24 அக்டோபர் 2024

நம்ம கொளப்பலூர் ... நூல் எழுதும் பணிக்கு தரவுகளைத்தேடி..

  வரலாற்றுத்தேடலுக்கு உதவுங்க 

கொங்குத்தென்றல் வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.

           கடந்த 5-10-2024சனி மற்றும் 6-10-2024ஞாயிறு இரண்டு நாட்கள் புத்தக‍த்திருவிழா இரண்டாவது ஆண்டாக கொளப்பலூர் J.S.மஹாலில் நடத்தப்பட்டது.தொடர்ந்து இரண்டாண்டுகள் புத்தக‍க்காட்சி புத்தகத்திருவிழாவாக, புத்தக‍க்காட்சியில்  சமூகசேவகர்களுக்கு பாராட்டுவிழா,சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா,மாணாக்கருக்கான தனித்திறன் போட்டிகளும் நடத்தி மாணவ,மாணவியருக்கும் பாராட்டுவிழா,பங்கேற்புச்சான்றளிப்புவிழா,மாணவியரின் நடனம்,மற்றும் வீச்சுரை, சிறப்புபேச்சாளர்களின் சிறப்புரைகளும்,சமூகசிந்தனையாளர்களின் கருத்துரைகளும்,இலக்கியவாதிகளின் எழுச்சியுரைகளும்,என புத்தக‍த்திருவிழா எனும் அறிவுத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.பல ஆண்டுகளாக என்னையும் புத்தகங்கள் எழுதுமாறு தூண்டப்பட்டதன் விளைவாக ,  நம்ம கொளப்பலூர்  என்னும்தலைப்பில் வரலாற்று நூலாக்கத்திற்காக தரவுகளைத் தேடும்போது,

                            மதிப்பிற்குரிய  நீதியரசர் கே.சந்துரு அவர்கள்(ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி) எழுதிய கோபி லட்சுமண அய்யர் அவர்களது தியாகம்பற்றிய கட்டுரையில் தியாகி லட்சுமண அய்யர் அவர்கள் கொளப்பலூர் தேவராஜ அய்யரின் மகன்வழிப் பேரன் என அறிந்துகொள்ள முடிந்த‍து.சான்றாக இந்து தமிழ் திசை நாளிதழ் கட்டுரை நகல் தங்களுடைய கவனத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 திப்புசுல்தான் அரசாட்சியின்போது தானியங்கள் வாங்குவதற்காக கொளப்பலூர் அடிக்கடி வருகைபுரிந்து வணிகம் செய்த‍தாகவும்,சிற்றரசர்கள் பலரும் அவ்வாறை தானியங்கள் வாங்குவதற்கு கொளப்பலூர் வந்துள்ளதாகவும் செவிவழியாக அறிய நேரிட்டது. ஆகவே இந்தப் பதிவினைக் கண்ட வாசகப்பெருமக்கள் யாருக்கேனும் கொளப்பலூர் பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள் எனது இதே வலைப்பக்கத்தில் கருத்துரையில் பதிவிட்டு உதவுமாறு அன்புடன்கோருகிறோம்.




கே.சந்துரு

Last Updated : 22 Feb, 2016 08:54 AM

   

லட்சுமண அய்யர் எனும் சாதி ஒழிப்புப் போராளி

வீதிவீதியாகப் பறையடித்துக் கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார் 14 வயது லட்சுமண அய்யர்

கோபி வக்கீல் மா.கந்தசாமியுடன் ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது, லட்சுமண அய்யரைத் தெரியுமா என்று அவர் கேட்டார். செவித்திறன் குறைந்த எனக்கு ‘லட்சிய அய்யர்’ என்றே காதில் விழுந்தது. பின்னர், அந்தத் தியாகி லட்சுமண அய்யர் என்று தெரிந்தது.

திருச்சி மாவட்டத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்து, கொளப்பலூரில் குடிகொண்ட தேவராஜ அய்யரின் மகனான டி. சீனிவாச அய்யருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவருக்கு லட்சுமணன் என்று பெயர் சூட்டப்பட்டதில் விந்தையில்லை. வைணவ சம்பிரதாயத்தில் ராமனுக்கு அணுக்கமாகச் செயல்பட்டதனால் ராமானுஜன் என்ற பெயரும் உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ராமானுஜர், கடைநிலை சாதியினருக்கும் பரம்பொருளின் அர்த்தத்தைக் கூறி திருக்குலத்தாராக்கிய பெருமை அவருக்குரியது.









HinduTamil22ndOctoberசாதியை ஒழிக்கும் வழி

ராமானுஜரின் சீர்திருத்தத்தைப் பற்றி அம்பேத்கரும் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற தனது உரையில் குறிப்பிட்டு ஒரு கேள்வியையும் எழுப்பினார்:-

சாதியையும் தீண்டாமையையும் ஒழித்துக்கட்டும் பெரும்பணியில் எத்தனையோ பேர் இறங்கி இருக் கிறார்கள். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடடைய செயல்பாடுகளை எல்லாம் ஏற்கவும், அவற்றைப் பின்பற்றி நடக்குமாறு இந்துக்களைத் தூண்டவும் உங்களால் முடியுமா?

1934-ல் மகாத்மா காந்தியடிகள் தமிழகப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே தீண்டாமைக்கு எதிராகத் தனது கருத்துக்களை ‘யங் இந்தியா’ இதழிலும், தனது பரப்புரைகளிலும் சொல்லிவந்தார். அகமதாபாதில் தாழ்த்தப்பட்டவர்கள் மாநாட்டில் அவர் கூறியது:-

“தீண்டாமை இந்து மதத்தின் ஒரு பகுதி என்று இந்துக்கள் கருதினால், தங்களுடைய சகோதரர்களில் ஒரு சாராரைத் தொடுவது தீட்டு என்று இந்துக்கள் கருதினால், நாம் உண்மையான சுதந்திரத்தை அடையவே முடியாது. நான் மீண்டும் பிறக்கவே விரும்பவில்லை. அப்படிப் பிறந்தால், தீண்டத்தகாத நபராகப் பிறக்கவே விரும்புகிறேன். அவர்களுடைய வேதனைகள், துயரங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற அவமதிப்புகளைத் தாங்கிக்கொள்வதற்கு விரும்புகிறேன். அந்தப் பரிதாபகரமான நிலையிலிருந்து அவர்களையும் என்னையும் விடுவிக்கப் பாடுபட விரும்புகிறேன். கடவுளே! பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய குலங்களில் எனக்கு மறுபிறவி வேண்டாம். தீண்டத்தகாதவனாக நான் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.”

மகத்தான ஆளுமை லட்சுமண அய்யர்

தீண்டாமையை ஒழிப்பதற்கும், தாழ்த்தப்பட்டவர்களுக் கான முன்னேற்றத்துக்காகவும் ‘அரிசன சேவா சமிதி’யை ஆரம்பித்ததன் ஒரு பகுதியாகத்தான் காந்தியின் தமிழகப் பயணம் அமைந்தது. நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களை தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிராகத் திருப்பிய இந்த இயக்கம், தமிழகத்தில் அடையாளம் காட்டிய மகத்தான ஆளுமைகளில் ஒருவர் லட்சுமண அய்யர். கோபியில் துவக்கப்பட்ட அரிஜன சேவா சங்கத்தின் சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக இரண்டு விடுதிகளும், தக்கர்பாபா வித்யாலயமும் லட்சுமண அய்யரின் தந்தையால் தொடங்கப்பட்டது. தற்போது அமைந்துள்ள இடம் அதன் செயலாளரான லட்சுமண அய்யரால் 1955-ம் வருடம் கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பகுதிகளில் மூன்று குழந்தைகள் காப்பகங்களும் திறக்கப்பட்டன.

தீண்டாமைக்கு எதிராகக் குரலெழுப்பிப் பலரது கவனத்தை காந்தியடிகள் ஈர்த்ததில் வசப்பட்ட இளைஞன் ஜி.எஸ்.லட்சுமண அய்யர். அவரது தந்தை சீனிவாச அய்யர் தீரர் சத்தியமூர்த்தியின் கூட்டம் ஒன்றை கோபியில் ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, அவரிடம் ஒருவர் ஓடிவந்து, அவரது 14 வயது மகன் செய்த காரியத்தைப் பற்றிக் குறை கூறினார். அந்தப் பையன் என்ன செய்துவிட்டான்? வீதிவீதியாகப் பறையடித்து அக்கூட்டத்துக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தான்.

இந்த தேசத்துக்கான சேவை

சமுதாயக் கடமையில் உரம் பாய்ச்சப்பட்ட அந்த இளைஞனின் வாழ்வில் ஒன்பது வருடங்களுக்குப் பின்னால் நடந்த ஒரு திருப்புமுனை சம்பவம் ஒன்றை நினைவுகூர வேண்டும். 25 வயது நிரம்பிய லட்சுமண அய்யர் மகாத்மா காந்தியின் முன் நின்றுகொண்டு, ‘‘நான் இந்த தேசத்துக்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டார். அதற்குப் பதில் அளிக்கும் முன் காந்தி அவரிடம் அவரது சாதியைப் பற்றிக் கேட்ட பின், ‘‘நான் சொல்வதையெல்லாம் செய்வாயா?’’ என்று கேட்டார்.

‘‘அது என் கடமை’’ என்று பதிலளித்த லட்சுமண அய்யரிடம் “ஹரிஜன மக்களுக்குச் சேவை செய், அவர்கள் குழந்தைகளுக்கென்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து, இதுதான் இந்த தேசத்துக்கு நீ செய்யப்போகும் சேவை” என்று காந்தி கூறினார்.

அந்த ரசாயன மாற்றத்துக்குப் பின் நடந்ததெல்லாம் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளே. அந்த லட்சிய மனிதர் தனது உயிர் மூச்சு நீங்கும் வரை (2011) அவரது பணியில் தொய்வேதும் ஏற்பட்டதில்லை. 2007-ல் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“அவர் சொன்னார் நான் செய்தேன். நம்மகிட்ட எதுக்குங்க பேட்டியெல்லாம்… காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால் நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒன்றுமேயில்லை தம்பி!’’ கோபியைச் சுற்றி 650 ஏக்கர் நிலமும், கோபி நகரத்துக்குள் 40 ஏக்கர் நிலமும் இருந்ததே என வினவியபோது,

‘‘பாதியைத் தர்மமா கொடுத்துட்டேன், பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சு. இப்போது ஒரு சென்ட் நிலம்கூடச் சொந்தம் இல்லை. நாங்கள் தங்கியுள்ள இந்த வீடு ஏலத்தில் போயிடுச்சு. ஏலம் எடுத்தவுக வீட்டுக்காக எந்தப் பணமும் வாங்காமத் திருப்பிக் கொடுத்துட்டாங்க’’ எனச் சிரிக்கிறார் அய்யர்.

‘‘பிள்ளைகளுக்கென்று எதுவும் சேர்த்துவைக்காம, எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனு வருத்தமாக இல்லயா?’’ என்றால், ‘‘இல்லை, அவர்களுக்கு வேணும்னா, தானே முயற்சி பண்ணிச் சம்பாரிச்சிக்க வேண்டியதுதான்” என்னைப் பொறுத்தவரைக்கும் காந்தி கொடுத்த கடமையை நல்லபடியா செஞ்சுட்டோம்கிற திருப்தியும் சந்தோஷமும் இருக்கு” என்றார்.

லட்சுமண அய்யர் என்னதான் செய்தார்?

கோபியில் 26 பொதுக் கிணறுகள் இருந்தபோதும் அதில் நீர் எடுக்கும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப் பட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தை அணுகிய லட்சுமண அய்யர், அந்தத் தடையை நீக்கி அனைவருக்குமான உரிமையை வாங்கிக் கொடுத்தார். தற்போது நகரின் நடுவிலிருக்கும் புதுப்பாளையம் காலனியில் இருந்த அருந்ததியினரின் வாழ்விடத்தைப் பெற்றுக்கொடுத்தார். பவானி வாய்க்கால் வெட்ட மக்களிடமிருந்து நிலம் எடுக்கப்பட்டதனால் வீடு இழந்தவர்களுக்கு மாற்றிடம் கொடுப்பதற்கும், அவ்விடத்தில் வீடு கட்டுவதற்கும் அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொடுத்தார்.

சுதந்திரம் அடைந்த பிறகு கோபி நகராட்சியின் தலைவரான அவர், கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கினார். மனிதர்கள் மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கோபி கூட்டுறவு சங்கக் கட்டிடம் மற்றும் கூட்டுறவு வீட்டு அடமான வங்கியையும் ஏற்படுத்தினார். கொங்கர்பாளையம் கிராமத்தில் 250 ஏக்கர் நிலத்தில் ஏழை மக்களை இணைத்து கூட்டுப் பண்ணை விவசாயத்துக்கு ஏற்பாடு செய்தார். அப்பகுதிக்கு இன்றும் வினோபா நகர் என்றுதான் பெயர். வண்டிப்பேட்டை பகுதியில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பினார். நகராட்சி உயர் நிலைப் பள்ளி வருவதற்குக் காரணமானார். மீண்டும் 1986-ல் நகராட்சித் தலைவரான பின் 57 லட்ச ரூபாய் செலவில் உலர் கழிப்பிடங்கள் எல்லாம் நீரடி மலக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன. இதற்காக 1991-ல் குடியரசுத் தலைவரின் பதக்கமும் அவருக்கு அளிக்கப்பட்டது.

காமராசரின் மறைவுக்குப் பிறகு, ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட லட்சுமண அய்யர், 1972-ல் விவசாயிகளின் மின் கட்டணத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிறை சென்றார். எவ்வளவோ கொடுத்தவர் அவர். ஆனால், கோபி நகரத்துக்குத் தனது உடலையும், பொருளையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்த லட்சுமண அய்யரின் இறுதி யாத்திரையில் சொற்பமானவர்களே பங்கு பெற்றார்கள் என்பதை அறியும்போது நமக்கு வேதனையும் விரக்தியுமே ஏற்படுகிறது. லட்சுமண அய்யர்களைப் பொருட்படுத்தாதன் விளைவுகளையும் நாமே அனுபவிக்கிறோம்!

*

கட்டுரையாளர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.

| இன்று கோபி லட்சுமண அய்யரின் 100-வது பிறந்த தினம்|

20 அக்டோபர் 2024

நமது வணிகம்... NVM GROUP

  



  அன்புள்ள,

               வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.



இப்பதிவின் அடிக்குறிப்பில் கண்டுள்ளவாறு  மூன்று நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தன. முதலில் கொடுமுடி செல்ல முடிவு செய்தேன். 12ஆம் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த‍பிறகு கோவை செல்வதை இறுதிப்படுத்தி  நமது வணிகம் சென்றேன். 

மிக முக்கியமான மூன்று நிகழ்வுகளிலும் விருந்தோம்பல்தமிழர்களுக்கே உரித்தான  அபார உபசரிப்பு ...இருந்தும் பல் ஆட்டங்காட்டும் எனக்கு ருசிக்க முடியாதே! பசிக்கு மட்டும்தானே சாப்பிட முடியும்..

                            20-10-2024 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற நிகழ்வு பற்றிய பதிவுங்க.மிகச் சுருக்கமான பதிவிடுகிறேன். 



"நமது வணிகம்" கோவை சந்திப்பின் 

 சிறப்பு விருந்தினர்கள்..(சிறந்த ஆளுமைகள்)


மேற்கண்ட ஆளுமைகளின் சிறப்புரை கேட்ட எனக்கு அந்த பாக்கியம் கிடைத்த‍து.இதைத்தான் நான்,

 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' 

என்ற கணியன் பூங்குன்றனாரின் அறவுரையை இன்றளவும் மதிப்பளிக்கிறேன்..

        நமது வணிகம் நிகழ்வ..யாருமே அறிமுகமில்லாத இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.இந்த நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே ஒரு இளைஞர் துறுதுறுவென சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.அவரது செயல்பாடுகளை கண்ணுற்ற எனது மனதில் ஒருவேளை களப்பணிக்காக முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் போன்று  நியமிக்கப்பட்டவராக இருக்குமோ?  என்றே எண்ண ஓட்டம் மின்னியலில் எலக்ட்ரான்கள் ஓடுவது போன்று இயங்கியது.    நிகழ்வுகள் இயக்கம்பெறத்தொடங்கிய பின்னரே,  இவர்தான் நமது வணிகம் குழுவின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்.

மூன்று இலட்சம் ரூபாய்க்கு இரண்டு பஜ்ஜி சாப்பிட்டு அனுபவம் பெற்ற பாக்கியசாலி  

திரு. MMபிரபு அவர்கள் என்று அறிய முடிந்த‍து.

(கவனியுங்க...இரண்டு பஜ்ஜியின் விலை மூன்று இலட்சம் ரூபாய்...நம்பித்தான் ஆக வேண்டும்.திரு.M.M.பிரபு அவர்களின் அனுபவத்தின் உண்மை நிகழ்வு.இதனை தலைப்பாக வைத்தே ஒரு நாவல் எழுதிவிடலாம் போலிருந்த‍து)

                                        நிகழ்வின் விபரம்....



            (20/10/2024) ஞாயிறு,  நமது வணிகம் அமைப்பின் சார்பாக தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக "பொறுப்பு நியமன சந்திப்பு 2024 மற்றும் "தொழில் நெறிமுறை ஊடகவியல் பயிற்சியும்" வழங்கப்பட்டது. இதனை கோவை தொழில்முனைவோர் லயன்ஸ் சங்கம் இணைந்து வழங்கியது.

இதில் லயன்ஸ் பன்னாட்டு சங்கங்களின் தென் இந்திய CSR மண்டல தலைவர் PDG PMJF. S. ராம்குமார் அவர்கள், சேரன் அக்கடெமி திரு. ஹுசைன் அஹமத் அவர்கள் மற்றும் டெக் மஹிந்திரா கோவை மண்டல இயக்குனர் திரு. சரவணன் ஐயா அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

நமது வணிகம் மாத இதழ் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகிகளும், கோவை தொழில்முனைவோர் லயன்ஸ் சங்க தலைவர், நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழகம் முழுதும் இருந்து 20 மாவட்டங்களில் இருந்து 80 ற்கும் மேற்பட்ட தொழில்‌ முனைவோர்கள் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர்.

- நமது வணிகம் மாத இதழ்...









-----------------------------

இங்கு நான் கற்றுக்கொண்டவை...

(1) இரண்டு பஜ்ஜிக்கு மூன்று இலட்ச ரூபாய்களும் கொடுக்கலாம்..

(2)வாய்ப்புகள் பலமுறை வரும். நாம்தான் சரியாகப் பயன்படுத்த வேண்டும். (கொக்கொக்க கூம்பும் பருவத்தே-குறள் நினைவுக்கு வந்த‍து)

(3)ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது..

(4)வணிகத்தில் சமுதாய ஒற்றுமை வேற்றுமை..

(5) யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முப்பாட்டனார் கணியன் பூங்குன்றனார் கூறியது இன்று நாம் அனுபவிக்க முடிகிறது.அதன்பலனாக வெளிநாடுகளின் தொழில்நுட்பங்களை அட்டக்காப்பி அதாங்க ஈயடிச்சான் காப்பியடித்து நம்ம நாட்டில் தொழில் தொடங்கி இலாபம் ஈட்டலாம். என்ற அனுபவப்பகிர்வுகளையும் கேட்க முடிந்த‍து.

(6) BNI -  TEAM என்னும்  பெரும் வணிகர்களுக்கான குழுவினைப்போன்று சிறு குறு வணிகர்களின் நலனுக்கான 'B'  TEAM  ஆக ஒரு குழு தொடங்குவதற்கான முனைப்பில் உள்ளனர் என்ற  சிறப்பான தகவலையும் அறிய முடிந்த‍து.

           







மேற்படி தமிழியக்கத்தில் நானும் பொறுப்பாளராக செயல்படுகிறேன்.
மேற்படி  நுகர்வோர் அறிக்கை மாத இதழின் செய்தியாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். தகவலுக்காக....

12 அக்டோபர் 2024

கிறிஸ்துவம்,முஸ்லீம் மத‍ங்களிலும் சாதிப்பிரிவினை உண்டு....

  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

 மனித இனத்தில் அழிக்கமுடியாத பெரும்நோய்கள் சாதிப்பாகுபாடு....

 QUORA -இணைய பக்கத்தில் கிடைத்த தகவலை கீழே பகிர்ந்துள்ளேன். வாசியுங்க...

  1. உயர் ஜாதியினரின் இறுதி சடங்கு நடை பெறும் இடத்தில் கீழ் ஜாதியினருக்கு இடம் தர மறுப்பது.
  2. உயர் ஜாதியினரை எதிர்த்து கீழ் ஜாதியினர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை கொலை செய்வது.
  3. உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த தமக்கு அதே உயர்ஜாதியை சேர்ந்த மணமகன்/ மணமகள் தேவை என்று திருமண விளம்பரம் கொடுப்பது.

இவை அனைத்தும் ஹிந்து மதத்தில் நடைபெறுகிறது என்று நினைத்தால் நிற்க. இது போன்ற ஜாதி கொடுமைகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களிடையே உண்டு.

பொதுவாக ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி பிரிவினை உண்டு என்றும் ஏனைய மதத்தில் ஜாதிகள் இல்லை, பிரிவினை மட்டுமே உண்டு என்ற ஒரு தவறான எண்ணம் பலரிடம் உண்டு. இதே கேள்விக்கு அதே மாதிரி பதில்களும் சிலர் அளித்திருக்கின்றனர்.


இந்தியாவில் 85% இஸ்லாமியர்கள் கீழ் ஜாதி என்று அழைக்கப்படும் பஸ்மன்டாஸ் (Pasmandas) குழுவை சார்ந்தவர்கள், 15% இஸ்லாமியர்கள் உயர்ந்த ஜாதி என்று அடையாளம் காணப்படும் அஷ்ரப் (Ashraf) குழுவை சார்ந்தவர்கள்.

இஸ்லாமில் உயர்ந்த ஜாதி - சயீத், மாலிக், ஷேக், முகல், பதான், ரன்கட் (Rangad) முஸ்லீம் ராஜ்புட் etc

இஸ்லாமில் கீழ் ஜாதியினர் - அர்சல் (Arzal) தலித் இஸ்லாமியர்கள்.

இஸ்லாமில் பின்தங்கிய ஜாதியினர் - அஜ்லப் (Ajlaf)


அம்பேத்கர் அவர்களும் "Thoughts on Pakistan" என்ற புத்தகத்தில் இஸ்லாம் மதத்தின் ஜாதிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். Thoughts On Pakistan (பக்கம் 225-226)


உயர் ஜாதி இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யப்படும் இடுகாட்டில் கீழ் ஜாதி இஸ்லாமியர்களுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. Backward Muslims protest denial of burial


உயர்ஜாதி இஸ்லாமியருக்கு உயர்ஜாதி மணமகள் தேவை என்ற நாளிதழ் விளம்பரம்.


டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகியவை உயர்ஜாதி இஸ்லாமியர்கள் பிடியில் உள்ளது என்றும் பல்வேறு கீழ் ஜாதி இஸ்லாமியர்கள் சாதி அடிப்படையில் அவமானம், அவமரியாதை மற்றும் வன்முறையை அன்றாடம் சந்திக்கின்றனர் என்று கீழ் ஜாதி இஸ்லாமியர்களின் நல்வாழ்வுக்காக போராடி வரும் அன்வர் அலி அவர்கள் தனது புத்தகமான Maswat Ki Jung என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். Masawat Ki Jung [Paperback] [Jan 01, 2005] Ali Anwar - Ali Anwar

The Pasmanda movement castigates Muslim minority institutions, particularly, Aligarh Muslim University (AMU) and Jamia Millia Islamia (JMI). Pasmanda activists say that since the inception of AMU, upper-caste Muslims have occupied all the important positions in the university. It was established for the Shahzadas (princes), not for the poor and backward Muslims, they say and add that Sir Syed, the founder, was not supportive of education for women and backward Muslims. They say, in post-Independence India, upper-caste Muslims have taken over these institutions in the name of minority rights. - Pasmanda movement questions the myth of a monolithic Indian Muslim identity


பதானி என்ற ஆடையை ஒரு தலித் அணிந்த போது ஜாதியின் காரணமாக என்ன நிகழ்ந்தது என்று இங்கு காணலாம்.

“You belong to lower caste and should not wear a pathani.” They further threatened to kill Bhati if he dared to wear a ‘pathani’ again.

Police have booked Amjad Pathan and Azgar Pathan for beating up Jayanti Bhati (27), a truck driver, on afternoon of November 26 near Green Palace hotel in Gandhidham.

Casteist rage: Dalit man thrashed for wearing ‘pathani’, two booked | Rajkot News - Times of India


காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கீழ் ஜாதி இஸ்லாமியர்களுக்கு பெரும்பாலும் வழங்குவதில்லை, மாறாக உயர்ஜாதி இஸ்லாமியர்களுக்கே வழங்குகிறது. சுதந்திர இந்தியாவில் நடந்த 14 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 400 இஸ்லாமியர்களில் 340 பேர் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. Reservation for Muslim Backwards, The Milli Gazette, Vol.5 No.22, MG116 (16-30 Nov 04)

அதாவது 2% உயர் ஜாதி இஸ்லாமியர்கள் 85% இடங்களையும். 12% கீழ் ஜாதி இஸ்லாமியர்கள் 15% இடங்களையும் பெற்றனர்.


இஸ்லாமியர்களிடையே உள்ள ஜாதி பாகுபாடு துன்பத்தை அளிக்கிறது என்றும், அதை சீர்திருத்தம் செய்ய அவர்களுக்கிடையே ஓர் இயக்கம் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், ஹிந்துக்களுக்கு இடையே இத்தகைய தீமைகள் இருந்தாலும், அவர்களில் சிலர் அதன் இருப்பை அறிந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் அவற்றை அகற்றுவதற்காக தீவிரமாக போராடுகிறார்கள், மாறாக இஸ்லாமியர்கள் தங்களுக்குள் நிலவும் ஜாதி பாகுபாடு என்ற தீமையை உணரவில்லை, அதன் விளைவாக அவர்கள் அதை அகற்றுவதற்கு போராடுவதற்கு பதிலாக தற்போதுள்ள நடைமுறைகளில் எந்த மாற்றத்தை செய்வதற்கும் இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

The existence of these evils among the Muslims is distressing enough. But far more distressing is the fact that there is no organized movement of social reform among the Musalmans of India on a scale sufficient to bring about their eradication. The Hindus have their social evils. But there is this relieving feature about them—namely, that some of them are conscious of their existence and a few of them are actively agitating for their removal. The Muslims, on the other hand, do not realize that they are evils and consequently do not agitate for their removal. Indeed, they oppose any change in their existing practices.

—From Pakistan, or the Partition of India - B.R. Ambedkar -pp. 218-223

BR Ambedkar: In his own words

தற்போது அலி அன்வர் போன்ற சிலர் பஸ்மன்டா குழுவினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தாலும், இஸ்லாம் மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை களைய அவர்கள் செல்லவேண்டிய தூரம் மிகவும் அதிகமாக இருக்கிறது.


இந்து மதத்தில் 4 ஜாதிகள் உள்ளதை போல் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மதத்திலும் 4 பிரிவுகள் உள்ளதாக சொல்கின்றனரே உண்மையா?

கிறிஸ்துவ மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை மற்றொரு நாள் காணலாம், அங்கும் ஜாதிகள் இல்லாமல் இல்லை, தலித் கிருஸ்தவ மதத்திலும் உள்ளனர்.

ஹிந்து மதத்தில் மட்டுமல்ல கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மதத்திலும் ஜாதி பிரிவினைகள் உண்டு.

எந்த மதமாக இருந்தாலும் ஜாதி பிரிவினைகள் ஒழிய வேண்டும்.

நம்ம கொளப்பலூர் ... நூல் எழுதும் பணிக்கு தரவுகளைத்தேடி..

   வரலாற்றுத்தேடலுக்கு உதவுங்க  கொங்குத்தென்றல் வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.            கடந்த 5-10-2024சனி மற்றும் 6-10-2024ஞாயிறு இரண்ட...