12 ஜூன் 2020

(2) இந்திய இசை மரபுகள்

                  ( பதிவு -2) இந்திய இசை மரபுகளும்,மேற்கத்திய இசையும்.
                                                                  ---------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
             இசையானது   பண்டையகாலம் தொட்டே உலகமக்களின் வாழ்க்கையில்   ஒரு அங்கமாக திகழ்ந்து வருகின்றது.அவரவர் ரசனைக்கேற்ப   வாயால் பாடியும்,பல்வேறு கருவிகளால் மீட்டும் இசையை கேட்டு மகிழ்வுற்று வருகின்றனர்.இசைக் குறிப்புகளும் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல இசை மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றுள் முக்கியமானவைகளில் சில...
(1)கருநாடக இசை,(2)இந்துஸ்தானி இசை,(3)கிராமிய இசை,(4)பழந்தமிழர் இசை என வகைப்படுத்தலாம்.
                

இசைக் குறியீடு அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக எழுத்துக்களின் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.https://konguthendral.blogspot.com
           இந்திய இசையில்  ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய இசைக்குறிப்புகளைப் பயன்படுத்திவருகின்றது. இந்த ஏழு இராகங்களையும் ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய எழுத்துக்களால் அடையாளப்படுத்தி பயன்படுத்துகின்றனர்.மேற்கண்ட ஏழு ராகங்களும் சேர்ந்து ஒரு ஸ்தாயி என்றழைக்கப்படுகிறது.இயற்கையாக ஒலிகளைக் கொண்ட சுரங்கள் மத்திய ஸ்தாயி என்றும் குறைந்த ஒலிகளைக் கொண்ட சுரங்கள்  மந்த்ர ஸ்தாயி என்றும்,உயர்ந்த ஒலிச் சுரங்களை தாரா ஸ்தாயி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் & டச்சுமொழி பேசும் நாடுகள் இலத்தீன் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு இசைக்குறிப்புகளை C,D,E,F,G,A,B,C  ஆகிய ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.உலகின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,பிரான்சு,ருமேனியா,ரஷ்யா,மற்றும் அரபுநாடுகளில்  (Doh,Re,Mi,Fa,So,La,Ti,Doh)  டோ,ரீ,மி,ஃபா,சோ,லா,டி  என Solfege முறையில் இசைக்கின்றனர்.இந்த ராகங்களை  C,D,E,F,G,A,B,C ஆகிய ஆங்கில எழுத்துக்களால் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
 ஆக முதல் பதிவில் குறிப்பிட்டது போன்று இசையானது கடலுக்கு ஒப்பானது.பல்வேறு நாடுகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப இசைக் குறிப்புகளை பயன்படுத்தி இசைக்கின்றனர்.இந்த தகவல்களெல்லாம் நமது அடிப்படைப் புரிதலுக்காக மட்டுமே.ஆதலால் நாம் அவற்றை கருத்தில் கொள்ளாமல் நமக்கேற்றவாறு இசைத்துப் பழகுவோம் வாங்க.

இனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க!..
என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (3) இசைக் கருவிகள் என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...