04 மார்ச் 2019

அபினந்தன்தான் முதல் F16 KILLER-03





இறுதி பாகம் -
 #War_against_terror
                         வானில் நடந்த விமான நாய் சண்டையில்.. ஒரு மிகவும் பழையதான மிக்-21 இரண்டாவது தலைமுறை விமானம், ஒரு ஐந்தாவது தலைமுறை விமானத்தை தாக்கி அழித்தது அமெரிக்காவிற்கும், அதன்.. ராணுவ விற்பனைக்குமே அந்த ப்ளேனின் புகழுக்கும் மரண அடி. 

                 ஈராக் போரில்.. டுல்லி என்ற F-16 விமானி, ஆறு SAMகளிலிருந்து அதாவது தரையிலிருந்து விமானத்தை தாக்க வந்த
மிஸ்ஸைல்களிடமிருந்து தப்பினார். ஒவ்வொரு மிஸைலிடம் இருந்து தப்பிக்க அதிகமில்லை ஜென்டில்மேன்.. ஜஸ்ட் ,நான்கே வினாடிகள்தான் -  ரியாக்‌ஷன் டைம். அப்படியே செங்குத்தாய் தடம் மாறி தப்பித்தது எப்-16இன் புகழ் . அவர் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கும் வீடியோ அதி வீரமான, திகிலான வீடியோ நடுங்க வைக்கும்.இதை ஏன் சொல்கிறேன் என்றால்..


 இதுவரை F-16ஐ யாரும் வீழ்த்தவே இல்லை. 
அபிதான் முதல் எப்-16 கில்லர். 

பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவிற்கும் அசிங்கமாகி டென்ஷனான விஷயம் கூட இதுதான்.
அபினந்தன் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டது.. இந்திய அரசுக்கும், ராணுவத்திற்கும்.. தெளிவாகத்தெரியும். எப்படி என்கிறீர்களா..? சிம்பிள்.. முதலில் இந்திய அரசு செய்தியில்.. ஒரு மிக்-21 பைசனும், விமானியும் காணவில்லை என்று ஒரு வரி மட்டும் செய்தி போட்டு திரையை போட்டுவிட்டார்கள் இந்திய தரப்பில்.. ஆனால் எப்படி டிப்ளமேடிக் பிரஷர் தந்தார்கள் என்பதை பார்க்கலாம்...

                அபியை விட ஒத்துக்கொள்ள பல காரணங்கள் அதில் முக்கியமானவைகள்... இவைகளும் கீழே.

முதலில்...
சௌரவ் காலியா என்ற இந்திய வீரரை தெரியுமா.. ? கார்கில் போரின்போது உயிரோடு இருக்கும்போதே, கண்ணை தோண்டி, ஆசனவாயில் கண்ணாடியை சொருகி.. கொலை செய்த விஷயம் கேட்ட போது கண்ணீரில் மிதந்தேன். கொலை காண்டு பாக் மேல் வந்தது. அதனால் அப்படியே அபி இல்லை எங்களிடம் இல்லவே இல்லை என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால்.. பாகிஸ்தானின் மேஜர் ஜென்ரல் அசீப் கஃபூர் தன் ட்விட்டர் பகுதியில்.. அபி அடிவாங்கியது, விசாரணை, சாய் வீடியோ எல்லாவற்றையும் பகிர்ந்ததில்.. உலகமே வேறு அதை பார்த்துவிட்டபடியால். பாக்.. ஒற்றை வழிப்பாதையில் போய் மாட்டிக்கொண்டுவிட்டது.
இந்தியா எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை.. மூடிட்டு விமானியை விடு என்று மட்டும் சொல்லவில்லை.. மற்றபடி ஆல்மோஸ்ட் அதுமாதிரிதான் அதன் அணுகுமுறை கூட..இருந்தது.

இரண்டாவதாக.......
                     பாக்கிற்கு நாக்கில், பேக்கில் எல்லா இடத்திலும் சனி. இந்தியா பால்கோட்டில் தாக்கியதில்.. எப்படி 300 பேர் என்று சொன்னார்கள் தெரியுமா..? அடர்ந்த வனப்பகுதிக்குள், ஒரு முகாமினுள்.. 300 ஆக்டிவான மொபைல்கள். இதை ஆராய்ந்தது NTRO National Technical Research Organisation. யாருமே இல்லாத காட்டின் நடுவில்.. 300 மொபைல்கள் எப்படி ஆக்டிவ் ஆக இருக்க முடியும். ஒரு கிராமத்தான் என்றது பாகிஸ்தான்!.....கிராமத்தானிடம் 300 மொபைல் இருக்குமா? அல்லது அங்கு பத்து பேர் தலா 30 மொபைல் வைத்திருக்க முடியாது. இதை ஆராய்ந்த இந்திய இன்டெல்.. இதன் பேச்சுகளை, யார் என்ன பேசினார்கள் என்பதைக்கூட கேட்டிருக்க முடியும். IAF.. பாம் போட்டுவிட்டு வரத்தான் முடியும். பிணத்தை எண்ணிக்கொண்டிருக்க முடியாது. இதைத்தான் ஏர் சீப் மார்ஷலுமே சொன்னார்.
பாகிஸ்தான் உடைந்த மரங்களை, தகர்ந்த பாறைகளை காட்டி எதுவும் நடக்கவில்லை, ஆனால் இயற்கையை அழிக்க முயன்றதால் இந்தியா மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. வழக்கு போட்டால்.. அதன் கோவணம் கழன்றுவிடும் என்று அதற்குமே நன்றாகத்தெரியும். சரி..

மூன்றாவதாக.....
                 ஒரு தகரத்தை.. ஆர்மி அதிகாரிகள் டீவியில் காட்டியபோது.. பாகிஸ்தான் நக்கலாய் சிரித்தது. ஆனால் முதல் ஆப்பே பாக்குக்கு அதுதான். பாகிஸ்தானின் F-16 போட்ட ஒரு AIM120-AMRAAM மிஸ்ஸைல் ஆளில்லா இடத்தில் இந்திய காஷ்மீரில் விழ.. அந்த தகரத்தை பொறுக்கி பாக் எஃப்-16 விமானத்தை வைத்து இந்திய ராணுவம் மீது உபயோகித்தது.. அதாவது எங்கள் ராணுவ தளத்தை தாக்கியது.. எல்லையை மீறியது என்ற செய்தி உலகெங்கும் போனது. அஜித் தோவல்.. அமெரிக்க செக்ரெட்டரி மைக் போம்பியோவிடம் இந்த தகவலை உடனடியாய் கொடுக்க.. அமெரிக்கா தன் டேட்டாபேஸில் இதன் விவரங்களை தேடியது.. அந்த தகரம்.. பல வில்லங்களை அமெரிக்காவில் எழுப்பியது. அது தைவானுக்கு விற்றதாய் செய்தி வெளியானது.. தைவான் என்னிடம் அதற்கு தேவையான ஏரோப்ளேனுமில்லை, மிஸைலுமில்லை போய்யா? புளுகாதே! என்றது. அமெரிக்காவில் யாரோ ஜிங்கிடி வேலை பண்ணி பாகிஸ்தானுக்கு இதை அனுப்பியதில் அங்கு பூகம்பம். உண்மையில் பாகிற்கு 500 மிஸைல்கள் ரேய்தான் 17/11/2006 விற்ற ஸ்கீர்ஷாட் இணைத்திருக்கிறேன்.. இதை விற்றது தீவிரவாதிகளை அழிக்க, இந்தியாவை அல்ல. இப்போது வசமாய் ஆப்பில் பாக் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

நான்காவதாக...
                பாகிஸ்தான் அதைவிட கேவலமான ஒரு பொய்யை சொல்லியது. இந்த மிஸைலை நாங்கள் சீன ப்ளேனில் ஃபிட் பண்ணினோம் என்றது. F-16 ஐ வைத்து நாங்கள் இந்தியாவை மிரட்டவில்லை என்றது.. ங்கொய்யால.. இப்படி மாட்ட என்ன சைக்கிள் செயினா இது..? OEM-அதாவது ஒரிஜினல் எக்விப்மென்ட் மான்யூபேக்சுரரின் சோர்ஸ்கோடில் மாற்றம் பண்ணினால்தான் சீன ப்ளேனில் KLJ-7 சீன ஃப்யர் கன்ட்ரோல் ரடாரோடு இணைக்கவே முடியும்..
                      ரேய்தான் என்கிற அமெரிக்க கம்பெனி.. அண்ணாச்சி.. இது எப்ப..? என்று திருப்பி கேட்க
            பாக்குக்கு.. பேதியானது.. பாக்கிற்கு அனேகமாய் ராணுவ தளவாடங்கள் அமெரிக்காவிலிருந்து இனி கிடைக்க தடை வரலாம்.. வரும்..

ஐந்தாவதாக.....
            மிக மிக முக்கியமான ஒன்று..
கடைசியாக மூன்று ராணுவதளபதிகள் சேர்ந்து எப்போது மக்களிடம் பேசினார்கள்..? கார்கில் போர்1999.. அதற்கு முன்.. 1971 பங்களாதேஷ்
போர் சமயத்தில்.. இதற்கு அப்புறம் பயத்தில் பாக் கெஞ்சாமல் கொஞ்சவா செய்யும்.

ஆறாவதாக..
                    ராஜாங்க ரீதியாக.. வெளிநாடுகளான.. ப்ரான்ஸ், ஜப்பான் , அமெரிக்கா.. ரஷ்யா.. எல்லாம் பாக்கை கண்டிக்க, சீனா சைலன்டாக இருந்தது..
 இது போதாதா என்ன..? அபியை விட..?

                   கடைசியாய் நீர்மூழ்கிகள் க்வாதர், கராச்சி பக்கம் நிறுத்த அரபிக்கடலில் நகர.. கப்பற்படை அரபிக்கடலில் வியூகமாய் நகர ஆரம்பித்ததை பாக் பயத்துடன் பார்த்திருக்கலாம். இதை வைத்தே பாதி பாக்கையே அழிக்கலாம்.
 இரவின் முன் பகுதியில் ஆர்மி ட்ரஸ் போட்டுக்கொண்டு போன அபி.. ப்ளேசரில் வந்து சேர்ந்ததை பார்த்த சந்தோஷத்தில்.. இந்தியன் பிஸ்ட்ரோவில் ஒரு எக்ஸ்ட்ரா நான் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டதில் சந்தோஷமான சுகம் புதிய வலிமையான பாரதம் பிறந்து விட்டதற்கு..கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுவிட்டு தூங்க வீட்டுக்கு திரும்பினோம்.
 



தகவல் உதவி ;
facebook / prakash Ramasamy 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...