02 பிப்ரவரி 2025

 நடவடிக்கை கோருதல் மனு 🙏

தமிழார்வலர்கள் அனைவருக்கும்

 வணக்கம்.

மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் உலகப்பொதுமறையான திருக்குறள் வாசகம் புதியதாக இயக்கப்படுகின்ற பேருந்துகளிலும் காட்சிப்படுத்தாமலும், பழைய பேருந்துகள் பலவற்றில் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் அலட்சியப்படுத்திஇருப்பது வேதனையாக உள்ளது. திருவள்ளுவர் பெருமகனார் பெயரைத் தாங்கி அண்டைமாநிலங்களுக்கும் அரசு விரைவுப்பேருந்துகளை இயக்கி பெருமைப்படுத்திய காலம் கடந்து தற்போது திருக்குறளை அலட்சியப்படுத்திவரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் இயக்கப்படுகின்ற எல்லா பேருந்துகளிலும் மீண்டும் திருக்குறள் வாசகங்களை காட்சிப்படுத்துவதுடன் பாதுகாப்பாக பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழியக்கம்,தலைமை அலுவலகம்,விஐடி பல்கலைக்கழகம்,வேலூருக்கும்  கோரிக்கை மனு அனுப்ப உள்ளேன்.என வேதனையுடன்,

தமிழியக்கம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்,

செ.பரமேஸ்வரன்


திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...