11 ஜூன் 2014

கொங்குத்தென்றல் சார்பாக இந்தியன் குரல்சேவை அமைப்புக்கு நன்றி

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
  கொங்குத்தென்றல் சார்பாக இந்தியன் குரல் சமூக நலனுக்கான இலவச சேவை அமைப்புக்கு நன்றி சொல்வோம்...

இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) இந்தியக் குடிமக்கள் யாவர்க்கும்- (அ) சுதந்திரமாக சிந்திப்பதற்கும், எடுத்துச் சொல்வதற்கும், (ஆ) ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கும், (இ) சங்கங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கும், (ஈ) இந்திய எல்லைக்குள் எத்தகைய தடையுமின்றி நடமாடுவதற்கும், (உ) இந்திய எல்லைக்குள் தாம் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும் தங்குவதற்கும், (ஊ) சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பனை செய்யவும், வைத்திருக்கவும், (எ) எந்தத் தொழிலையும் செய்வதற்கும், நடத்துவதற்கும், எந்தப் பணியிலும் ஈடுபடுவதற்கும், எத்தகைய வாணிபத்தையும் செய்வதற்கும் உரிமை இருக்கிறது

RTI மூலம் தனியார் மருத்துவமனையின் தகவல்களை கோர முடியுமா என்று நண்பர் ஒருவர் நமது பக்கத்தில் கேள்வி எழுப்பிருந்தார். அதற்கான பதில் :-
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தனியார் துறையை கேட்க விரும்பினால் அதனை கண்கானிக்கும் அரசு அமைப்பு மூலம் தகவல் கோரலாம்.
தனியார் மருத்துவமனை என்று வருகின்ற பொழுது வருமான, வரி போன்ர தகவல்களை கோருவது என்றால் வருமான வரித்துறை மூலம் கேட்கலாம்.
மருத்துவம், நோயாளி, மருந்து இருப்பு போன்ற மருத்துவம் சார்ந்த தகவல்களுக்கு , மாவாட்ட சுகாதார துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு மனு செய்யலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...