01 ஆகஸ்ட் 2025

மாணவ,மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு நம்ம கொளப்பலூரில்.....

 

அன்பிற்கினிய தமிழார்வர்களுக்கு
 வணக்கம். மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்   ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்படும் 
 அரசுப் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்  01-08-2025 வெள்ளிக்கிழமை  இன்று 20 நிமிடங்கள் மாணவ மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு (Mass reading) நடைபெற்றது.கொளப்பலூர் MRS MATRICULATION HSc SCHOOL நிர்வாகம் அழைப்பின்பேரில் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கம் சார்பாக செயலாளராகிய பரமேஸ்வரன் செ ஆகிய நான் கலந்துகொண்டு கீழ்குறிப்பிட்டவாறு மாணவ,மாணவியருடன் தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் வாசிப்பு பற்றிய கலந்துரையாடல் நிகழ்த்தினேன். 





ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு 🙏
01-08-2025 இன்று கொளப்பலூர் MRS மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் காலை சரியாக 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன்  மாணவ,மாணவியர் ஒருங்கிணைந்த  வாசிப்பு நிகழ்வு  தொடங்கியது.

        சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் செயலாளர் செ.பரமேஸ்வரன் ஆகிய அடியேன் கலந்துகொண்டு சிறப்பித்தபோது........

 உரையாற்றிய நிகழ்வு ........
           என்னை நன்றாக இறைவன் படைத்தன‍ன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே....

         மதிப்பிற்குரிய எம்ஆர்எஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர்,இருபால் ஆசிரியப்பெருந்தகைகள் உள்ளிட்ட இருபால் மாணவர் சமுதாயம் அனைவருக்கும் முதற்கண் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.

                      மனித இனம் சுமார் 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது.நாடோடியாக அலைந்த மனிதன் தனது தேவைகள் போன்ற உணர்வுகளை ஒலிகள் மற்றும் சைகைகளால் வெளிப்படுத்தியவன் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு பேச்சுமொழி அறிந்தான்.தன் சிந்தனைத்திறனால் குடும்பம் அமைத்து சமூகமாக வாழக் கற்றுக்கொண்டு வேளாண்மை செய்துவந்தான்.மேலே,கீழே,முன்னால் என தன் தேவைகளை "ஆங்...,  ஈங்....,ஊங்."..., என ஒலியெழுப்பி சுட்டிக்காட்டிய மனிதன் , தன்னுடைய சைகையிட்ட ஒலிகளைக் கவனித்து  ஒலிப்பின் காலக்கழிவை உணர்ந்து 'ஆ, அ, ஈ, இ, ஊ, உ' என  எழுத்துக்களாகப் பிரித்தான்.

        மகிழ்ச்சிப்பெருக்கால் வெளிப்படுத்திய சிரிப்பை கவனித்தான். 'எ, ஏ' உயிரெழுத்துக்களையும் அறிந்தான்,

       துக்கத்தின் வெளிப்பாடாக 'ஓ' என ஒப்பாரியை வைத்தவன் அந்த ஒலியிலிருந்து  ஒ,  ஓ  எழுத்துக்களை அறிந்தான். 

    அ+இ இரண்டின் சேர்க்கை ஐ என்றும்,  அ+ உ இரண்டின் சேர்க்கை ஔ என்றும் வகைப்படுத்தி 

          குறுகிய நேரத்தில் உச்சரிக்கும் உயிர்க்குறில் எழுத்துக்களையும்,    நீண்ட நேரம் ஒலிக்கும் உயிர்நெடில் எழுத்துக்களையும் பிரித்தான்.
மேலும் சிந்தித்து தான் வெளிப்படுத்தும் ஒலிகளில் கவனம் செலுத்தியவன்  இடப்பிறப்பினையும்,முயற்சிப் பிறப்பினையும் அடிப்படையாக வைத்து ஒலிக்கும் தன்மைக்கேற்றவாறு  வல்லினம், மெல்லினம், இடையினம்  என மெய்யெழுத்துக்களையும் வகைப்படுத்தினான்.
பள்ளி மாணவர்களாகிய நாம் நமது அறியாமையால் தமிழ் இலக்கணம் மதிப்பெண் பெறுவதற்காக மட்டும் என்று கருதி அலட்சியப்படுத்தியதால் உயிர்க்குறில்,உயிர்நெடில் எழுத்துக்களை ஒரு மாத்திரை,இரண்டு மாத்திரை நேரம் அளவெடுக்க மறந்துவிட்டதன் விளைவு  

       இதுவும் எழுத்துப்பிழைகளுக்கு காரணமாக அமைகிறது.  வல்லினம் , மெல்லினம் மற்றும் மயங்கொலி எழுத்துக்களையும் ஒலிக்கும் வேறுபாட்டை கவனிக்கத்தவறியதால்  ல, ள, ழ,  ர, ற,  ந, ண, ன உச்சரிப்பிலும் எழுதுவதிலும் தவறுகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு மெய்யெழுத்துடனும் 12 உயிரெழுத்துக்களும் புணர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன.      அதாவது 18 மெய்யெழுத்துக்களுடன்  அ,இ,உ,எ,ஒ, ஆகிய ஐந்து உயிர்க்குறில் எழுத்துக்கள் புணர்ந்து 90 உயிர்மெய்க் குறில்களையும், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு உயிர்நெடில் எழுத்துக்கள் புணர்ந்து 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்களையும் உருவாக்குகின்றன.

     .இந்த எழுத்துக்களை பாடப்புத்தகத்திலோ ,அல்லது வாசிப்புகளிலோ குறில்,நெடில் உணர்ந்தும், வல்லினம்,மெல்லினம்,இடையினம் உணர்ந்தும் கவனமாக வாசித்து பழக்கப்பட்டாலே பெரும்பாலான எழுத்துப்பிழைகள் தவிர்க்கப்படும்.     அசை பிரிக்கும் பழக்கத்தை உங்களுடைய பெயரை பிரித்துப் பழகுங்க.     பாடப்புத்தகத்திலுள்ள சொற்களை அசைபிரித்து பழகுங்க.      குறில்,நெடில் பாகுபாடு அறிந்து வாசியுங்க. மெய்யெழுத்துடன் புணரும் ஒவ்வொரு உயிரெழுத்தும் துணையெழுத்து வடிவம் பெற்று அகரமேறிய மெய்யெழுத்துடன் முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும், இணைப்புக்குறிகளாகவும், இணைத்து அதாவது துண்டறிக்கையில் கண்டுள்ளபடி துணையெழுத்துக்களை நினைவில் நிறுத்தி எழுதுங்க. வாசியுங்க .இதுவே பெரும்பாலான எழுத்துப்பிழைகளையும்,சொற்பிழைகளையும் தவிர்க்கும்.
தமிழ்மொழி சொற்பெருக்கம்நிறைந்த இலக்கியங்களும்,இலக்கணங்களும் நிறைந்த தொன்மையான மொழி.
தமிழர் பண்பாடும்,நாகரீகமும் வளர,வளர அவைகளின் மாற்றங்களுக்கேற்றவாறு இலக்கணநூல்களும் மிகுதியாகத் தோன்றி தமிழ்மொழியின் வளத்தைப் பெருக்கியுள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தொல்காப்பியம் தொடங்கி சுமார் 60 க்கும் அதிகமான இலக்கணநூல்கள் இயற்றப்பட்டு தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கின்றன.அவைகளில் இன்றுவரை எல்லோரும் எளிமையாக புரிந்துகொள்ளும்வகையில் உள்ள இலக்கணநூல் பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் இலக்கணம் ஆகும்.
இவை தவிர நேமிநாதம்,தண்டியலங்காரம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கல விருத்தி,வீரசோழியம்,தொன்னூல் விளக்கம்,சுவாமிநாதம்,முத்துவீரியம் உட்பட பல இலக்கணநூல்களை புரட்டிப்பார்க்கும் வாய்ப்புஅடியேனுக்கு கிடைத்த‍து.🙏
       வாசிக்கும்போது நிறுத்தற்குறிகளின் முக்கியத்துவம் அறிந்து தேவையான இடத்தில் போதிய இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும்.இல்லையேல் வாசிப்பில் ஏற்படும்பிழையால் கேட்பவர்கள் சொற்பிழை ஏற்படுத்துவர்.

   உதாரணமாக...
(1) அம்மாநிலம் என்ற சொற்றொடரை 
அம்மா நிலம் என்று வாசிக்கக்கூடாது.
(2) குறுப்புதினம் -
 குறும்பு தினம் எனவும்,
(3) வரிக்குதிரை -
 வரிக்கு திரை எனவும்,
(4) செல்கையிலே -
 செல் கையிலே எனவும்,
(5) வரவேற்கிறது - 
வர வேற்கிறது எனவும்,
(6) தேவயானி - 
 தேவயா னி எனவும்,
(7) வாச ரோஜா - 
வா  சரோஜா  எனவும்,
கவனமின்றி பிழையாக வாசிக்கக்கூடாது.
ஒவ்வொரு எழுத்தின் ஒலிப்புமுறை மனதில் வையுங்க.
உயிரும் மெய்யும் கலந்த எழுத்து உயிர்மெய் என்பதை நினைவில் வையுங்க.
ஒவ்வொரு எழுத்து உச்சரிப்பின் காலக்கழிவே மாத்திரை என அளவிடப்படுகிறது.
தனி "ல"கரம், பொது "ள"கரம், சிறப்பு "ழ"கரம் ,
டண்"ண"கரம், தந்"ந"கரம், றன்"ன"கரம்,  இடையின "ர"கரம், வல்லின "ற"கரம் ஆகிய மயங்கொலி எழுத்துக்களை  சரியாக உச்சரித்துப் பயிற்சி செய்யுங்க.
மொழியும் ஒலிகளுக்கு கொடுக்கப்படும் வரிவடிவமே எழுத்து என்பதை அறிந்துகொள்ளுங்க.
பிழைகளைத் தவிர்க்க தினமும் தொடர்வாசிப்புப் பழக்கம் தேவை.
வாசிப்புத்திறனை மேம்படுத்து.
குறில்,நெடில் உணர்ந்து அதற்குரிய காலநேரத்தில் உச்சரித்துப் பழகு,
துணையெழுத்துகளை நன்கு மனதில் வைத்துக்கொள்,
மயங்கொலிப் பிழைகள் இல்லாமலிருக்க, வல்லினம்,மயங்கொலி எழுத்துக்களை சரியாக சொல்லுடைப்பு இல்லாமல் சரளமாக  உச்சரித்துப் பழகு,
நிறுத்தற்குறிகளின் அவசியம் அறிந்து வாசித்துப் பழகு.
என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் எல்லோரும் தமிழ்மொழி இனியமொழி,இனி தவறு இல்லாமல் வாசிப்போம்.தொடர்ந்து வாசிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.பிறகு ஐந்து நிமிடங்கள் தமிழ்பாடநூல் வாசித்தனர். "MRS பள்ளி முத்தமிழ் மன்றம்" தொடங்கப்பட்டது.
நாட்டுப்பண் இசைத்து வாசிப்பு முகாம் நிறைவடைந்தது.
 தகவலுக்காக...
பரமேஸ்வரன் செ.,
செயலாளர்,சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் மற்றும்

    அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கம்.
01-08-2025



09 ஜூலை 2025

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருது வழங்கும் 6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025

   "செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர்.

அனைவருக்கும் வணக்கம். 

                வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணிமன்றம் அறக்கட்டளையினர், 

ஆற்றல்மிகு 6ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவினை, 

வாசிப்போம்,சமூகத்தை நேசிப்போம்

                          என்னும் அறிவுசார்ந்த மக்கள்சிந்தனையில், 

                  திருப்பூர் மாவட்டம்,சீரங்கராய கவுண்டன்வலசு ரோட்டில் அமைந்துள்ள,R.P.S.மஹால் கல்யாணமண்டபத்தில் 

          2025 ஜூலை மாதம் 10ஆம்தேதி வியாழக்கிழமை இன்று தொடங்கி 14ஆம்தேதி திங்கட்கிழமைவரை

       மக்கள்சிந்தனையுள்ள சான்றோர்களின் 

               அறிவுசார் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா, நூல்வெளியீடு என  ஐந்துநாட்களும் அறிவுத்திருவிழாவாக நடத்துகின்றனர். .

     10-07-2025 வியாழக்கிழமை     இன்று தொடங்கிய புத்தகத்திருவிழாவிற்கு   வெள்ளக்கோவில் மகாத்மாகாந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு.இரா.ராஜ்குமார் அவர்களுடைய தலைமை வகித்தார். 

             வெள்ளக்கோவில் நகராட்சித்தலைவர், திருமதி.கனியரசி முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.,

புத்தகத்திருவிழாவினை காங்கேயம் சார்புநிலை நீதிமன்றம் நீதிபதி மாண்புமிகு  S.சந்தான கிருஷ்ணசாமிB.A.B.L., அவர்கள் தொடங்கி வைத்தார்.

             வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையாளர்.உயர்திரு.C.மனோகரன் அவர்கள் புத்தக முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  

       கோட்டாட்சியர்,வட்டாட்சியர், அரிமா சங்கம், மற்றும் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகிகளும்,ஆசிரியர்,பேராசிரியர் பெருமக்களும்,சமூக சிந்தனையாளர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் இருபால் மாணவர்கள் இருபால் பேராசிரியர்கள்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி நற்பணிமன்ற உறுப்பினர்களனைவரும் பங்கேற்கும்

 ' வெள்ளக்கோவில் வாசிக்கிறது' 

தலைப்பில் வாசிப்பைப் பரவலாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது.

தினந்தோறும் மாலை 6.30மணிக்கு நடைபெறும் அறிவுசார் நிகழ்வில்,

      சிறப்பு விருந்தினர்களாக,

          தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்,  மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள், 

        மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுத்தாளர்,முனைவர்.S.S.வைகைச்செல்வன் அவர்கள்,

        சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் மரியாதைக்குரிய தேவிபாரதி அவர்கள், 

         காந்தியச்செம்மல் மரியாதைக்குரிய தமிழருவி மணியன் அவர்கள்,

      புகழ்பெற்ற சொற்பொழிவாளர் திருமதி.சுமதிஸ்ரீ அவர்கள், 

    தீக்கதிர் ஆசிரியர்,உயர்திரு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள், 

      முதன்மைச்சேவகர்,மரியாதைக்குரிய K.அண்ணாமலை (Ex IPS) அவர்கள்,

         ஜெயா தொலைக்காட்சி புகழ் பட்டிமன்றப்பேச்சாளர் முனைவர்.கோ.பா.இரவிக்குமார்  அவர்கள் மற்றும் அறிவுசார் சான்றோர் மேன்மக்கள்

      ஐந்துநாட்களும்  கலந்துகொண்டு அறிவுத்திருவிழாவிற்கு பெருமைசேர்க்கின்றனர்.

தொடர்ந்து....

           கலைமாமணி,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையிலான குழுவினர்,

 'குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிவது கணவனின் வருமானமா? மனைவியின் நிர்வாகமா?' 

                என்னும் தலைப்பில்,சிந்தனையைத்தூண்டும் மாபெரும் சிரிப்புப் பட்டிமன்றம்  நடத்துகின்றனர்.வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில்  

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதுகள் கீழ்க்குறிப்பிட்டவாறு வழங்கி பாராட்டுகின்றனர்.

             ஆன்மீகச்செம்மல் விருது,

சிறந்த இயற்கைஆர்வலர் விருது,  

பாரம்பரியக்காப்பாளர் விருது,

மண்ணின் மைந்தர்கள் விருது, 

சிறந்த பள்ளிகள் விருது,

செயற்கரிய செய்பவர் விருதுஎன வழங்குகின்றனர்.

       செயற்கரிய செய்பவர்கள் விருது சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர்,உயர்திரு.தேவிபாரதி அவர்களுக்கும்,

உயர்திரு.செ.பரமேஸ்வரன்,   (அரசுப்பேருந்து ஓட்டுநர்-Rtd) சமூக ஆர்வலர்,இலக்கிய ஆர்வலர்,

சத்தியமங்கலம்,விதைகள் வாசகர் வட்டம்,செயலாளர்,

சத்தியமங்கலம்முத்தமிழ்ச்சங்கம்செயலாளர்,

அரியப்பம்பேரூராட்சி தமிழியக்கம் செயலாளர்,

ஆகிய அடியேனுக்கும் வழங்கப்படுகிறது.

 கடந்த  2 010ஆம் ஆண்டு 'கற்கும் பாரதம்'எழுத்தறிவு கலைப்பணி இயக்கத்தில் தொடங்கி,இன்றுவரை  15 ஆண்டுகால சமூகசேவை களை பட்டியலிட்டு கணக்கிட இயலாது.

காரணம்,

                   பணியிலிருக்கும்வரை தாளவாடி சென்று வாழ்வாதாரப்பணியான ஓட்டுநர்பணியை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கவேண்டிய  நேரத்தில் தாளவாடி வட்டாரத்திலுள்ள பள்ளிகளுக்குச் சென்று போதை தவிர்ப்பது, சாலைப்பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, இயற்கையைக்காப்பது பற்றிய விழிப்புணர்வு, கண்தானவிழிப்புணர்வுதருதல், இலவச கண்சிகிச்சைமுகாம் நடத்துதல், பொது மருத்துவமுகாம் நடத்துதல், தாளவாடி வனத்துறையில் இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி பொதுஇடங்களில்  மரங்களை நடுதல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அறிவயல்சார்ந்த விழிப்புரைகளைத்தருதல்,இலவசமாக சதுரங்கப்பயிற்சியளித்தல்,வானொலி வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் சமூக விழிப்புணர்வு வழங்குதல்,

       நடமாடும் மாணவர் நூலகம் தொடங்கி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பொதுஅறிவுப்புத்தகங்களை வாசிக்கத்தூண்டுதல், புத்தகத்திருவிழாக்களை நடத்துதல், தமிழ்இலக்கியம் சார்ந்த பணிகளைச்செய்தல்,என பல்வேறு சூழல்களிலும்  

        எனக்கு ஆதரவாக களமிறங்கி சமூகப்பணியாற்றியவர்களான  (1) தற்போது CPM (I)ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினராக இருந்துகொண்டு பவானிசாகர் மற்றும் புஞ்சைப்புளியம்பட்டி வட்டாரக்கமிட்டி &,தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தில் மாவட்டக்குழுவிலும் செயலாற்றிவருகின்ற  சமூக ஆர்வலர்  திரு.A.P..ராஜூ அவர்கள்,

(2)பாரதிபுத்தகாலயம்,ஈரோடுகிளைப்பொறுப்பாளர்

திரு.இளங்கோஅவர்கள்,

(3) சேலம் தோழா FM90.0 MHz இயக்குநர் திரு. R.V. முத்துசாமி அவர்கள்,

(4) பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலைய மேலாளர்.திரு.சங்கர் அவர்கள், 

(5)தாளவாடி தாலுக்கா சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, 

(6)கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, 

(7)சத்தியமங்கலம்  அரிமா K  லோகநாதன் Logu Driving School, விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர்எழுத்தாளர்.யாழினி ஆறுமுகம் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்,

(8)கல்வி உரிமைகளுக்கான மேம்பாட்டுமையத்தின் இயக்குநர் திரு.  R.கருப்புசாமி(READ) அவர்கள்,

(9) வேலூர் பல்கலைக்கழக வேந்தர் மதிப்பிற்குரிய கோ.விஸ்வநாதன் VITஅவர்கள் தலைமையிலான பன்னாட்டுத்தமிழியக்கத்தின் கிளையான அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கப்பொறுப்பாளர்கள் ,

(10) Rtnஆனைக்கொம்பு கல்யாண மண்டப உரிமையாளர்  Rtnஆனைக்கொம்புஸ்ரீராம் அவர்கள் தலைமையிலான சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் ,

(11)கரட்டூர் இளந்தளிர்நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட  பல தன்னார்வலர்களின் கூட்டுப்பணிக்கு வழங்கப்பட்ட விருது இன்று வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் எனக்கு வழங்கவுள்ள விருது, 

 "சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருதாக" அறிவிக்கப்பட்ட ,

     "செயற்கரிய செய்பவர் விருது" 



  

    





 

 

செ. பரமேஸ்வரன் (C.Parameswaran) ஆகிய அடியேனின் சமூகப்பணிகளில் சில...

2010ஆம் ஆண்டு...


 

 

ஆசனூர்,அரேபாளையம் ஊ.ஒ.ந,நி,பள்ளியில் அரிமா சங்கம் பாராட்டு 
12-0802010 
 
 

13-08-2010 தாளவாடி ஊ.ஒ.ந.நி,பள்ளியில்தொடங்கி21-08-2010வரை

, கற்கும்பாரதம்,எழுத்தறிவு இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துதல். 




































இன்னும்,இன்னும் நிறைய சான்றுகள் இனி தொடராகப்பதிவிடப்படும் ....



ஓரெழுத்து ஒருமொழி-

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

 

   ஓரெழுத்து ஒருமொழி ...
(1) அ - எட்டு, சிவன்,திருமால், நான்முகன், அசை, சேய்மை,திப்பிலி,
(2) ஆ - பசு,வியப்பு, சொல்,விடை, துன்பம்,
(3)இ - இங்கே, இவன்,அண்மைச்சுட்டு,
 (4) ஈ - அழிவு,கொடு, ஈ ,
(5) உ- சுட்டு , இருக்கும்,உமையவள்,
(6) ஊ - இறைச்சி, தசை,உண்ணல்,
(7) எ- குறி, வினா எழுத்து,
(8) ஏ - அம்பு,விளித்தல், மேல்நோக்குதல்,
(9) ஐ - ஐந்து, தலைவன், வியப்பு, அழகு,
(10)  ஓ - நீர்தாங்கும் பலகை, மதகு, வினா,
(11) ஔ - அழைத்தல்,தடை,பாம்பு,
(12) க - ஒன்று, உடல்,ஆன்மா,
(13) கா- காத்தல்,  அசைச்சொல், காவல், சோலை,
(14) கீ - தடை,தொனி,
(15) - கூ - கூவுதல், பூமி,
(16) - கை - கரம்,இடம்,ஆற்றல், உடலுறுப்பு,
(17) கோ - அரசன்,குயவன், தலைமை, இறைவன், தலைவன்,
(18) கௌ - வாயில் பிடித்தல், தீங்கு,
(19)  சா - சாதல், மரணம்,
(20) சீ - இகழ்ச்சி,சீழ், 
(21) சு- சுகம்,விரட்டுதல்,
(22) சூ - வானவகை,
(23) சே - எருது, உயர்வு,
(24) சோ - மதில்,நகர்,
(25) ஞா. பொருத்து,
(26) த - குபேரன்,,
(27) தா - கொடு,தருக, கேட்பது,
(28) தீ - நெருப்பு,
(29) து - அனுபவம்,  கெடு, பிரிவு, இறகு,
(30) தூ - தூய்மை,சீ,  வெண்மை,
(31) தே - தெய்வம்,மாடு,  நாயகன்,
(32) தை - தமிழ் மாதம்,தைப்பது,
(33) ந- மிகுதி,நகைத்தல்,
(34) நா - நாக்கு, சொல், மணி,
(34) நீ - உன்னை ,முன்னிலை,
(35) நே - நேயம்,அன்பு,
(36) நை - நைதல்,வருந்துதல்,
(37) நொ - நொண்டி, துன்பம்,
(38) நோ - நோய், 
(39) பா - பாட்டு, நிழல், அழகு,
(40) பூ - மலர், 
(41) பே - மேகம், நேர,
(42) பை - உறை, பசுமை,
(43) போ - செல்க,
(44) மா - பெரிய விலங்கு, மா மரம்,
(45) மீ - மேலே,உயரம்,ஆகாயம்,
(46) மூ - மூன்று,மூப்பு,
(47)  மே - மே மாதம், மேன்மை,மேல்,
(48) மை - கண்மை, அஞ்சனம்,இருட்டு,
(49) - மோ - மோதல், முகர்தல்,
(50) யா- மரம், அகலம்,
(51) வா - அழைப்பது,
(52) வீ - பூ, அழகு, பறவை,
(53) வை. - வைத்தல்,கூர்மை,
(54) வௌ-  கௌவுதல்,கொள்ளை அடித்தல்,

தமிழ் எண்கள் , நாமும் பயன்படுத்தலாமே

  அனைவருக்கும் 

வணக்கம்.

         உலகின் மிக மூத்த மொழியான தமிழ் எண்களை அனைவரும் பயன்படுத்த‍த்தொடங்கலாமே...

                   தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 

             10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

         தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது

        சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.

       உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி,

  ௨௲௪௱௫௰௩      என எழுதப்பட்டது.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று

௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண்     ௨௪௫௩     என எழுதப்படுகிறது . 

 தமிழ் எண்கள்..
௧ -   ஒன்று,
௨ -  இரண்டு,
௩  -  மூன்று,
௪ -   நான்கு,
௫ -  ஐந்து ,
௬ -  ஆறு,
௭ -   ஏழு,
௮ -  எட்டு,
௯ -  ஒன்பது,
௧௦ - பத்து.


              பழங்காலத்தில் தமிழ் எண்கள் இடம்சார்ந்து அதாவது தசம ஸ்தானத்தில் எழுதப்படாமல் தனித்தனிக் குறியீட்டுமுறையில் எழுதி வந்துள்ளனர்.
சுழியம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரேமேற்குறிப்பிட்டவாறு  இடமதிப்புமுறையில் எழுதப் பழகியுள்ளனர்.


பழைய குறியீட்டுமுறைப்படி எழுதப்பட்ட  தமிழ் எண்கள்


  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௱ = 100
  • ௱௫௰௬ = 156
  • ௨௱ = 200
  • ௩௱ = 300
  • ௲ = 1000
  • ௲௧ = 1001
  • ௲௪௰ = 1040
  • ௮௲ = 8000
  • ௰௲ = 10,000
  • ௭௰௲ = 70,000
  • ௯௰௲ = 90,000
  • ௱௲ = 100,000 (lakh)
  • ௮௱௲ = 800,000
  • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
  • ௯௰௱௲ = 9,000,000
  • ௱௱௲ = 10,000,000 (crore)
  • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
  • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
  • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
  • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
  •  நன்றி : விக்கிப்பீடியா தமிழ்த்தளத்திற்கு.

05 ஜூலை 2025

வந்தே மாதரம் தேசியப்பாடல்

 

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)

சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)


.

இந்திய தேசிய கீதம்

             இந்திய நாட்டுப்பண் 

      தேசிய கீதமானது இந்திய நாட்டுப்பண் ஆகும். இந்த தேசிய கீதத்தை பாடுவதற்கு மொத்தம் 52 வினாடிகள் ஆகும். தேசிய கீதம் பாடல் முதன் முதலில் கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். ஜனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. 

தேசிய கீதத்தை பாடும்போது ஆடாமல் நேராக நின்று மரியாதையுடன் பாட வேண்டும். 

தேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. 


ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹேஜெய ஹேஜெய ஹே,
ஜெய ஜெய ஜெயஜெய ஹே.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இந்திய தேசிய கீதம்....அனைவரும் நினைவில் வைத்திருப்போம்.

                                     தமிழ்த்தாய் வாழ்த்து 

     தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் என்பவராவார்.இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும். இது பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா என்ற பாவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ் தாய் வாழ்த்து பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழரான திரு. “மனோன்மணியம்” சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், “ஆரியம் போல தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை” என்கிற ஆட்சேபகரமான வரி நீக்கப்பட்ட பிறகே அதிகாரபூர்வ பாடலாக அறிவிக்கப்பட்டது.

முழு உண்மை பாடல் வரிகள்..! 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந்தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 

வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

     2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் “நீராரும் கடலுடுத்த” என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டாயம் பாட வேண்டும் எனவும். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் பொழுது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் 

 நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

 சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

 தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

 தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! 

தமிழணங்கே! 

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!


புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து..
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!


 

மாணவ,மாணவியர் ஒருங்கிணைந்த வாசிப்பு நிகழ்வு நம்ம கொளப்பலூரில்.....

  அன்பிற்கினிய தமிழார்வர்களுக்கு  வணக்கம். மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்   ஈரோடு மாவட்டம் முழுவதும் செ...