12 அக்டோபர் 2024

கிறிஸ்துவம்,முஸ்லீம் மத‍ங்களிலும் சாதிப்பிரிவினை உண்டு....

  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

 மனித இனத்தில் அழிக்கமுடியாத பெரும்நோய்கள் சாதிப்பாகுபாடு....

 QUORA -இணைய பக்கத்தில் கிடைத்த தகவலை கீழே பகிர்ந்துள்ளேன். வாசியுங்க...

  1. உயர் ஜாதியினரின் இறுதி சடங்கு நடை பெறும் இடத்தில் கீழ் ஜாதியினருக்கு இடம் தர மறுப்பது.
  2. உயர் ஜாதியினரை எதிர்த்து கீழ் ஜாதியினர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை கொலை செய்வது.
  3. உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த தமக்கு அதே உயர்ஜாதியை சேர்ந்த மணமகன்/ மணமகள் தேவை என்று திருமண விளம்பரம் கொடுப்பது.

இவை அனைத்தும் ஹிந்து மதத்தில் நடைபெறுகிறது என்று நினைத்தால் நிற்க. இது போன்ற ஜாதி கொடுமைகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களிடையே உண்டு.

பொதுவாக ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி பிரிவினை உண்டு என்றும் ஏனைய மதத்தில் ஜாதிகள் இல்லை, பிரிவினை மட்டுமே உண்டு என்ற ஒரு தவறான எண்ணம் பலரிடம் உண்டு. இதே கேள்விக்கு அதே மாதிரி பதில்களும் சிலர் அளித்திருக்கின்றனர்.


இந்தியாவில் 85% இஸ்லாமியர்கள் கீழ் ஜாதி என்று அழைக்கப்படும் பஸ்மன்டாஸ் (Pasmandas) குழுவை சார்ந்தவர்கள், 15% இஸ்லாமியர்கள் உயர்ந்த ஜாதி என்று அடையாளம் காணப்படும் அஷ்ரப் (Ashraf) குழுவை சார்ந்தவர்கள்.

இஸ்லாமில் உயர்ந்த ஜாதி - சயீத், மாலிக், ஷேக், முகல், பதான், ரன்கட் (Rangad) முஸ்லீம் ராஜ்புட் etc

இஸ்லாமில் கீழ் ஜாதியினர் - அர்சல் (Arzal) தலித் இஸ்லாமியர்கள்.

இஸ்லாமில் பின்தங்கிய ஜாதியினர் - அஜ்லப் (Ajlaf)


அம்பேத்கர் அவர்களும் "Thoughts on Pakistan" என்ற புத்தகத்தில் இஸ்லாம் மதத்தின் ஜாதிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். Thoughts On Pakistan (பக்கம் 225-226)


உயர் ஜாதி இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யப்படும் இடுகாட்டில் கீழ் ஜாதி இஸ்லாமியர்களுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. Backward Muslims protest denial of burial


உயர்ஜாதி இஸ்லாமியருக்கு உயர்ஜாதி மணமகள் தேவை என்ற நாளிதழ் விளம்பரம்.


டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகியவை உயர்ஜாதி இஸ்லாமியர்கள் பிடியில் உள்ளது என்றும் பல்வேறு கீழ் ஜாதி இஸ்லாமியர்கள் சாதி அடிப்படையில் அவமானம், அவமரியாதை மற்றும் வன்முறையை அன்றாடம் சந்திக்கின்றனர் என்று கீழ் ஜாதி இஸ்லாமியர்களின் நல்வாழ்வுக்காக போராடி வரும் அன்வர் அலி அவர்கள் தனது புத்தகமான Maswat Ki Jung என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். Masawat Ki Jung [Paperback] [Jan 01, 2005] Ali Anwar - Ali Anwar

The Pasmanda movement castigates Muslim minority institutions, particularly, Aligarh Muslim University (AMU) and Jamia Millia Islamia (JMI). Pasmanda activists say that since the inception of AMU, upper-caste Muslims have occupied all the important positions in the university. It was established for the Shahzadas (princes), not for the poor and backward Muslims, they say and add that Sir Syed, the founder, was not supportive of education for women and backward Muslims. They say, in post-Independence India, upper-caste Muslims have taken over these institutions in the name of minority rights. - Pasmanda movement questions the myth of a monolithic Indian Muslim identity


பதானி என்ற ஆடையை ஒரு தலித் அணிந்த போது ஜாதியின் காரணமாக என்ன நிகழ்ந்தது என்று இங்கு காணலாம்.

“You belong to lower caste and should not wear a pathani.” They further threatened to kill Bhati if he dared to wear a ‘pathani’ again.

Police have booked Amjad Pathan and Azgar Pathan for beating up Jayanti Bhati (27), a truck driver, on afternoon of November 26 near Green Palace hotel in Gandhidham.

Casteist rage: Dalit man thrashed for wearing ‘pathani’, two booked | Rajkot News - Times of India


காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கீழ் ஜாதி இஸ்லாமியர்களுக்கு பெரும்பாலும் வழங்குவதில்லை, மாறாக உயர்ஜாதி இஸ்லாமியர்களுக்கே வழங்குகிறது. சுதந்திர இந்தியாவில் நடந்த 14 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 400 இஸ்லாமியர்களில் 340 பேர் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. Reservation for Muslim Backwards, The Milli Gazette, Vol.5 No.22, MG116 (16-30 Nov 04)

அதாவது 2% உயர் ஜாதி இஸ்லாமியர்கள் 85% இடங்களையும். 12% கீழ் ஜாதி இஸ்லாமியர்கள் 15% இடங்களையும் பெற்றனர்.


இஸ்லாமியர்களிடையே உள்ள ஜாதி பாகுபாடு துன்பத்தை அளிக்கிறது என்றும், அதை சீர்திருத்தம் செய்ய அவர்களுக்கிடையே ஓர் இயக்கம் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், ஹிந்துக்களுக்கு இடையே இத்தகைய தீமைகள் இருந்தாலும், அவர்களில் சிலர் அதன் இருப்பை அறிந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் அவற்றை அகற்றுவதற்காக தீவிரமாக போராடுகிறார்கள், மாறாக இஸ்லாமியர்கள் தங்களுக்குள் நிலவும் ஜாதி பாகுபாடு என்ற தீமையை உணரவில்லை, அதன் விளைவாக அவர்கள் அதை அகற்றுவதற்கு போராடுவதற்கு பதிலாக தற்போதுள்ள நடைமுறைகளில் எந்த மாற்றத்தை செய்வதற்கும் இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

The existence of these evils among the Muslims is distressing enough. But far more distressing is the fact that there is no organized movement of social reform among the Musalmans of India on a scale sufficient to bring about their eradication. The Hindus have their social evils. But there is this relieving feature about them—namely, that some of them are conscious of their existence and a few of them are actively agitating for their removal. The Muslims, on the other hand, do not realize that they are evils and consequently do not agitate for their removal. Indeed, they oppose any change in their existing practices.

—From Pakistan, or the Partition of India - B.R. Ambedkar -pp. 218-223

BR Ambedkar: In his own words

தற்போது அலி அன்வர் போன்ற சிலர் பஸ்மன்டா குழுவினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தாலும், இஸ்லாம் மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை களைய அவர்கள் செல்லவேண்டிய தூரம் மிகவும் அதிகமாக இருக்கிறது.


இந்து மதத்தில் 4 ஜாதிகள் உள்ளதை போல் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மதத்திலும் 4 பிரிவுகள் உள்ளதாக சொல்கின்றனரே உண்மையா?

கிறிஸ்துவ மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை மற்றொரு நாள் காணலாம், அங்கும் ஜாதிகள் இல்லாமல் இல்லை, தலித் கிருஸ்தவ மதத்திலும் உள்ளனர்.

ஹிந்து மதத்தில் மட்டுமல்ல கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மதத்திலும் ஜாதி பிரிவினைகள் உண்டு.

எந்த மதமாக இருந்தாலும் ஜாதி பிரிவினைகள் ஒழிய வேண்டும்.

02 அக்டோபர் 2024

போதை தவிர்ப்போம், சாலைவிதிகளை மதிப்போம், தற்கொலை எண்ணங்களை கைவிடுவோம்- நம்மைநாமே காப்போம்.

                             போதை தவிர்ப்பு விழிப்புணர்வுபிரச்சாரம்...



    அக்02  தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு 

போதைப்பொருட்கள் தவிர்ப்போம்,

சாலைவிதிகளை மதிப்போம்,

தற்கொலை எண்ணத்தை கைவிடுவோம்,

நம்மை நாமே காப்போம்....

ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம்  உட்கோட்டக் காவல்துறையுடன் கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் 

            விழிப்புணர்வுபிரச்சாரம்...

    02-10-2024 & 03-10-2024 புதன்கிழமை,வியாழக்கிழமை...இன்றும் நாளையும் 




மேற்கண்ட துண்டறிக்கையின்படி 

02-10-2024 புதன்கிழமை

காலை 8.30 மணி தொடங்கிவைப்போர்......

சிறுவலூர் பேருந்துநிறுத்தம்.



தலைமை: திருமிகு.S.இராஜமாணிக்கம் அவர்கள்,காவல் உதவி ஆய்வாளர்,சிறுவலூர் காவல்நிலையம்.



முன்னிலை: திருமிகு.MG (எ) K.P.முத்துச்சாமி அவர்கள் மற்றும்.

(தேனீ) A.பார்த்திபன் அவர்கள் மற்றும் சிறுவலூர் முக்கிய பிரமுகர்கள்.








தொடர்ந்து நாளை.......

            இரண்டாவது நாளான  03-10-2024வியாழக்கிழமை,

கொளப்பலூர் பேருந்துநிலையம்,காலை 8.00 மணியளவில்..

தலைமை: திருமிகு.அன்பரசுஆறுமுகம்.MBAஅவர்கள்,

கொளப்பலூர் பேரூராட்சி மன்றத் தலைவர்.

முன்னிலை: திருமிகு.K.S.தங்கராஜ் அவர்கள்,

கொளப்பலூர் பேரூராட்சிமன்ற  துணைத் தலைவர்.

திருமிகு.MG (எ) K.P.முத்துச்சாமி அவர்கள்,

மரமே வளம் இயக்கம் நிறுவனர்.

திருமிகு.(தேனீ) A.பார்த்திபன் அவர்கள் ,

நூலக வாசகர் வட்டத் துணைத்தலைவர்,

திருமிகு. ராமன் அவர்கள்,(பெற்றோர் ஆசிரியர் கழகம்)

 திரு.பரமேஸ்வரன் அவர்கள்(விதைகள்)

மற்றும் கொளப்பலூர் முக்கிய பிரமுகர்கள்,தொடர்ந்துகெட்டிச்செவியூர்,வெள்ளாங்கோயில் உட்பட முக்கிய ஊர்களில்  அந்தந்த ஊர் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு  விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.





08 செப்டம்பர் 2024

2ஆம்ஆண்டு கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2024

கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு  

             அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

 சென்ற ஆண்டு கொளப்பலூர் புத்தகத் திருவிழா-பொதுமக்களனைவரின் ஒத்துழைப்புடன் பேரூராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆதரவுடன்  சிறப்பாக நடைபெற்றது.

  தொடர்ந்து இந்த ஆண்டு புத்தகத்திருவிழா-2024 நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம்  2024 - 08 - 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை  கொளப்பலூர் J.S.மஹாலில் திரு.MG K.P. முத்துச்சாமி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

திரு. கொமரசாமி அவர்கள், திரு. சிவராஜ் அவர்கள், திரு.காளீஸ்வரன் அவர்கள்,திரு.அப்பாச்சி ஆசிரியர் அவர்கள், திருமதி.கலைச்செல்வி நூலகர் அவர்கள், திருமதி.கவிஞர்மணிமேகலை அவர்கள், திரு. ஜெய்சங்கர் அவர்கள், திரு.K.ராமன் அவர்கள், திரு K.முருகன் அவர்கள்,திரு. K.P.பழனிச்சாமி அவர்கள்,T.வேல்முருகன் அவர்கள்   உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

முதலாம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழாவின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

2ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா-2024 வருகின்ற அக்டோபர் 5 & 6 ஆகிய தேதிகளில் சனி,ஞாயிறு இருநாட்கள் நடத்துவது என தீர்மானம் போடப்பட்டது.அதற்கான அனுமதி முறைப்படி மண்டப உரிமையாளர்களை நேரில் சந்தித்து அனுமதி கோருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

02 ஆகஸ்ட் 2024


        அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.





 நண்பர்கள் ஈரோடு பாரதி புத்தகாலயம் இளங்கோ அவர்கள்,மற்றும் தமிழ்த்தேசம் சரவணன் ஆகிய அறிவுத்திருமகன்களுடன்....


31 ஜூலை 2024

தமிழ் எண்கள் ...1 முதல் கோடி,கோடி வரை..

 



        கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம்...


"தமிழரிடம் தமிழில் பேசுவோம்"

தமிழ் எண்களை மீண்டும் பயன்படுத்துவோம். 



தமிழ் எண்கள்,இந்திய-அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தியுள்ள மைல்கல்...நன்றி; தஞ்சாவூர் அருங்காட்சியகம்.


  ஒன்று என எழுதப்பட்ட எல்லைக்கல் ,நன்றி; சேலம் அருங்காட்சியகம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் தமிழ் எண்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன.என்பதற்கான சான்றுகள் மேற்கண்ட மைல்கற்கள்....

ஒன்று விழ ஒன்பதாய் எழும்.
வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.

தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை.

 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். 

        எழுத்தால் எழுதப்படும் தமிழ் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டன. 

சுழியம்( 0 ) அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட்டன.

உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டன.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று
௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகின்றன. .

  ௧ = 1, ௨ = 2, ௩ = 3, ௪ = 4, ௫ = 5,

 ௬ = 6, ௭ = 7, ௮ = 8, ௯ = 9, ௰ = 10, 

௰௧ = 11, ௰௨ = 12,௰௩ = 13,௰௪ = 14,௰௫ = 15,

௰௬ = 16,௰௭ = 17, ௰௮ = 18, ௰௯ = 19, ௨௰ = 20,

௨௰௧ = 21,௨௰௨ = 22,௨௰௩ = 23,௨௰௪ = 24,௨௰௫ = 25,

௨௰௬ = 26,௨௰௭ = 27,௨௰௮ = 28,௨௰௯ = 29,௩௰ = 30,

௩௰௧ = 31,௩௰௨ = 32,௩௰௩ = 33,௩௰௪ = 34,௩௰௫ = 35,

௩௰௬ = 36,௩௰௭ = 37,௩௰௮ = 38,௩௰௯ = 39,௪௰ = 40,

௪௰௧ = 41,௪௰௨ = 42,௪௰௩ = 43,௪௰௪ = 44,௪௰௫ = 45,

௪௰௬ = 46,௪௰௭ = 47,௪௰௮ = 48,௪௰௯ = 49,௫௰ = 50,

௫௰௧ = 51௫௰௨ = 52௫௰௩ = 53௫௰௪ = 54௫௰௫ = 55௫௰௬ = 56௫௰௭ = 57௫௰௮ = 58௫௰௯ = 59௬௰ = 60

௱ = 100,  ௨௱ = 200, ௩௱ = 300, 

௱௫௰௬ = 156, ௲ = 1000, ௲௧ = 1001,

௲௪௰ = 1040, ௮௲ = 8000, 

௰௲ = 10,000, ௭௰௲ = 70,000, 

௯௰௲ = 90,000, ௱௲ = 100,000 (lakh)

௮௱௲ = 800,000, ௰௱௲ = 1,000,000 (10 lakhs)

௯௰௱௲ = 9,000,000, ௱௱௲ = 10,000,000 (crore)

௰௱௱௲ = 100,000,000 (10 crore)

௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)

௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)

௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)

௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

30 ஜூலை 2024

தமிழ் மொழியின் சிறப்பு


                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.



தமிழ் எழுத்தின் வரிவடிவங்கள் ...

 அறிமுகம்:

 ஒலி அணுக்களின் திரட்சியே மொழி. மொழியின் முதல் தொழில் தொடர்பு. சொல்லும் எழுத்தும் மொழியின் தொடர்புக் கருவிகள். மொழிதலின் வரிவடிவம் எழுத்து. தமிழ் மொழியின் வரிவடிவத் தொகுப்பே தமிழ் நெடுங்கணக்கு . உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர்மெய் எழுத்துகள் 216, ஆய்த எழுத்து 1, எல்லாமாகத் தமிழ் எழுத்துகள் 247.

 247 எழுத்துகளைக் கொண்ட தமிழ் நெடுங்கணக்கு.
 பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துகள், பானை ஓடுகளில், மட்பாண்டங்களில், பனை ஓலை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதப்பட்டு வந்துள்ளன. செப்புத் தகடுகளிலும் கல்லிலும் பொறிக்கப்பட்டதும் உண்டு. காலங்கட்கூடாகத் தமிழ் வரி வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ) 200 ஆண்டுகட்கு முன்புவரை ஏடும் எழுத்தாணியும் தான் தமிழை எழுதப் பயன்பட்டன. கடதாசியும், பேனாவும், பென்சிலும், அச்சும், எந்திரமும், மையும் புழக்கத்துக்கு வர, ஏடும் எழுத்தாணியும் படிப்படியாகப் புழக்கத்தில் இருந்து மறைந்துள்ளன.  தமிழ் மொழியின் சிறப்பு பற்றி  பார்க்கலாம்
தமிழ் மொழியானது உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1 என மொத்தமாக 247 எழுத்துக்களை கொண்டது.

இத்தமிழ் இயல், இசை, நாடகம் என 3 பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது.

தமிழ் வரலாற்றைப் பற்றி நாம் எடுத்து நோக்கின் தமிழர் குடியானது,

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே — வாளோடு

முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” என்று சிறப்புரிமை பெறுகிறது.

இதன் மூலம், தமிழ் நிலையானது என்ற அந்தஸ்தை நிரந்தமாக பெறுகிறது எனலாம்.

சங்க காலம்

           தமிழின் சிறப்பை பற்றி விரிவாகப் பார்ப்போமாயின் சங்கங்கள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் வளர்க்கப்பட்ட ஒரே மொழி என்றால் அது தமிழ் மொழி ஆகும்.

கி.பி 1 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்ககாலம் எனப்படும்.

முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என புலவர்கள் தமிழ் சங்கங்களை வளர்த்து இலக்கியங்களை அமைத்து தமிழை வளர்க்களாயினர்.

இதனால், ஏராளமான இலக்கிய நூல்கள் தோன்றியதோடு, தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் தழைத்தோங்கத் தொடங்கியது என்றால் மெய்யே ஆகும்.

சங்க கால இலக்கியங்களின் சிறப்பை நோக்கின் இவை எட்டுத் தொகை, பத்து பாட்டு எனக் கொண்டு பதினெண் மேற் கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

நம்முன்னோர்கள் இயற்றிய தமிழ் இலக்கியங்கள், கவிதை நயம், சொல் நயம் மிகுந்தனவாக காணப்படுகின்றன. இவை தமிழ் மொழியின் சிறப்பம்சம் ஆகும்.

மேலும், கூறின் அக்காலம் முதல் இக்காலம் வரையுள்ள இனி எக்காலத்தோருக்கும் பயன்படும் விதமாக, பொருந்தும் விதமாக தர்ம கருத்துக்கள் வாழ்வியல் செழுழைகள் கொண்டனவாக காணப்படுகின்றன என்றால் அது மென்மேலும் தமிழ் சிறப்பயே குறிக்கும்.

மேற் கூறப்பட்டது போன்று கி.பி 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க கால பகுதியில் தமிழின் சிறப்பு பற்றி கிட்டத்தட்ட 473 புலவர்களால் பாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. அண்ணளவாக 2,381 பாடல்கள் உள்ளனவாக கூறப்படுகிறது.

பண்டைய மக்களின் காதல், வீரம், போர், பொருளாதாரம், ஆட்சி சிறப்பு, கொடைச் சிறப்பு இவற்றைப் பற்றி பாடியே தமிழ்ப் பெருமைகளை வளர்க்களாயினர்.

இவை அகப் பாடல், புறப் பாடல் என இரண்டாகப் பிரித்து நோக்கப்பட்டன.

காதல், அன்பு, சார்ந்தன அகப்பாடல் எனவும் போர், வீரம், கொடை என்பன பற்றியன புறப்பாடல் எனவும் போற்றப்பட்டன.

சங்க கால எட்டுத் தொகை நூல்களாக நற்றினை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, பதிற்றுபத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல் என்பன திகழ்கின்றன.

பத்துப் பாட்டு நூலகளாக திருமுருகாற்று படை, பொருநராற்று படை, சிறுபாணாற்று படை, பெரும்பாணாற்று படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரை காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன விளங்குகின்றன.

இவையே பதினெண் மேற்கணக்கு நூல்கள் என சிறப்பிக்கப்பட்டு சங்க இலக்கியங்களில் தமிழ் மொழிப் பெருமைகளை எடுத்தியம்புகின்றன.

இந்த ஒவ்வொரு இலக்கியமும் தனித்தன்மை வாய்ந்த மற்றும் சொற்சுவை, பொருட்சுவை நிறைந்தனவாக காணப்படுகின்றன என்றால் அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

உதாரணமாக, நற்றினைக் காதல் பாடலில் ஒன்றினை எடுத்து நோக்கின் மிகவும் அற்புதமாக சொற்சுவையும் பொருட்சுவையிம் பொதிந்து தமிழ்சுவை காணப்படுவதை அவதானிக்கலாம்.

“நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே…..”

என்று தொடங்கும் நற்றிணையில் பின்வருமாறு காதற் சுவை ததும்புவதை காண இயலுகிறது.

என் காதலர் சொன்ன வார்த்தையைக் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றுமே என் தோள்களைப் பிரியாதவர்; குளிர்ச்சியான தாமரையின் மகரந்த மணிகளை தொட்டுச் சென்று, உயரமான மலைகளிலிருக்கின்ற சந்தன மரத்தில் வண்டுகள் சேமிக்கின்ற தித்திக்கும் தேனாமிர்தம் போன்றது அவரது காதல்; நீர் இல்லாமல் இவ்வுலகம் எவ்வாறு நிரந்தரம் இல்லையோ அவரில்லாமல் நானில்லை; அத்தனை அளவு என்னை விரும்பி நேசிக்கிறார் என்னவர்; என் நெற்றியில் படரும் பிரிவுத் துயரடையாளமான பசலையை பார்த்து பயப்படுவார்; தான் என்ன செய்வது என்று அறியாது என்னை பிரிந்து சென்று துன்பம் அடைவாரே என்று ஒரு காதற் தலைவி, தலைவன் தன்னை விட்டு பிரியமாட்டான் என்பதை உட்பொருளால் உணர்த்துவதை தமிழ் சுவையால் கபிலர் எத்தனை பிரமிப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

இதுவே தமிழின் பெருமையும் சிறப்பும் ஆகும்.

மேலும், குறிஞ்சி நிலப் பாடலான குறுந்தொகையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை தற்போது நாம் பார்ப்போம்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எதிர்பாரா விதமாக காதல் மலர்ந்தது. முன்பின் அறியாத நபருடன் கண்டதும் காதல் ஏற்பட தலைவிக்கு ஐயம் ஏற்படுகிறது எங்கு இவன் ஏமாற்றி விடுவானோ என.

இதையறிந்த தலைவன் தமிழ்ச் சுவை பொதிந்த பாடல் மூலம் கவலையை போக்குவதாக புலவர் கூறும் விதத்தை நோக்கலாம்.

“யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும், எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயர்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே……!” என்கிறார் புலவர்.

அதாவது, எனது அன்னையும் உனது அன்னையும் யார் யாரோ; என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்களாவர்; எந்த உறவின் அடிப்படையில் நீயும் நானும் அறிந்துகொண்டோம்; மழை நீரானது செம்மண் நிலத்தில் கலந்து செந்நில நீர் போல ஆகின்றது; அதுபோல நாமும் ஒன்று கலந்து இருந்தோம் என்பதாக கூறி தலைவிக்கு காதல் பயத்தை போக்குவதாக தமிழ் சுவையின் உச்சக்கட்டத்தை உணர்த்துகிறார் புலவர்.

இத்தனை கவி வல்லமை தமிழ் மொழியைத் தவிர, வேறு எந்த மொழிக்குமே கிடையாது. இக்கருத்தில் எவ்வித மிகையுமில்லை; ஐயப்பாடுமில்லை.

இவ்வாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலத்திற்கும் ஏற்றாற் போல அகப்பாடல் மற்றும் புறப்பாடல்கள் கொண்டு தமிழ் இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டமை தமிழ் வரலாற்றின் சிறப்பம்சமாகும்.

சங்கமருவிய காலம்

       இதேபோல, நாம் சங்கமருவிய காலத்தை எடுத்து நோக்கினால் அக்காலத்திலும் தமிழின் வளர்ச்சி நிலை எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்கமருவிய காலம் ஆகும்.

குறிப்பாக, கி.பி 3 ஆம் நூற்றாண்டின் பின் தமிழ் ஆட்சி அயலார் ஆட்சிக்கு உட்பட்டது. இதனால் பாளி மொழி மற்றும் பிராகிருத மொழி ஆதிக்கம் பெறலாயிற்று.

இதனால், தமிழ் வளம் சற்று சரியத் தொடங்கியது. ஆயினும், தமிழ்ப்புலவர்களும் மன்னர்களும் முற்றிலும் கைவிடவில்லை. தங்கள் விடா முயற்சியால் தமிழை வளர்த்துத் தலைத்தோங்கச் செய்தனர்.

இதனாலேயே, இக்காலத்தில் நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஏலாதி, பழமொழி நானூறு, ஆசாரக் கோவை, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழிநாற்பது என்ற பதினெண் கீழ் கணக்கு நூல்கள் உருவாகின.

அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இலக்கியங்களும் தோன்றலாயின.

இவை தமிழ் மொழியை மாத்திரமன்றி சமய அறக் கருத்துக்களையும் வாழ்வியலையும் புகட்டியமை தமிழுக்கு கிடைத்த இன்னோரன்ன பெருமையாகும்.

இதனால், சிறிது சிறிதாக தமிழ் மொழி சங்கமருவிய காலத்தில் தலைத் தோங்கி முடி சூடத் தொடங்கிற்று என்றால் உண்மையே.

பல்லவர் காலம்

இதே போல பல்லவர் காலத்திலும் பக்தி இயக்கம் தமிழுக்கு புதிய வகை இலக்கிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் தந்தருளியது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப்பாடல்கள் அக்கால சமூக நிலை, சமய நிலை, மொழி நிலை, கலை சிறப்பை பறைசாற்றின.

இவர்களது பாடல்களில் முற்கால மரபுகள் காணப்பட்டன. எனினும், அவை புது உருவம் பெற்று அமைந்திருந்தன.

நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய கலம்பகம், இறையனார் களவியலுறை, திருமந்திரம், சங்க யாப்பு, முத்தொள்ளாயிரம், தும்பிபாட்டு போன்ற இலக்கியங்கள் பல்லவர் காலத்தே தோன்றிய தமிழ் இலக்கியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பண்டைய வரலாற்று காலங்கள் அடிப்படையில் தமிழ் மொழியின் சிறப்பினையும் தொன்மையினையும் வளர்ச்சியினையும் நாம் அறியலாம்.

கவிஞர்களும் புலவர்களும் தமிழை சிறப்பித்தமை

தமிழின் சிறப்பை பற்றியும் புகழை பற்றியும் பல புலவர்களும் கவிஞர்களும் விளக்கிக் கூறியுள்ளார்கள்

குறிப்பாக, பாரதியார் கூறுகையில் ,

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்…………..” 

            என்று தனித்துவச் சிறப்பை அற்புதமாக எடுத்து இயம்புகிறார்.

நாம் அறிந்துக் கொண்ட மொழிகளுள் தமிழ் மொழியைப் போல இனிமையானதொரு மொழி உலகெங்கும் இல்லை. உலகனைத்தும் இகழ்ந்துப் பேசி புகழ் இழந்து சிறப்பு கெட்டு பெயருக்கு தமிழர் என்று வாழ்ந்திடுதல் நன்றா? சொல்லுங்கள். எனவே, தேனை விட இனிமையான மொழியான தமிழை, தமிழ்ப் புகழை உலகம் எங்கெங்கிலும் பரவிடச் செய்வாயாக. அதுவே தமிழ் சிறப்பு என பாரதியார் வலியுறுத்துகிறார்.

மேலும், “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவனைப் போல், இளங்கோவை போல் பூமிதனில்

யாங்கனுமே பிறந்ததிலை……” என தமிழ் புலவர்களை கூட பாரதி புகழ்வது தமிழ் சிறப்பை பறைச்சாற்றுகிறது.

அவரைத் தொடர்ந்து, பாரதிதாசனும் பின்வருமாறு தமிழ் மொழியை சிறப்பித்து கூறுவது எடுத்துக்காட்டத்தக்கது.

“தமிழுக்கு அமுதென்று பேர் — அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர்……” என்கிறார் பாரதிதாசன்.

மேலும், பாரதியார் கூறுகையில் பிறநாட்டு நல்லறிஞர்களது சாத்திரங்களை தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்தல் வேண்டும். பழங்கால கதைகளை நமக்குள்ளேயே இரகசியமாக மறைவாக சொல்வதில் ஒரு சிறப்பும் இல்லை பலனுமில்லை. அவற்றை வெளிநாட்டவர் அறியும் படி போற்றிப் புகழச் செய்தல் வேண்டும் எனக் கூறுவதனூடாக தமிழ் மொழியின் சிறப்பு உலகம் எங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்கிறார்.

இத்தனை நேரம் வரலாற்று ரீதியாகவும் புலவர், கவிஞர் வாயிலாகவும் தமிழ் மொழியின் தொன்மை சிறப்பைப் பற்றி நோக்கின நாம் சற்று பொதுவாக தமிழ் மொழியைப் பற்றி ஆராய்வது சிறப்பு.

ஏனெனில், எந்த மொழியிலும் இல்லாத சர்வ சாதாரணமாக கவனிக்கக் கூடிய சிறப்பம்சங்கள் பல நம்ம தமிழ் மொழியில் உள்ளன.

ஒரே மொழியான தமிழையே பேச்சு அடிப்படையிலும் எழுத்து வழக்கு அடிப்படையிலும் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று கூறி வருகிறோம்.

அத்துடன், தற்காலத்தில் பிரதேச ரீதியாக பிரதேச தமிழ் எனவும் ஊருக்கு ஊர் மொழியை அழகு படுத்தியும் விதவிதமாகவும் பேசுகின்றனர்.

மேலும், இலக்கண அடிப்படையில் எழுத்தியல், சொல்லியல், பொருளியல் எனப் பாகுபடுத்தி நோக்கலாம்.

எண்கள், காலம், பொருள், இடம், சினை, குணம், தொழில் எனப் பெயர் சொற்கள் என்ற ரீதியிலும் வினைச் சொற்கள் என்ற ரீதியிலும் பார்க்கலாம்.

மேலும், வேற்றுமைகள், புணர்ச்சிகள், ஒலி அமைப்புகள், எழுவாய், பயனிலை, செயற்படு பொருள், பால் மற்றும், திணை அடிப்படையில் என பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் சிறப்பை இலக்கண ரீதியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் இலக்கணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு தொல்காப்பியமாகும். இது எழுத்து, சொல் ,பொருள் என 3 இலக்கணத்தையும் கூறுவது இதன் சிறப்பம்சமாகும்.

இவ்வாறு பண்டைய கால சமூக, இலக்கிய வளர்ச்சி அடிப்படையிலும் புலவர்களின் தமிழாற்றல் மற்றும் தமிழ்ப் பணிகளின் அடிப்படையிலும் அவர்களது இலக்கிய தோற்றுவிப்புக்களின் அடிப்படையிலும் தமிழ் மொழியின் தொன்மையினையும் சிறப்பினையும் எம்மால் அறியக் கூடியதாக இருக்கிறது.

இப்பெருமையை பிற்கால கவிஞர்கள் இலக்கியங்கள், இலக்கணங்கள் மூலம் மென்மேலும் எவ்வாறு தலைத்தோங்க செய்துள்ளனர் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி, எம்மொழி கலப்புமற்று தனித்து நிற்கும் வல்லமை கொண்டது. காலத்தால் அழியாத மூத்த தமிழ் மொழியானது ஆதி மொழியாகும். என்றும் இளமையானதும் ஆகும்.

 உலகின் முதன் மொழி, மூத்த மொழி, ஆதி மொழி என்றெல்லாம் அழைக்கபடும் மொழியானது தமிழ் மொழியாகும். இது தொண்மை மொழி என சிறப்பிக்கப்படுவதோடு அத்தனை பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

உலகின் மற்ற மொழிகளுக்கு மத்தியில் நமது தாய் மொழியான தமிழ் மொழி அத்தனை சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடியதே.

இன்று மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் உள்ளது என்றால் மிகையில்லை.


கிறிஸ்துவம்,முஸ்லீம் மத‍ங்களிலும் சாதிப்பிரிவினை உண்டு....

  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...  மனித இனத்தில் அழிக்கமுடியாத பெரும்நோய்கள் சாதிப்பாகுபாடு....  QUORA -இண...