20 ஜூலை 2018

தாளவாடி புத்தகக்கண்காட்சி 2ஆம் ஆண்டு



மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
திட்டமிட்டபடிஅரசியல்,மத,சாதி வேறுபாடின்றி
 தாளவாடியின் சமூக ஆர்வலர்கள்
 ஈரோடு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து
 2-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி வருகிற
ஆகஸ்டு 25 சனிக்கிழமை மற்றும் 26ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் வாசிப்புத்திருவிழாவாக
தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடத்துகிறோம்.

                                இருநாட்களிலும் மாணவ,மாணவியருக்கான வருங்கால மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அனுபவமிக்க கருத்தாளர்களால் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.அதாவது

      (1) -மத்திய,மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளும் பயிற்சிகளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி - சென்னை TNPSC.ACADEMY குழுவினர் நடத்த வருகைதர உள்ளனர்.

            (2) பிளஸ்டூ முடித்தபிறகு என்ன படிக்கலாம்? உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

                     இதற்கு முன்னதாக வருகிற ஆகஸ்டு 20ஆம் தேதிக்குள் மாணாக்கரின் அறிவு வளர்ச்சிக்கான சிந்தனையைத்தூண்டும் விளையாட்டுப் போட்டியாக (CHESS MATCHES) தாளவாடி வட்டாரத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்து,
 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்'   செஸ்போட்டி
  KCT MATRIC SCHOOL உடன் இணைந்து நடத்த உள்ளோம்.

                மாணவ,மாணவியர் தங்களது பள்ளியின் வாயிலாக முன் பதிவுஆகஸ்டு 8ஆம் தேதிக்குள் செய்யவேண்டும் எனவும் முன் பதிவுக்கான சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விபரம் அனைத்து பள்ளிகளுக்கும் ஓரிரு நாட்களில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

         தெளிவான திட்டமிடலுடன் விரைவில் முன்தயாரிப்பு பணிகளை செய்து அறிவிக்கப்படும்.சூழ்நிலை காரணமாக வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கருத்தாளர்கள் மாறலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
(முக்கிய அறிவிப்பு தாளவாடி வட்டார மக்களின் அக்கறையுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்)
  என
தாளவாடி சமூக ஆர்வலர்கள் சார்பாக
 C.பரமேஸ்வரன்-9585600733
ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...