09 ஜூன் 2020

இசை பழகலாம் வாங்க!

                                        மியூசிக் என்னும் இசை...
                                                         [MUSIC ]

                                         ---------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

                      வழிப்போக்கர்கள்  சுற்றுலா,திருவிழா போன்ற நிகழ்வுகளில் தேங்காய்த்தொட்டி,பெயிண்ட் காலிடப்பா போன்ற வீணான பொருட்களில் வீணைபோல செய்யப்பட்ட கருவியில் இனிமையான பாடல்களை இசைப்பதைக் கேட்டு வியப்படைந்திருப்போம்.அதாவது கையில் கிடைத்த பொருட்களில் இனிமையாக தாளமிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்போம்.
(சுற்றுலாத் தளங்களான மைசூரு,பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் தற்போதும் காணலாம்.)இசைக் கச்சேரிகளில் இசைகளைக் கேட்டு இன்புறுவோம்.
இதனால் நம்மவர்களும்  இசையின் மீது ஆர்வம்கொண்டு மௌத் ஆர்கன்,புல்லாங்குழல்,எலக்ட்ரானிக் கீபோர்டு என வாங்கி வருவோம். அவற்றை வாசிக்கத் தெரியாமல் வீட்டில் கிடப்பில் போட்டுவிடுவோம்.இவ்வாறாக ஆர்வமிருந்தும் தக்க வழிகாட்டுதல் இல்லாமல், வாசிக்க இயலாமல் ஏக்கமுறும் இளைய சமூகத்திற்கு உதவலாம் என்ற எண்ணத்தில் ....
       கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையத்தில் நான் கற்ற பாடங்களை தங்களுக்காக  பதிவிடுகிறேன்.
   இசைக்கு காரணமே ஒலியலைகள் (Frequency) என்னும்  அதிர்வுதாங்க.அவ்வாறான ஒலியலைகளை ஒழுங்குபடுத்தும்போது செவிக்கு இனிய ஒலியான இசையை தருகிறது.
 (ஒலியலைகள் ஒழுங்கற்றுப்போனால் அதனை சப்தம் என்றும் இரைச்சல் என்றும் அழைக்கிறோம்)
                     இசையானது மகிழ்ச்சையைத் தரவும், மனதை ஒருநிலைப்படுத்தவும்,உயர்சிந்தனை பெறவும்  உதவுகிறது.
                        இசை என்பது கடல் போன்றது.நீர்த்தேக்கத்தைப்போன்றது.நமது தாகத்திற்கேற்ற அளவுதாங்க நீரை பருகமுடியும்.அதுபோல நமக்குத் தேவையான அளவு அறிந்துகொள்ள,இசை பற்றிய அடிப்படை அறிந்துகொள்ள வாங்க.
நான் கற்றறிந்தவைகளை ......
கீழ்கண்டவாறு
(1)அறிமுகம் - இசையான இயற்கை ஒலிகள்
(2)இந்திய இசைமரபுகள்,
(3)இசைக் கருவிகள்,
(4) இசையின் அடிப்படையே ஏழுசுரங்கள்,
(5) கீ போர்டு வாசிப்பது ஒரு கலை,
(6)புல்லாங்குழல்,மௌத் ஆர்கன் ஆகிய கருவிகளிலும் இசைத்து மகிழலாம்,(7)எனக்கு உதவிய இசைக்கலை இணையதள முகவரிகள் பட்டியல்.............
     என தொடர்ந்துபல பதிவுகளாக இடுகையிடுகிறேன் https://konguthendral.blogspot.com.அதாவது  இசை பற்றி என்னறிவுக்குப் பட்டதை பகிர்ந்தளிக்கிறேன்.
           
    (1)இயற்கை ஒலிகளே இசையாக.....

                          பழங்காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த மனிதன்  ஓய்வு நேரங்களில்  தன்னைச் சுற்றி கவனத்தை செலுத்தினான்.வனவிலங்குகளின் சப்தங்களையும்,பறவைகளின் கத்துதலையும்,தாவரங்களிலும்,பாறைகளிலும், மோதும் காற்றலைகள் ஏற்படுத்தும் ஓசைகளையும் உன்னிப்பாக கேட்டபோது அந்த ஓசைகளிலும் இனிமையைக் கண்டான்.அவைகளில்  தன்னை மயக்கும் இனிய ஓசைகளைத் தேர்ந்தெடுத்தான்.
     ரிக் வேத காலத்தில்
                  மாடுகளின் சப்தத்திலிருந்து (துத்தம்) 'ரி' ,யானைகளின் சப்தத்திலிருந்து (தாரம்) 'நி', மயில்களின் சப்தத்திலிருந்து (குரல்) 'ஸ' ஆகிய ஒலிகளை தேர்ந்தெடுத்து 'ரி,நி,ஸ' இந்த மூன்று ராகங்களில் இசைத்து மகிழ்ந்தான்.
(ரிக் வேத காலத்தின் இசைகள் யாவும் ரி,நி,ஸ ஆகிய மூன்று ராகங்களில்தாங்க கேட்கமுடியும்).
யஜூர் வேதகாலத்தில்
                  ஆடுகளின் சப்தத்திலிருந்து (கைக்கிளை) 'க',     குதிரைகளின் சப்தத்திலிருந்து (விளரி) 'த' ஆகிய ஒலிகளை பிரித்தேடுத்து 'ரி,நி,ஸ,க,த', ஆகிய ஐந்து ராகங்களின் துணையோடு இசைத்து மகிழ்வுற்றான்.
 சாமவேத காலத்தில்
   கூடுதலாக குயில்களின் சப்தத்திலிருந்து (இளி) 'ப', புறாக்களின் சப்தத்திலிருந்து (ஊழை) 'ம',  ஆகிய ஓசைகளைப் பிரித்தெடுத்து  ஸ,ரி,நி,க,த,ப,ம, ஆகிய ஏழு ராகங்களை பயன்படுத்தி இசைத்தும்,பாடியும் மகிழ்ந்தான். https://konguthendral.blogspot.com

   இவ்வாறாக கேட்பதற்கு இசைவான ஏழு  ஸ,ரி,நி,க,த,ப,ம, ஓசைகளையும் பிற்காலத்தில் தனக்கு வசதியாக  ஒழுங்குபடுத்தினான். இசைப்பதற்கேற்ப ச,ரி,க,ம,ப,த,நி என்று வரிசைப்படுத்தினான்.

         காலங்காலமாக இசையையும் குருகுலவழியில் கற்று பயன்படுத்திய மனிதன்  இசையொலிகளை அடையாளப்படுத்தி குறியீடுகளாக்கி  பிற்காலத்தில் கற்றுக்கொள்வதற்கேற்ற இசைச்சொற்களாக்கி எழுதிவைத்து இசைக்கத் தொடங்கினான்.

            
                          ஒரு பாடலின் பொருள் உணர்வதைவிட அந்தப் பாடலின்  நயமான ஒலிதாங்க நமக்கு மகிழ்வினைத் தருகின்றது.அதனால்தாங்க எந்தமொழிப் பாடலாக இருந்தாலும்  நாம் ரசித்து இன்புறுகிறோம்.ஆகவே இசையை உலகப் பொதுமொழி என்கிறோம்.

இனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க!..
என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (2) இந்திய இசை மரபுகள் தலைப்பில்..............

விரைவில்  தொடரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...