30 அக்டோபர் 2012

கரட்டூர்-சொர்க்கபூமி-02,crematorium-Karattur

மரியாதைக்குரிய நண்பர்களே,
                                      வணக்கம்.
                           சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் குக்கிராமத்தில் சொர்க்கபூமி மேம்பாடு மிக அசுரவேகமாக நடைபெற்றுவருகிறது.
                  அதற்கு(பொதுமக்கள் நலனுக்காக ) முழுநேர உழைப்பினைக் கொடுக்கும் மகாசக்தி ஆண்கள் குழுவினருக்கு சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
     இரண்டாவது வேலையாக நேற்று (30-10-2012) வனத்துறையிடம் நாற்றுக்கள் பெற்று வாடகை ஊர்தியில் எடுத்துவரப்பட்டது.அதன் புகைப்படத்தொகுப்பு கீழே காண்க!




        30-10-2012அன்று மாலை3-00மணிக்கு மரக்கன்றுகள் எடுத்துவர! 
            எத்தனை ஆனந்தம் பாருங்கள்!! மகாசக்தி ஆண்கள்குழு உறுப்பினர்களுக்கு!!இதுவல்லவோ மகத்தான சமூகசேவை! மகிழ்ச்சியான சேவை!!






      இதோ! கருமமே கண்ணாய் இருக்கும் இன்னொரு சமூகநலன் ஆர்வலர்!!அமர்ந்திருப்பதில்தான் அடக்கம்! செயலில் தீவிரம்!!
 
                                 ஈரோடு மாவட்டம் -சத்தியமங்கலம் வனக்கோட்டம் 
                     பண்ணாரி மத்திய நாற்றாங்கால்!   நினைவுக்காக!!





   வனத்துறை,மாண்புமிகு முதல்வரின் 64-வது பிறந்த நாள்- மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட நாற்றுக்களைத்தான் வழங்கியுள்ளது.எந்த வடிவில் கிடைத்தால் என்னங்க? நமக்குத்தேவை,கரட்டூர்- சொர்க்கபூமிக்கு மரக்கன்றுகள்!!


    வனத்துறைக்குட்பட்ட  பண்ணாரி மத்திய  நாற்றாங்காலில், 
              மகாசக்தி ஆண்கள் குழு செயல்வீரர்கள்! நல்ல கன்றுகளைத் தேர்வு செய்யும் காட்சிங்க! இதுதான் பொதுநலனிலும் சுய நலன்! என்பதோ?!?.





     வாடகை வாகனத்தில் நாற்றுக்களை இன்முகத்தோடு ஏற்றும் காட்சிங்க!நாமும் அவர்களோடுஇணைந்து கொள்ளும் எண்ணத்தை நமக்கும் உருவாக்குதுங்க!





  பொதுச்சேவையின் கடின உழைப்பிலும் கலகலப்பான முகங்களைக் கண்டால் நம்மையும் சுண்டி இழுக்குதுங்க!அருகில் வன நாற்றாங்கால் பராமரிப்பு ஊழியர்!



    வாடகை கொடுப்பதென்றாகிவிட்டது! முடிந்தவரை ஏற்றிக்கொண்டோம்!?என்ற உவகையோ? இவற்றை நடவு செய்து பராமரிப்பதுதாங்க கடின வேலைங்க!

                    கரட்டூர்-சொர்க்க பூமி வந்தாயிற்று.அடுத்து என்ன செய்ய? எந்த இடத்தில் இறக்கிவைக்க?என மகாசக்தி ஆண்கள் குழுவின் மற்ற பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளும் வேகம் பாருங்க!.





       இறக்கி வைக்க இடம் தேர்வு செய்தாகிவிட்டது.இறக்குவோம் மரக்கன்றுகளை! எனத் தயார்நிலையில் சமூக நல தீவிரவாதிகள்!அருகில் பட்டதாரிப்பெண் உட்பட பொதுமக்களில் சிலர்.
                                                          இன்னும் தொடரும்............ பார்வையிட்ட தங்களுக்கு மிக்க நன்றிங்க!!!!!!!!.........

 Post By:-
 Parameswaran.c
Tamil nadu science forum 
 Thalavady
Sathyamangalam-638402
Erode Dt.






  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...