிஸ்கவர்டு செக் வைத்தல்,
செக்மேட் செய்தல் என

                  பல்வேறு திசைகளில் பயணிக்கும் காய்களின் போக்கை வைத்து, மனதை ஒருமுகப்படுத்தி, மூளையினால் அறிவை உபயோகித்து, கவனமாகச் சிந்தித்து விளையாடப்படும் நுணுக்கமான விளையாட்டு செஸ்விளையாட்டு ஆகும்.

           எதிராட்டக்காரர் தன் காய்களை எந்த கோணத்தில் எந்தப்போக்கில் எந்தக்கட்டத்திற்கு எந்தக்காயை நகர்த்தி தனது காய்களைத் தாக்க முயற்சிக்கிறார்!தனது காயை தற்காத்துக்கொண்டு எதிரியின் காயை அடிப்பது எப்படி? என பலகோணங்களில் ஆழமாக முன்னெச்சரிக்கையாக சிந்திக்க வைப்பதால் செஸ்போட்டி மாணவருடைய மூளையின் செயல்பாட்டை பலவழிகளிலும் தூண்டச்செய்து,

                     மாணவர்களுடைய அறிவைப் பெருக்குகிறது.கவனிக்கும் திறனை வளர்க்கிறது,சிந்தனை ஆற்றலைப் பெருக்குகிறது,நினைவாற்றலைப் பெருக்குகிறது,சுறுசுறுப்பைத்தருவதோடு தாம் எதிர்கொள்கும் எந்தவகையான சிக்கலையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைத் தருகிறது .

                     இதை மக்களுக்கு புரியும்வகையிலும்,மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் எங்களிடத்திலே நேற்று தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள்  எங்களிடத்திலே விளக்கியதால்!, இத்தனை சிறப்புகொண்ட செஸ் போட்டியையும் நடத்த உள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

                     எனவே அனைவரும் முழு ஆதரவுகொடுத்து விழா சிறக்க உறுதுணை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 

என அன்பன்
C.பரமேஸ்வரன் -
(ஒருங்கிணைப்பாளர்)

சமூக ஆர்வலர்கள் சார்பாக,
தாளவாடி 9585600733
paramesdriver@gmail.com

தாளவாடி புத்தகக்கண்காட்சி 2ஆம் ஆண்டு



மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
திட்டமிட்டபடிஅரசியல்,மத,சாதி வேறுபாடின்றி
 தாளவாடியின் சமூக ஆர்வலர்கள்
 ஈரோடு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து
 2-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி வருகிற
ஆகஸ்டு 25 சனிக்கிழமை மற்றும் 26ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் வாசிப்புத்திருவிழாவாக
தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடத்துகிறோம்.

                                இருநாட்களிலும் மாணவ,மாணவியருக்கான வருங்கால மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அனுபவமிக்க கருத்தாளர்களால் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.அதாவது

      (1) -மத்திய,மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளும் பயிற்சிகளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி - சென்னை TNPSC.ACADEMY குழுவினர் நடத்த வருகைதர உள்ளனர்.

            (2) பிளஸ்டூ முடித்தபிறகு என்ன படிக்கலாம்? உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

                     இதற்கு முன்னதாக வருகிற ஆகஸ்டு 20ஆம் தேதிக்குள் மாணாக்கரின் அறிவு வளர்ச்சிக்கான சிந்தனையைத்தூண்டும் விளையாட்டுப் போட்டியாக (CHESS MATCHES) தாளவாடி வட்டாரத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்து,
 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்'   செஸ்போட்டி
  KCT MATRIC SCHOOL உடன் இணைந்து நடத்த உள்ளோம்.

                மாணவ,மாணவியர் தங்களது பள்ளியின் வாயிலாக முன் பதிவுஆகஸ்டு 8ஆம் தேதிக்குள் செய்யவேண்டும் எனவும் முன் பதிவுக்கான சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விபரம் அனைத்து பள்ளிகளுக்கும் ஓரிரு நாட்களில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

         தெளிவான திட்டமிடலுடன் விரைவில் முன்தயாரிப்பு பணிகளை செய்து அறிவிக்கப்படும்.சூழ்நிலை காரணமாக வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கருத்தாளர்கள் மாறலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
(முக்கிய அறிவிப்பு தாளவாடி வட்டார மக்களின் அக்கறையுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்)
  என
தாளவாடி சமூக ஆர்வலர்கள் சார்பாக
 C.பரமேஸ்வரன்-9585600733
ஒருங்கிணைப்பாளர்

03 மே 2018

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair



மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். விதைகள் வாசகர் வட்டம் சார்பாக
            உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு நம்ம சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் உலக புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
நாள் ; 2018 மே மாதம் 5ம் தேதி  மற்றும் 6ம் தேதி 
சனி,ஞாயிறு இரண்டு நாட்கள்.காலை10.00மணி முதல் இரவு8.00மணிவரை
 புத்தகக் காட்சி திறப்பாளர்; 
திருமதி.சுதா அவர்கள் 
நகராட்சி ஆணையாளர்,
சத்தியமங்கலம் நகராட்சி.
 விற்பனையை தொடங்கிவைப்பவர் ;
  எழுத்தாளர் , வா.மணிகண்டன் அவர்கள்,
       நிசப்தம் அறக்கட்டளை - பெங்களூரு.

  அனைவரையும் அன்புடன் வரவேற்கும்
 யாழினி ஆறுமுகம் அவர்கள் 
தலைவர்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்.

07 செப்டம்பர் 2017

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா-017


 ஆசிரியர் தினம் மற்றும் மரம் நடுவிழா!..
   நம்ம ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில்!!.

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம். இன்று செப்டெம்பர் 05 ஆம் தேதி சத்தியமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு விதைகள் வாசகர் வட்டம் சத்தியமங்கலம்  மற்றும் புதிய மாற்றம் ஈரோடு  சார்பாக  வாழ்த்துரை வழங்கி மரம் நடுவிழாவும் நடைபெற்றது. மாணவியர் தலைமையாசிரியை மற்றும் இருபால் ஆசிரியர் மேன்மக்களுக்குவாழ்த்து மடல் வாசித்தனர்.மரம் நடுதலின் சிறப்பு பற்றியும் உரையாற்றினர்.வீட்டில் நடுவதற்கான மருத்துவத்தாவரங்களின் பெயர்களையும் வாசித்தனர்.

 எனது சிறப்புரையில்.....
                         அவையில் சூழ்ந்திருக்கும் அறிவுசார்  இருபால் ஆசிரியர் மேன்மக்களே,ஈரோடு புதிய மாற்றம் குழு சார்பாக வருகைபுரிந்துள்ள மற்றும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக வருகை புரிந்துள்ள சமூக அக்கறையுள்ள சான்றோர்களே, மாணவக்குழந்தைகளே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவரான  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது  பிறந்தநாளான செப்டெம்பர் 05 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும்  ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் விழா எடுத்து ஆசிரியர் மேன்மக்களைப் போற்றி வாழ்த்துகிறோம்.

                 .மாதாவும் பிதாவும் ஆகிய நம்மைப் பெற்றோர் இந்த உலகத்திற்கு நம்மைத்தந்துள்ளனர்.குருவாகிய ஆசிரியரோ இந்த உலகத்தையே நமக்குத்தருகின்றனர்.
 நிலம்,மலை,நிறைகோல்,மலர்நிகர்மாட்சியும்.,உலகியல் அறிவோடு உயர்குணம் இயையவும்.,அமைவன நூலுரை ஆசிரியர் ...
                              என்ற சங்க இலக்கியமாம் நன்னூல் உரையின் விளக்கமான  – பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும் உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவுடனும் இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து
 பொருந்தியிருக்கப் பெற்றவனே நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான்.என்றஉரைக்கேற்ப பொறுமை,அப்ர்ரணிப்பு,மகிழ்ச்சியோடு தன்னை அர்ப்பணித்து கற்றல் மற்றும் கற்பித்தலின் ஊடாக மாணவக்குழந்தைகளுக்கு அறிவைத்தந்து பண்புள்ள மனிதனாக வாழக்கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர் மேன்மக்களே.,அதனால்தாங்க ஆசிரியரை, 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என ஔவையார் ஆத்திச்சூடியில் கூறி இருக்கிறார். 

ஆசிரியர்கள்
           வெறும் காகிதமாக பள்ளியில் நுழைந்து மாணவக் குழந்தைகளாகிய உங்களை அறிவுப்புதையல் நிறைந்த புத்தகமாக வெளிக்கொணர்கிறார்கள்.

                  மண்கலவையாக பள்ளியில் சேர்ந்த மாணவக் குழந்தைகளை நாட்டிற்குத் தேவையான சிறந்த  வல்லுநர்களாக வடிவமைக்கிறார்கள்.,

            நன்னூல்35வது பாடலில் பொதுப்பாயிரம் பகுதியில்  மாணாக்கரின் குணங்களைப்பற்றி கூறப்பட்டுள்ள,
                     ''அன்ன மாவே மண்ணொடு கிளியே.,இல்லிக்குடமா டெருமை நெய்யரி.,அன்னர் தலையிடைகடை மாணாக்கர்''' -
                  என்ற வரிகளுக்கேற்ப,
               அன்னப்பறவை,பசு போன்ற முதல் மாணவக் குழந்தைகளையும்,மண்,கிளி போன்ற இடை மாணவக் குழந்தைகளையும்,ஓட்டைக்குடம்,ஆடு,எருமை,நெய்யரி என்னும் நெய் வடிக்கி அல்லது பன்னாடை போன்ற கடை மாணவக் குழந்தைகளையும் ஆசிரியர்  ''எங்கு நடப்படுகிறாயோ அங்கேயே மலராகு'' என்ற பொன்மொழிக்கேற்ப தம் பணியின் அர்ப்பணிப்புத்தன்மையாலும்,பொறுமையாலும் கல்வி,ஆற்றல்,ஊக்கம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,என அனைத்தையும் ஒருசேரக் கற்றுக்கொடுத்து சிந்தனையாளர்களையும்,அறிவியலறிஞர்களையும்,அறிஞர்களையும்,
ஆட்சியர்களையும்,ஆட்சியாளர்களையும்,மருத்துவர்களையும்,பொறியியல் வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர்களையும்,வேளாண்மை விஞ்ஞானிகளையும்,முப்படைத்தளபதிகளோடு நிர்வாகத்தறமையுடையவர்களையும் உருவாக்கி படிப்பாளிகளோடு சிறந்த படைப்பாளிகள் போன்ற பல்துறை வல்லுநர்களை உருவாக்கி சமூகத்தின் ஏணிகளாகவும்,தோணிகளாகவும்,பாதைகளாகவும்,படிக்கற்களாகவும்,
பாலங்களாகவும்,மெழுகுவர்த்தியாகவும்,கலங்கரைவிளக்காகவும் தன்னை அர்ப்பணித்து நாட்டின் நலனுக்காக அறிவார்ந்த சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கிவருகிறார்கள்.ஆசிரியர் பணி என்பது உயிரோட்டமான பணி.,உளவியல் ரீதியான பணி.,சேவைரீதியான,ஆய்வுரீதியான எல்லைகளற்ற அற்புதப்பணி ஆசிரியர் பணி.பாடப்புதக்கங்களோடு பலதுறை சார்ந்த அறிவையும் பெற வாசிப்பை ஊக்குவித்து பொது அறிவை வளர்ப்பவர்கள் ஆசிரியர் மேன்மக்கள்.உதாரணமாக அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியாம் இந்தப் பள்ளியில் பயின்ற மாணவி காரோட்டியின் மகளான திருமிகு. சி.வான்மதி அவர்கள்  கடந்தஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று  இன்று ஆட்சியாளராக உயர்வடைய இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுடைய பயிற்றுவிப்பும் வழிகாட்டலும் காரணமாகும்.

                                        இன்னொரு உதாரணமாக 1880 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று  அமெரிக்காவிலுள்ள அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் தமது 19 மாதக்குழந்தையாக இருந்தபோது கடுமையான மர்மக்காய்ச்சல் தாக்கியதால் தமது பார்வையையும்,கேட்கும் திறனையும் பேசும் திறனையும் முற்றிலுமாக இழக்க நேர்ந்தது.இவ்வாறாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது 7வயது குழந்தையானபோது ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்பிக்க  வந்து சேர்ந்த ஆசிரியை ஆன் சல்லிவன் என்பவரது நாற்பது ஆண்டுகால கற்பிக்கும் பணியால் அர்ப்பணிப்புத்தன்மையால் ஹெலன்கெல்லர்  கல்லூரியில் சேர்ந்து  பி.ஏ. பட்டம் பெற்றதோடு ஆங்கிலத்தோடு பிரெஞ்ச்,ஜெர்மன்,கிரேக்கம்,இலத்தீன் மொழிகளைகளையும் கற்றுத்தேர்ந்து  உலகிற்சிறந்த பேச்சாளராகவும்,எழுத்தாளராகவும்,சமூகப்போராளியாகவும் மாற்றி 88 வயதுவரை வாழ்வதற்கு காரணமாக இருந்தார்

      .இவ்வாறு
ஆசிரியர் பணியில் இறுதிவரை என்ன நடத்திமுடிக்கிறார் என்பதைவிட  எப்படி நடந்து கொள்கிறார் என்பதே முக்கியமாகும்.பாடம் நடத்திமுடிப்பவர்களைவிட பாடமாக நடந்துகாட்டுபவர்களையே மாணாக்கர் என்றும் நினைவில் வைத்துப்போற்றுவர்.என்பதையும் ஆசிரியர் மேன்மக்களுக்கு நினைவுபடுத்தி மனிதனை மனிதனாக உணரவைத்து ஒழுக்கமுள்ளவர்களாகவும்,பண்புள்ளவர்களாகவும்,பொறுப்புள்ளவர்களாகவும்,
அறிவுள்ளவர்களாகவும்சாதனையாளர்களைஉருவாக்குபவர்களை
மதிப்பெண்கள் பெறுவதோடு மதிப்போடு வாழவும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் மேன்மக்களை சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்கி உடலும் மனமும் வளம்பெற்று நீண்ட காலம் வாழவேண்டி வாழ்த்துகிறேன். நல்வாய்ப்பினை அளித்த இப்பள்ளிக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.


 சத்தி சைக்கிள் ஏ.ஜே.அப்துல் ஜப்பார் அவர்கள் வாழ்த்துரையில்.,

( மேடையில் நின்று பேசினால் நூற்றுக்கணக்கான மாணவ கண்மணிகளுடன் ஒன்றினைய முடியாது என கீழிறங்கி வாழ்த்தினார்)
ஐயா அவர்களது வாழ்த்துரையில்  குறிப்பிட்ட விஷயம் -
ஆசிரியர்களே நீங்கள் மாணவியரில்  யாரையும் மக்கு என ஒதுக்கித்
தள்ளாதீர்கள், அவர்களிடம் ஏதேனும் தனித்
திறமை இருக்கும் அதைக் கண்டு பிடித்து வெளிக்கொண்டு வரப் பாருங்கள்.
உலக மேதைகள் பெரும்பாலோர் லாஸ்ட்
பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் தான்அதாவது கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள்தான்..
ஆசிரியர்களானாலும் சரி, ஸ்டூடன்ட்ஸ்களாக இருந்தாலும் சரி உங்களை UPDATE செய்து கொண்டே இருந்
தால் தான் முன்னேற முடியும்.
எந்த சந்தேகம் வந்தாலும் தயக்கமின்றி
ஆசிரியர்களிடம் கேளுங்கள் பயப்பட வேண்டாம்.
பேருக்கு ஆசிரியராக இருக்காமல்
பேராசிரியராக திகழ்ந்தால் உலகம் உங்களை சிறப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் /என்று உரையாற்றிய ஜப்பார் அவர்கள் இறுதியாக 24 பக்கங்கள் கொண்ட
' ஆயிஷா'என்ற சிறு புத்தகத்தை அனைவரும் படித்து புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அப்போது 
ஒரு கிறிஸ்துவப்பள்ளியில் பயின்றஆயிஷா என்ற மாணவிக்கும் அதே பள்ளியில் விடுதி காப்பாள யுவதியாகவும், அறிவியல் ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைக்கும் நடந்த மனப்போர் பற்றி குறிப்பிட்டு ஒருமுறை வகுப்பறையிலேயே ஆயிஷா விட்டுச்சென்ற சிறு குறிப்புநோட்டில் ஆசிரியையின் பெயரை நூற்றுக்கணக்கான முறைஎழுதி அதற்கு கீழே ஆசிரியைதான் என் முதல் தாயார்.,என் முதல் ஆசிரியை,என் முதல் உயிர் என ரத்தத்தால் எழுதியிருந்ததை அறிய நேர்ந்தபோது ஆசிரியை பட்ட வேதனைக்கு அளவே இல்லையெனக் குறிப்பிட்டார்.

 ஈரோடு புதிய மாற்றம் மரம் நடு குழு சார்பாக திருமிகு.அய்யப்பன் அவர்கள் மரங்கள் நடுவதன் சிறப்பு பற்றி விழிப்புரை ஆற்றினார்.

நிறைவாக விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர் திருமிகு.யாழினி ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்.
புதிய மாற்றம் ஈரோடு மற்றும் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டு காடு வளர்ப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினோம்.

18 ஜூலை 2017

துப்புறவுத்தொழிலாளர்களின் அவலநிலை பற்றிய விவாத நிகழ்ச்சி..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 17 ஜூலை 2017 இன்று காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் ரீடு அமைப்பின் அலுவலக வளாகத்தில் துப்புறவுத்தொழிலாளர்களின் பணி மற்றும் வாழ்க்கையின் அவலநிலை பற்றிய ஆவணப்படம் 'கக்கூஸ்' திரையிடப்பட்டது.தொடர்ந்து விவாதநிகழ்ச்சி நடைபெற்றது.திரு. தணிக்காச்சலம் ஐயா அவர்கள் உட்பட திரு.முருகன் அவர்கள்,திரு.மணி அவர்கள்,வினோத் ராஜேந்திரன் அவர்கள்,உட்பட  42 சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து விவாதித்த நான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -
           972 வது குறளுக்கேற்ப,
அனைவரும் ஒரே இனமே என்பதை உணர வேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். 
 பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் சுத்தமாக வைத்திருக்க சரியான விழிப்புணர்வினை சமூகத்தினரிடையே ஏற்படுத்த வேண்டும்.
பொதுக்கழிப்பிடங்கள்,சாக்கடைகள்,மருத்துக்கழிவுகள்,
இறைச்சிக்கழிவுகள்,என குப்பைகள் தானாக உருவாவதில்லை,உருவாக்கப்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
                  துப்புறவுப்பணியை குல தொழிலாக எண்ணி தாமாக விரும்பி ஏற்பதை தவிர்க்க வேண்டும்.படித்து வேறு பணிக்கு செல்லலாம்,பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
 .சாதியை ஒழிப்பதைவிட சாதிகள் சமநிலை அடைய வேண்டும்.தலித் இனத்தவர்களிடையே உள்ள சாதிப்படிநிலை சமநிலைப்பட வேண்டும்.தலித் இனத்தில் ஒரே சாதியில் பல உட்பிரிவுகள் அதுவும் மேல்சாதி,கீழ்சாதி என சாதிப்படிநிலை இருப்பது கொடுமையிலும் கொடுமை.
தலித் இனத்தவருக்காக அரசாங்கம் வழங்கும் சலுகைகளையும்,இலவசங்களையும்,இட ஒதுக்கீடு பணி வாய்ப்புகளையும் தலித் இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே முழு பலனையும் அனுபவிப்பதை பட்டியலிடப்பட்ட சாதியினர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க செய்யவேண்டும்.என விவாதம் செய்து தொடங்கி வைத்தேன்.

12 ஜூலை 2017

தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா-2017


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.வருகிற 2017 ஜூலை மாதம்15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா,தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத்திருவிழா,தாளவாடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு முதலாம் ஆண்டு நிறைவுவிழா ஆகிய முப்பெரும்விழா தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அனைவரும் வருகைபுரிந்து அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்க! என அன்புடன் அழைக்கிறோம்...