20 ஆகஸ்ட் 2018

THALAVADI TALUK CHESS CHAMPIONSHIP TOUNAMENT-2018

 தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப்-முதலாம் ஆண்டு செஸ் போட்டி-2018

                                       20-08-2018திங்கட்கிழமை
                                    தாளவாடி தாலுக்கா அனைத்து பள்ளிகளின் மாணவ,மாணவிகளுக்காக இன்று KCT MATRICULATION பள்ளியில் செஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது.திரு.சுரேஷ்குமார் அவர்கள், தாளாளர் ,கேசிடி மெட்ரிக் பள்ளி தலைமை ஏற்க ,திரு.வியானி அவர்கள் முன்னிலை வகித்தார்.திரு.க.பெருமாள் அவர்கள்,(வட்டார வளர்ச்சி அலுவலர் தாளவாடி)முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.திரு.கணேசன் உட்பட திரு.ஆனந்தநாராயணன் அவர்கள்,திரு.சுஹைல் அகமது அவர்கள்,திரு.நா.பிரபு அவர்கள்,திரு.செந்தூர் அவர்கள்,திரு.பாலமுருகன் அவர்கள்,உட்பட சமூக ஆர்வலர்களும்,அனைத்து பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்துகொண்டு செஸ்போட்டியின் நடுவர்களாக பணியாற்றி சிறப்பித்தனர். (1)மரியதீப்தி மெட்ரிகுலேசன் பள்ளி,பனகஹள்ளி,(2)அரசு மேல்நிலைப் பள்ளி,பனகஹள்ளி,(3)அரசு உயர்நிலைப்பள்ளி-திகினாரை,(4)புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி-திகினாரை,(5)அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி-மல்லன்குழி,(6)அரசு உயர்நிலைப்பள்ளி-குன்னன்புரம்,(7)புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி-சூசைபுரம்,(8)தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-தொட்டகாஜனூர்,(9)அரசு மேல்நிலைப் பள்ளி-தாளவாடி,(10)ஜ.எஸ்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளி-தாளவாடி,(11)கேசிடி மெட்ரிகுலேசன் பள்ளி-ராமாபுரம் ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த 150 மாணவ,மாணவியர் மிக இளையோர் பிரிவு,இளையோர் பிரிவு,மூத்தோர் பிரிவு என மூன்று நிலைகளில் பங்கேற்று விளையாடி சிறப்பித்தனர். ஏழு அடுக்குகளாக நடைபெற்ற தாளவாடி தாலுக்கா சாம்பியன்ஷிப்-செஸ்போட்டி நிறைவில்
(அ)மிக இளையோர் பிரிவின் முதல்நிலைசாம்பியனாக ,
R.MEGA எட்டாம் வகுப்பு ,
அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி
2-ஆம் நிலை சாம்பியனாக
J.FAVVS AHAMMED எட்டாம் வகுப்பு,
கேசிடி மெட்ரிக் பள்ளி,
(ஆ)இளையோர் பிரிவில்
முதல்நிலை சாம்பியனாக
S.SHIVA KUMAR பத்தாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப்பள்ளி-பனகஹள்ளி,
2ஆம் நிலை சாம்பியனாக IMMAN KHAN ஜே.எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி,தாளவாடி,
(இ) மூத்தோர் பிரிவில்
முதல்நிலை சாம்பியனாக
A.GOWTHAM பன்னிரண்டாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி -தாளவாடி,
2ஆம் நிலை சாம்பியனாக
D.JOTHI பன்னிரண்டாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி- பனகஹள்ளி
ஆகிய மாணவ,மாணவிகள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வெற்றிக்கேடயமும்,பங்கேற்ற மாணவ,மாணவியர் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும்,வருகிற2018ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கவுள்ள 2ஆம் ஆண்டு மூன்று நாள் புத்தகக்காட்சி தொடக்கவிழாவின்போது தாளவாடியில் வழங்கி சிறப்பிக்கப்படும்.

இன்று 20-08-2018 (திங்கட்கிழமை) மாலை KCT MATRIC பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற பரிசீலனைக்கூட்டத்தில்
திரு. எம்.சுரேஷ்குமார் அவர்கள்,திரு.நா.பிரபு அவர்கள்,திரு.கா.தனசேகரன் அவர்கள்,திரு.எஸ்.சுஹைல் அகமத் அவர்கள்,திரு.கே.செந்தூர் அவர்கள்,திரு.டி.வி.ஆனந்த நாராயணன் அவர்கள்,திரு.வி.பாலமுருகன் அவர்கள்,திரு.சி.பரமேஸ்வரன் அவர்கள்,திருமதி,ஆர்.சங்கீதா அவர்கள் கலந்துகொண்டனர்.அது சமயம்,
(1)திட்டமிட்டபடி செயல்பாடும்,நேர நிர்வாகமும்,சரியாக கடைப்பிடிக்கவேண்டும்.
(2)முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் முன்னதாக அனுமதி கடிதம் வழங்கப்பட வேண்டும்.
(3)அனைத்து பள்ளிகளுக்கும் செஸ்விளையாட்டு பயிற்சியளிக்க வேண்டும்,(4)பெயர் பதிவு செய்யப்பட்ட மாணவக்குழந்தைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,
(5)பங்கேற்ற அனைவரின் பெயர்,முகவரி,பணி விபரத்துடன் தொடர்பு எண்களையும் பதிவிட்டு கையொப்பம் பெற வேண்டும்.(6)
பங்கேற்பாளர் உட்பட அனைத்து மாணவ,மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும்,(7)தாளவாடி செஸ் அகாடமி உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.(8)மாவட்ட,மாநில சதூரங்கக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.(9)ஆண்டுதோறும் மூன்று பேட்டிகளாவது நடத்த வேண்டும்,(10)செஸ் போட்டிகளின்போது திறமையுள்ள மாணவ,மாணவிகளை கண்டறிந்து நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.(11)செஸ் பயிற்சிகளுக்கான புத்தகங்கள் போன்ற மூல ஆதாரங்களை சேகரித்து பயன்படுத்த வேண்டும்.
(12)நிதியுதவி செய்வோர் பட்டியலை உருவாக்குவதுடன்,செலவினங்களுக்கான நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டும்.
(13)செஸ் போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியருக்கு சான்றிதழ்களுடன் எளிமையான கேடயங்கள் மட்டும் வெற்றிப்பரிசாக வழங்கி மீதம் குறிப்பிட்ட தொகையாக வழங்கி உதவ வேண்டும்.உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.முடிவில் ,
'தாளவாடி செஸ் அகாடமி' (THALAVADI CHESS ACADEMY ) என்ற பெயரில் தாளவாடி சதுரங்க விளையாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.
தொடர்புக்கு; சி.பரமேஸ்வரன்,9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...