20 ஜூலை 2018

தாளவாடியில் செஸ்போட்டி நடத்துவது எதற்காக?

தாளவாடியில் 2 ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியில்
பள்ளி மாணவர்களுக்கு THALAVADI PANCHAYAT UNION CHAMPIONSHIP -CHESS MATCHES
செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடத்துவது எதற்காக?


மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
        நம்ம தாளவாடியில் 2ஆம் ஆண்டாக புத்தகக்கண்காட்சி நடைபெற இருக்கும் இத்தருணத்தில் மாணவர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுகள் நடத்தலாமே! என ஆலோசனை வழங்கியவர்களுக்கு நன்றிங்க.


           ஒரு நிகழ்வை நடத்த பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.எனவே இயன்றளவு புத்தகக்கண்காட்சியையாவது தாளவாடியில் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு ஆண்டுதோறும் தவறாமல் நடத்த முயற்சியெடுத்து வருகிறோம்.இந்நிலையில்

                   செஸ் எனப்படும் சதுரங்கப்போட்டி மட்டும் நடத்துவது ஏன்?என்ற வினாவும் சிலரால் எழுப்பப்பட்டது.

    அதற்கான விளக்கமான பதிவு இது...
 

        சென்ற ஆண்டு கல்வி வளர்ச்சி நாளான 2017 ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி இருநாட்கள் 
              மதிப்பிற்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களது ஆதரவோடு    சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் 
 திரு .வியானி அவர்கள் தலைமையில் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு புத்தகத்திருவிழாவினை  ..திகினாரை அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜடேசாமி அய்யா அவர்கள் திறந்து வைத்து நடைபெற்ற அறிவுத்திருவிழாவிற்கு  

             தம் பள்ளிக்குழந்தைகளையும் இருபால் ஆசிரியர் பெருமக்களையும் அழைத்து வந்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியும் பேனர் உட்பட பல உதவிகளையும் செய்துகொடுத்து தானும் நேரில் பங்கேற்று ஊக்குவித்த

                   KCT MATRIC SCHOOL THALAVADI -PRINCIPAL திரு.சுரேஷ்குமார் அய்யா அவர்களது அறிவுரைப்படி ,
               தாளவாடி சமூக ஆர்வலர்கள் இந்த ஆண்டு நடத்தும் 2ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியினை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையைத்தூண்டும் செஸ் போட்டியினை

     தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளின் மாணவ,மாணவியருக்காக
 'தாளவாடி பஞ்சாயத்து யூனியன் சாம்பியன்ஷிப்"  
என்ற பெயரில் சான்றிதழ் வழங்கும் அடிப்படையில் செஸ் போட்டி (THALAVADI PANCHAYAT UNION CHAMPIONSHIP - CHESS COMPETITION ) நடத்தப்படுகிறது.  
            செஸ் எனப்படும் சதுரங்கப்போட்டியினை KCT MATRIC பள்ளியே சமூக ஆர்வலர்கள் சார்பாக இந்த ஆண்டு போட்டியை  தம் சொந்த செலவில் நடத்திக்கொடுப்பதாக கூறியதின்பேரில் தாளவாடி சமூக ஆர்வலர்கள் ஆகிய நாம் KCT MATRIC SCHOOL THALAVADI பள்ளியையே இணைத்துக்கொண்டு செஸ்போட்டியை நடத்துகிறோம்.

               இவ்வாறாக ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் மக்களுக்குப் பயன்படும் நிகழ்வினை நம்முடன் இணைந்து தாராளமாக செய்யலாம்.

                 நெருக்கடியான சூழலிலும் சதுரங்கப்போட்டியை நடத்த ஏற்றுக்கொண்டதற்கான காரணம்,

                   KCT MATRIC SCHOOL PRINCIPAL கூறியவாறு (CHESS) சதுரங்கப்போட்டியானது இரு மன்னர்களுக்கிடையே நடைபெறும் யுத்தத்தின் பிரதிபலிப்பு ஆகும். 

              போர்க்களத்தில் யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை என பல்வேறு படைப்பிரிவுகள் இருந்ததைப்போன்று 

                  செஸ்(CHESS) விளையாட்டிலும் கருப்பு,வெள்ளை என இரு மன்னர்களாக உருவகப்படுத்தி 
              ஒவ்வொருவருக்கும்  King ராஜா-1, Queen ராணி-1, Bishop பிஷப் என்னும் மந்திரி-2(தற்போது பாதிரியார்), Knight நைட்ஸ் என்னும் குதிரை-2, Rookரூக் என்னும் யானை-2(தற்போது கோட்டை),Pawns பான்ஸ் எனப்படும் சிப்பாய்கள்-8 என ஆறுவித மதிப்பெண்கள் கொண்ட  தனக்குரிய 16 காய்களை ஒருவர் எட்டு விதமான போக்குகளில் நகர்த்தி விளையாடும் விளையாட்டு ஆகும்.

                    பதினாறு காய்களையும் வைத்து a,b,c,d,e,f,g,h என FILE எழுத்துக்களாக கருப்பு,வெள்ளை என மாறி மாறி எட்டுக்கட்டங்கள் கொண்ட நிற்கும் வரிசையிலும்   ,1,2,3,4,5,6,7,8 என RANK எண்களாக கருப்பு,வெள்ளை என மாறி மாறி எட்டுக்கட்டங்கள் கொண்ட படுக்கைவரிசையிலும், ஆக 64 சம சதுரக் கட்டங்கள் அமைந்த போர்டில் 

                  ராஜாவுக்கு (castling) கோட்டை கட்டுதல்,
(en-passant ) பொருந்தாநிலை விதிப்படி பான் எதிரியின் பானை அடித்தல்,
Pinned எனப்படும் ஆப்பு வைத்து(மறைத்து) ராஜாவை செக் நிலையிலிருந்து காப்பாற்றுதல்,
Skewers எனப்படும் இரட்டைக்குறி வைத்தும்,Fork எனப்படும் இரண்டில் ஒன்று முறையில் குறி வைத்தும் எதிரியின் காயை அடித்தல் அல்லது பயமுறுத்தல்,
தந்திரமாக தன் காயை கொடுத்து எதிரியின் காயை அடித்தல்,
டிரா செய்தல், 
stale-mate செய்து டிரா செய்தல்,
ராஜாவுக்கு செக் வைத்தல்,டிஸ்கவர்டு செக் வைத்தல்,
செக்மேட் செய்தல் என

                  பல்வேறு திசைகளில் பயணிக்கும் காய்களின் போக்கை வைத்து, மனதை ஒருமுகப்படுத்தி, மூளையினால் அறிவை உபயோகித்து, கவனமாகச் சிந்தித்து விளையாடப்படும் நுணுக்கமான விளையாட்டு செஸ்விளையாட்டு ஆகும்.

           எதிராட்டக்காரர் தன் காய்களை எந்த கோணத்தில் எந்தப்போக்கில் எந்தக்கட்டத்திற்கு எந்தக்காயை நகர்த்தி தனது காய்களைத் தாக்க முயற்சிக்கிறார்!தனது காயை தற்காத்துக்கொண்டு எதிரியின் காயை அடிப்பது எப்படி? என பலகோணங்களில் ஆழமாக முன்னெச்சரிக்கையாக சிந்திக்க வைப்பதால் செஸ்போட்டி மாணவருடைய மூளையின் செயல்பாட்டை பலவழிகளிலும் தூண்டச்செய்து,

                     மாணவர்களுடைய அறிவைப் பெருக்குகிறது.கவனிக்கும் திறனை வளர்க்கிறது,சிந்தனை ஆற்றலைப் பெருக்குகிறது,நினைவாற்றலைப் பெருக்குகிறது,சுறுசுறுப்பைத்தருவதோடு தாம் எதிர்கொள்கும் எந்தவகையான சிக்கலையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைத் தருகிறது .

                     இதை மக்களுக்கு புரியும்வகையிலும்,மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் எங்களிடத்திலே நேற்று தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள்  எங்களிடத்திலே விளக்கியதால்!, இத்தனை சிறப்புகொண்ட செஸ் போட்டியையும் நடத்த உள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

                     எனவே அனைவரும் முழு ஆதரவுகொடுத்து விழா சிறக்க உறுதுணை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 

என அன்பன்
C.பரமேஸ்வரன் -
(ஒருங்கிணைப்பாளர்)

சமூக ஆர்வலர்கள் சார்பாக,
தாளவாடி 9585600733
paramesdriver@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...