16 ஜூன் 2020

பகுதி - 4 இசையின் அடிப்படை

                                          பகுதி-4 இசையின் அடிப்படை.
                                           ----------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
      இந்தப் பதிவில் இசையின் அடிப்படை விசயங்களைத் தெரிந்துகொள்வோம் வாங்க..
            இசையின் முதல் பாகமே   சுதி எனப்படும் சுரங்கள் ஆகும். சுருதியை ஒலி அதிர்வுகள் என்போம்.மேற்கத்திய இசையில் சுரங்களை  NOTES நோட்ஸ் என்பர்.  https://konguthendral.blogspot.com

     இந்திய இசையில் ஏழு சுரங்களை ச,ரி,க,ம,ப,த,நி, (மறுபடியும்)ச என்று எட்டு சுரங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.இந்த எட்டு சுரங்களும் அடங்கிய ஒரு தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும்.  https://konguthendral.blogspot.com
                 மேற்கத்திய இசையில் ச,ரி,க,ம,ப,த,நி, ஆகிய ஏழு சுரங்களையும் C,D,E,F,G,A,B ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் ஒரு NOTE என்றழைக்கப்படுகின்றது.
          C,D,E,F,G,A,B, மறுபடியும் C   ஆகிய எட்டு NOTESகளும் அடங்கிய ஒரு தொகுப்பு  ஒரு  OCTAVE அல்லது ஒரு செட் என்றழைக்கப்படுகின்றது.
              இந்திய இசையில் எல்லாப் பாடலும் 'ச' என்ற முதல் சுருதியில்தாங்க தொடங்கும்.
             மேற்கத்திய இசையில் C,D,E,F,G,A,B,ஆகிய ஏழு (NOTES) நோட்ஸ்களில் எந்த ஒரு ( NOTE) நோட்ஸிலும்  தொடங்கும்.அந்த ஆரம்ப நோட்ஸின் ( SCALE) ஸ்கேல் என்று பெயரிட்டு அழைக்கப்படும்.உதாரணமாக  C யில் தொடங்கினால் அந்த பாடலுக்கு 'C' SCALE என்றழைப்பர்.G யில் தொடங்கும் பாடலுக்கு 'G' SCALE என்றழைப்பர்.   https://konguthendral.blogspot.com
         
            இந்திய இசையில் சுரங்களின் வரிசையை அதாவது ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய அமைப்புகொண்ட சுரங்களை 'சுவராவளி' அல்லது 'சரளிவரிசை' என்றுதாங்க அழைப்பார்கள்.

                 இசையானது சுழற்சிமுறையில் பயணிப்பதால்தாங்க 'ச' மீண்டும் சேர்க்கப்படுகிறது.பயிற்சி பெற,பெற தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.ஆதலால் குழப்பம் விளைவிக்கும் பகுதியை விட்டு கடந்து செல்லுங்க.பின்னர் தாங்களாகவே புரிந்துகொள்வீங்க....

      ச,ரி,க,ம,ப,த,நி,சஆகிய எட்டு சுரங்களும் அடங்கிய தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும் அல்லவா!.அந்த ஸ்தாயி ஆனது மத்திய ஸ்தாயி,மந்திர ஸ்தாயி,அனுமந்திர ஸ்தாயி ,தார ஸ்தாயி,அதிதார ஸ்தாயி என சூருதிகளை கூட்டி இசைப்பதற்கேற்பவும்,சுருதிகளை குறைத்து இசைப்பதற்கேற்பவும் விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.
                 மேற்கத்திய இசையில் LOW OCTAVE,MIDDLE OCTAVE,HIGH OCTAVE என விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.
                   சரளி வரிசையானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதாவது ச,ரி,க,ம நான்கு சுரங்களும் - பூர்வாங்கம் எனவும்,ப,த,நி,ச நான்கு சுரங்களும்- உத்திராங்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.   https://konguthendral.blogspot.com

ஆரோகணம் எனப்படுவது  ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற வரிசையில் அதாவது சுரங்களின் ஏறுவரிசையில் இசைக்கப்படுவது ஆகும்.இதனையே, ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற வரிசையில் அதாவது இறங்கியவரிசையில் இசைக்கப்படுவது அவரோகணம் என்றழைக்கப்படுகின்றது.

                ஆவர்த்தனம் எனப்படுவது ச,ரி,க,ம,ப,த,நி,ச என சுரங்களின் ஏறுவரிசையில் இசைத்து மீண்டும், ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற இறங்கு வரிசையில் சுரங்களை இசைக்கப்படுவது ஆகும்.

               ஒவ்வொரு சுரமும் இரட்டையாக பாடப்பட்டால் அதனை ஜண்டை வரிசை என்றழைப்பார்கள்.

               சுரங்களானது இராகத்தின் இடையிடையே தாண்டிச் சென்றால் அந்த சுரங்களின் வரிசையை தாண்டுவரிசை அல்லது தாட்டு வரிசை என்றழைப்பார்கள்.

                இராகம் எனப்படுவது நாம் கேட்பதற்கு இனிமையைத் தருகின்றவகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையே ஆகும்.

          தாளம் எனப்படுவது ஒரு பாடலின் நடைமுறையை வரைமுறைப்படுத்துவது ஆகும்.  https://konguthendral.blogspot.com

          அலங்காரம் எனப்படுவது வெவ்வேறு தாளங்களின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறுவிதமாக அமைக்கப்பட்ட சுரவரிசையாகும்.அதாவது உள்ளோசையாகும்.அலங்காரத்தை கமகம் என்றழைப்பாங்க.
சுருக்கமாக சொல்லப்போனால்...சுருதி எனப்படும் சுரங்களைக் கொண்டு இராகமும்,இராக விளக்கத்திற்கு ஆரோகணமும்,அவரோகணமும் கிடைக்கின்றது.இராகத்திற்கான கீர்த்தனை அதாவது பாடல் பல்லவி,அனுபல்லவி,சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடப்படுகின்றது.
இராக வகைகளை காலை,மதியம்,மாலை,இரவு,என காலத்திற்கேற்ற ராகங்களாகவும்,கருணை,அன்பு,கோபம்,வீரம்,மகிழ்ச்சி,மங்கலம்,விந்தை,வெறுப்பு,பயம்,சாந்தம் என இயல்பு நடைக்கேற்ற ராகங்களாகவும் பாடப்படுகின்றன.
வாயால் பாடப்படும்போது சப்தம்,அர்த்தம்,லயம் அனைத்தும் சேர்ந்து இன்பம் அளிக்கிறது.  https://konguthendral.blogspot.com
இசைக்கருவிகளால் இசைக்கும்போது அதாவது காற்று வாத்தியங்களிலும்,தந்திக் வாத்தியங்களில் சப்தமும்,லயமும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.
தோல் வாத்தியங்களில் இசைக்கப்படும்போது சப்தமும்,தாளநடையும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.
 பதிவின் நீளம் கருதி இந்தப் பதிவு இத்துடன் நிறைவு செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.இசைக்கு வசமாவோம்.
 என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (5) கீ போர்டு வாசிக்கலாம் வாங்க!
என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...