மதிப்பிற்குரிய வாசகர்களே,
வணக்கம். வருகின்ற 2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமையும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இரண்டுநாட்கள் னவானிசாகர் பேருந்துநிலையம் அருகிலுள்ள தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் ஐயா அவர்கள் நினைவு அரங்கத்தில்,
சத்தியமங்கலம் மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு,யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் இணைந்து, மக்களின் வாழ்வாதாரத் திருவிழாவாக
பவானிசாகர் புத்தகத் திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி மற்றும் பள்ளிகளின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி மற்றும் குறிப்புரை வழங்குதல் நிகழ்வு என நடத்துகின்றன.
பேரன்புகொண்ட பொதுமக்களே, வாசகர்கள் மற்றும் வேளாண்பெருங்குடி மக்களே,
வணக்கம்.பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் மரபு விதைகள் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம் .அனுமதி இலவசம்,அனைவரும் வருக.அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்க.
தெற்காசியாவின் மிகப்பெரிய மண் அணை அமைந்துள்ள பவானிசாகரில் ஈரோடு பாசனத் தந்தை தியாகி M.A.ஈஸ்வரன் அரங்கத்தில்,
சத்தியமங்கலம் தாலுக்கா மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு, யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் கிளப் மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் இணைந்து ,
முதன்முறையாக ,
பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் விற்பனை, மரபு விதைகள் கண்காட்சி மற்றும் விற்பனை,பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்கும் மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி
வருகின்ற 2026- ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை மற்றும் 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் நடத்துகின்றன.
காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பல்லாயிரக்கணக்கில்
பொது அறிவுப் புத்தகங்கள் கண்காட்சி &10℅தள்ளுபடி விற்பனை,
நாட்டுக் காய்கறி விதைகள், கீரை விதைகள், மூலிகை விதைகள், விதைக் கிழங்குகள், விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களுக்கும் தேவையான உபகரணங்கள்,இடுபொருட்கள்,கண்காட்சி & விற்பனை நடைபெறுகின்றன.
2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை காலை சரியாக 10.00 மணிக்கு மீன்வளத்துறை,வனத்துறை உட்பட வேளாண்துறைகளின் விஞ்ஞானிகளும்,அரசு ஊழியர் பயிற்சிநிலையம், பேரூராட்சி மன்றத்தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்கள்,வணிகர் சங்கம்,வியாபாரிகள் சங்கம்,சமூக சிந்தனையாளர்கள் உட்பட சான்றோர் மேன்மக்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர்.
மாலை 3.00 மணியிலிந்து 4.00 மணிவரை வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் வேளாண் கருத்தரங்கம் மற்றும் தற்போது நம்மை மிரட்டிவரும் எல்- நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்கொள்ளும் வறட்சி,அதிகவெப்பம், மற்றும் பெருமழையின் பாதிப்புகளும் பாதுகாப்பும் கலந்தாலோசனைகளும் நடைபெறுகின்றன.இரவு 6.00 மணிக்கு இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
அடுத்தநாள் 2026 ஆகஸ்டு 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு
மகளிர் சுய உதவிக் குழுக்களும்,தன்னார்வ அமைப்புகளும் ,குடும்பப் பெண்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.அதுசமயம், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுப் பொருட்கள்,தின்பண்டங்கள்,நஞ்சில்லா உணவுகள்,கைவினைப் பொருட்கள்,கைத்தறி ஆடைகள் கண்காட்சியும் குறைந்தவிலையில் விற்பனையும் நடைபெறுகின்றன.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
மதியம் 2.00 மணிக்கு மீனவர் நலனில் தமிழக அரசு தலைப்பில் ஒளிப்படக்காட்சியுடன் மீனவர்கள் குடும்பவிழாவும் மீன் உணவுகள் விற்பனையும் நடைபெறுகின்றன.
மாலை 4.00 மணிக்கு சித்த மருத்துவர்களும், மூலிகை மருந்துகள் விற்பனையாளர்களும்,மூலிகைத் தாவரங்கள் சாகுபடியாளர்களும் சூழல் ஆர்வலர்களும் கலந்துகொள்ளும், " தமிழ்வழி மருத்துவம் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
மாலை 6.00 மணிக்கு நிறைவுவிழாவுடன் நிறைவுபெறுகின்றது.