05 ஏப்ரல் 2016

காலைக்கதிர் நாளிதழ் ஈரோடு பதிப்பு.......


தேர்தல் கமிஷனின் விதிமுறைகளும் சமூக ஆர்வலர்களின் எண்ணங்களின் பதிவுகளும்............

வருவது தெரியும்! போவது எங்கே?
பறக்கும்படைக்கு நுகர்வோர் சங்கம் சார்பாக எனது கேள்வி...
மரியாதைக்குரியவர்களே, அனைவருக்கும் வணக்கம்.சத்தியமங்கலம் வட்டம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பிரபல செய்தியாளருமான திரு.வேலுச்சாமி ஐயா அவர்களிடம் நான் முன் வைத்த கேள்வியும் அதற்கான பதிலை சேகரித்து நேற்றைய அதாவது2016 ஏப்ரல்5ந் தேதியிட்ட ஈரோடு பதிப்பில் 6 வது பக்கத்தில் வெளியான செய்தியும் தங்களது பார்வைக்காக பதிவிடுகிறேன்.(நாளிதழ் செய்தி நகலை பின்னர் பதிகிறேன்.)

வருவது தெரியும் போவது எங்கே?
பறக்கும் படைக்கு நுகர்வோர் சங்கம் கேள்வி

பணம் எடுத்துச்செல்வோரிடம் உரிய ஆவணம் கேட்கும் பறக்கும்படை அதிகாரிகள்அந்தப் பணம் எங்கு சென்று சேர்கிறது என்பதைக் கண்காணிக்காமல்,பணப்பட்டுவாடாவைத் தடுப்பது எப்படி? என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் கூறியதாவது!

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பறக்கும்படையினர் வாகனங்களை சோதனை செய்து,ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது..இதில் அந்த பணம் கறுப்பு பணமா?இல்லையா? என்பதை மட்டுமே கண்டறிய முடியும்.ஆனால் தேர்தல் கமிஷனின் நோக்கமே வாக்களர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதுதான்.அப்படியானால் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணம் எங்கு சென்று சேர்கிறது என்பதையும் தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும்.அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து பவானிசாகர் தேர்தல் அலுவலர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது,அவர் கூறியதாவது; பணத்தை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதற்கு தகுந்த ஆவணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் பறிமுதல் செய்து உரிய ஆவணத்தை காட்டிய பிறகு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு உத்தரவு.தேர்தல் கமிஷன் வகுத்துக்கொடுத்த விதிமுறைகளை நாங்கள் செயல்டுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறாக செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.தங்களது கருத்துக்களையும் இங்கு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகம்தழைக்க
சமூக நலன் கருதி
அன்பன் பரமேஸ்வரன்,9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...