04 மார்ச் 2019

அபினந்தன்தான் முதல் F16 KILLER-01

புல்வாமாவில் ராணுவ வீரர்களை தீவிரவாததற்கொலையாளன் தாக்கியபிறகு நடந்த விபரங்களை பார்ப்போம்.....

 அரசியலாய் பார்க்காமல் ராஜாங்க ராணுவ ரீதியில் என்ன நடந்தது..?
முதலில் ஒரு கேள்வி..

                       நம்மில் எத்தனை பேருக்கு செஸ் பிடிக்கும்..? அதை விளையாட எத்தனை பேருக்கு தெரியும்..? ஏன் பிடிக்காது..? அல்லது பிடிக்கும்..?

                    அத்தனை ராஜதந்திரம் மற்றும் nerve நிரம்பிய இந்த செஸ், ரொம்ப emotive ஆனது கூட.. ஆனால் பலருக்கும் பிடிக்காது.. 

                   காரணம் நிறைய மூளையை உபயோகித்து விளையாட, புரிந்துகொள்ள வேண்டியதால். 


                      ஆனால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் எல்லோருக்குமே பிடிக்கும்.. இதில் மூளை உபயோகிப்பது உண்டு. ஆனால் அதிகம் நமது உடலைத்தான்.. செஸ்ஸூக்கு நேர் எதிர்மறை.


                     செஸ் போலத்தான் ராஜதந்திர நடவடிக்கைகள் கூட. இந்த அபி விஷயத்தில் கூட.. எல்லாம் நம் கண்முன்னால் பத்திரிக்கைகளில், வலைதளங்களில் கிடைத்தாலும் அத்தனையையும் கண்டுகொள்ளாமல் கடந்து போனோம்.
ராணுவ..ராஜதந்திர நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அப்படி என்னதான்  கிழித்தார்கள்..? It was another day in their office. சரி..  புல்வாமாவில் இருந்து ஆரம்பிப்போமா..?

                  புல்வாமா நடந்ததில் நிஜமாய் ஆடிப்போனது இந்திய தேசம். இதை அரசியல் ஆக்க முனைவது அயோக்கியத்தனம். அடுத்து ஸ்ட்ராடஜிக்கலாய் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல விஷயங்கள் நடந்தது. துருப்புகள் இனி விமானத்தில் கொண்டு செல்லப்படுவார்கள் என்பதில் ஆரம்பித்து..பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை பிடித்ததில் பல விஷயம் தெரிய வந்தது. நிற்க.

                 இஸ்ரோவால்.. 87 சதம் பாக்கை விண்வெளியிலிருந்து கண்காணிக்க முடிந்தது. வீட்டு தாழ்வாரம், மனித நடமாட்டம் எல்லாமே. இதற்கு காரணம் ''கார்டோசேட்,-2C,'' இந்த விண்கலம் 526 கிலோ மீட்டர் உயரத்தில் நின்றுகொண்டு 14 அண்டை நாடுகளை நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கிறது... இதன் ஸ்பேஷியல் காமெராக்கள் வீடுகள் கட்டிடங்களை சில மீட்டர் தொலை வரை ஹை-ரெசொல்யூஷனில் படமெடுத்து தந்துகொண்டே இருக்கிறது.
பாகிஸ்தானோ. சைனாவின் உதவியால் இந்திய படங்களை வாங்கிக்கொண்டு இருக்கிறது. இந்திய ராணுவ நகர்வுகளையும் வியூகங்களையும் இப்படித்தான் கண்காணிக்கிறது.
சீனாவை மனதில் வைத்து, அமெரிக்கா இந்தியாவுடன் பல இமேஜ்களை, தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. அப்படி இஸ்ரோ தகவல்களை அதாவது மசூத் அசரின் தீவிரவாத பள்ளிகளை.. இஸ்ரோ தர, அமெரிக்க. இஸ்ரேல் மற்றும் ஒரு நாட்டின் உளவுத்துறைகளின் தகவல்களை ஒருங்கிணைத்து ரெடி ஆனது.
ஆனால்.. தரையில் இருந்து (இவர்கள் பாக்கினுள் இருக்கும் உளவாளிகள் அல்லது கான்ட்ராக்டர்கள்) உறுதியான தகவல்கள் வந்த பின்னரே இந்த co ordinates ஏவுகணைகளில் மனனம் செய்யப்படு லேசரால் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இது அனைத்துமே.. ராணுவத்திடம் முழு பொறுப்பை ராணுவ மந்திரி பொறுப்பை தந்தவுடன்..சுறுசுறுப்படைந்தது இந்திய ராணுவம்...........

Day 1, 2019 Feb-15
இந்திய தேசம்.. சோகத்திலிருந்து கோபத்திற்கு மாறியது. எப்படி இத்தனை உயிரிழப்புகள்..? என்ன ஆச்சு இன்டலுக்கு..? கஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்.. இது பாதி இன்டெல் ஃபெயிலியர்தான். ஆனால்.. எங்களால் சரியாக இத்தனை வெடி மருந்தை ஏற்றியதும்.. அதை இயக்க வைத்து ஆர்மி வண்டியின் பாதை எதிரே வந்ததை தடுக்க இயலாததும், எங்களின் தவறுதான். இதற்கு மேல்.. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்மி தலைமைகள் முடிவு செய்தார்கள்.
இரண்டு சிக்கல்கள்.
 (1)இந்த ராணுவ நடவடிக்கையை வெளியில் தெரியாமல் செய்து முடிக்க வேண்டும்.
 (2) எப்படியான தாக்குதல்..?

Day -2 February 16 (2019)
மூன்று ராணுவ தலைமையைம் சேர்ந்து முடிவு செய்து.. பிரதமரிடமும், ஆலோசகர்..அஜித் தோவலிடமும், தந்தபின் இதற்கான கடைநிலை பணி வரை முடிவானது. அற்புதமான clock work. எங்கெங்கு தாக்குதல்.. எத்தனை பாக் போஸ்ட்டுகளை பிடிக்க வேண்டும் என்று.. ஆனால்.. இதை அரசு நிராகரித்து பால்கோட் மற்றும் இரண்டு இடங்களிலும்.. மிலிட்டரி மற்றும் சிவில் இடங்களின் மீது தாக்குதல் இல்லாமல்.. விமான படையை உபயோகித்து என்றும், முடிவானது.. விமானப்படை பத்து நாட்கள் அவகாசம் கேட்டது. சரி என்று அனுமதி தரப்பட்டது. இந்தியன் ஆர்மி பாகிஸ்தான் ஆர்மியை பிசியாக வைத்திருக்க எல்லையில் ஷெல்லிங் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கவும் முடிவானது. 2001ல் செய்தது போல் க்வாதர், கராச்சிக்கு அருகில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தவும், இது பாக்கை திசை திருப்பவும் தேவை என்றும் முடிவானது.
மொத்த தாக்குதலும் குறைந்த நேரத்திலும், எளிதான, அதிகம் காவல் உள்ள மேற்கு எல்லையை எப்படி கடக்கலாம், எந்த நேரம்.. பாகிஸ்தானுக்கு தெரியாமல் எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று துல்லியமாய் நிமிடத்திற்கு நிமிட ஆபரேஷன் ப்ளான் முடிவானது. முசாபராபாத்தில் ஒரு இடத்தில் பாக்கின் உள்ளே நுழையவும் முடிவானது..
பாக் ரேடாரின் ரெஸ்பான்ஸ் டைம்..இந்திய ட்ரோன்கள் மற்றும் ரா வின் தகவல்களால் நிரப்பப்பட்டது.. எல்லையில் உள்ள விமானதளங்களை பாக் 24 மணிகளும் கண்காணித்துக்கொண்டிருந்ததால்.. க்வாலியர் தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. க்வாலியரில் மிராஜ்-2000 ஸ்க்வாட்ரன் நிறுத்தப்பட்டுள்ளது. அதை வைத்தே பாக்கை சார்த்த முடிவானது.
ஆக்ராவிலிருந்து IL-78 ப்ளேனை ரி ஃப்யூலிங்க் வானத்தில் இருந்து செய்ய முடிவானது. பஞ்சாபின் படிண்டாவிலிருந்து்AWAcCS கண்காணிப்பு விமானத்தை ரெடியாக்க முடிவானது. Sukhoi-30 ஐ ஹரியானாவில் உள்ள சிர்ஸா ஏர்பேஸில் இருந்து புறப்படவும் முடிவு செய்யப்பட்டது.
Day-4 February 18.
NSA விடம் ஐந்து இலக்குகளை தந்தது ராணுவம். முஸாபராபாத், சகோதி, பாலகோட் மட்டுமே போதும் என்று முடிவானது.
Day-5 February 19.
Operational clearence தரப்பட்டது. ஆனால், மிக துல்லியமாக ஆணை தரப்பட்டது. அதிகமாக பாக் உள்ளே போக தேவையில்லை. அதிக பட்ச விமான மற்றும் உயிர்சேதங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. லேசர் துணையோடு க்ரிட் லாக் செய்யப்பட்ட ஏவுகணைகளை.. தூரத்தில் இருந்து விட முடிவானது. தரையில் பொருட்கள் நகர ஆரம்பித்தது.
Day-10 February 26. D Day.
EMB-AWB எம்ப்ரேர் உளவு விமானம் துல்லியமாய் அதிகாலை 1-00 மணிக்கு படின்டா பஞ்சாபில் இருந்து டேக் ஆப் ஆகியது.
IL-78 மிகச்சரியாக 2.00 மணிக்கு ஆக்ராவில் இருந்து டேக் ஆகியது.
அதே சமயத்தில் குவாலியரில் இருந்து.. 6 மிராஜ்-2000 ப்ளேன்கள் பறக்க ஆரம்பித்தன. இரண்டு இரண்டாய் மூன்று ஃபார்மேஷன். Laser pods மூலம் தகர்க்க திட்டமிடப்பட்டது.
4 sukhoi 30 MKI விமானங்கள் துரத்தி வரும் பாக் விமானங்களை தாக்கவும்.. நம் இந்திய விமானங்களை காப்பாற்றவும் மிகச்சரியாய் மூன்று மணியளவில் வானில் எல்லைக்கருகில் பறக்க ஆரம்பித்தது.
எல்லா இந்திய ஏர்பேஸ்களுமே அலர்ட்டில் வைக்கப்பட்டு இருந்தன. மிராஜ் விமானங்கள் க்வாலியரில் இருந்து கிளம்பி... சிர்ஸா மேல் பறந்து இன்னும் வடக்கு போய்.. ஒரு யூ டர்ன் அடித்து பாக் உள்ளே நுழைந்தது. அல்ட்ரா மாடர்ன் அல்காரிதங்கள் ப்ளேனிலிருந்து ரடாரின் சிக்னல்களை செயலிழக்க செய்தது.. இந்தியாவின் இன்னொரு மைல்கல்..
முஸாபராபாத், சகோதி, பாலகோட்டின் மீது தாக்குதல் நடத்தியது. மொத்த மிஷன் 19 நிமிடங்கள். பாலகோட் மீது 3.45 முதல் 3.53 வரை, முஸாபராபாத் மீது 3.48 முதல் 3.55 சகோதி மீது 3.58 முதல் 4.04 வரை தாக்குதல்கள்.
திரும்பி வரும்போது.. ப்யூயல் டாங்கை கழற்றிவிட்டு எல்லாம் விரைவில் சேர்ந்து வரும் ஃபார்மேஷனை பார்த்து...scramble பண்ணிய F-16 பாக் பேஸ்க்கு வாலை சுருட்டிக்கொண்டு திரும்பியது.
இதனால் பெருத்த அவமானப்பட்ட பாக்கிற்கு துக்கம். .....
 ட்விட்டரில் எதேச்சையாக கவனித்ததில்.. ஒரு விமான மானிட்டர் ஹான்டில் மட்டும்.. இந்திய போர் விமானங்கள் பாக்கிற்குள் செல்கிறதே இந்த நேரத்தில் என்று அலறியதை பார்த்தேன். அது ஃபேக் (போலியானது) என்று தாண்டிப்போனதும் வேடிக்கை.
1999 கார்கில் போர் சமயத்தின் போது கூட எல்லை தாண்டாத இந்திய விமானங்கள்  காஷ்மீர் தாண்டி பாகிஸ்தானின் பக்தூன்வாலாவில் குண்டு போட்டது தான்   NEW NORMAL INDIA. புதிய வலிய பாரதம்.

அடுத்த பாகத்தில்
அபிநன்தனின் ராணுவ சாகச டீடெயில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...