26 ஜனவரி 2017

பாரதிதாசன்


தமிழ் கவிஞர் பாரதிதாசன் (Bharathidasan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது
தென்றலுக்கு நன்றி 602 tamil kavithaigal
த்துண்ணல் 391 tamil kavithaigal
நீலவான் ஆடைக்குள் 467 tamil kavithaigal
ஆற்றுநடை 445 tamil kavithaigal
தமிழை என்னுயிர் என்பேன் 1223 tamil kavithaigal
படைத் தமிழ் 799 tamil kavithaigal
பாரதி பற்றி பாரதிதாசன் 804 tamil kavithaigal
அழகின் சிரிப்பு 1781 tamil kavithaigal
738 tamil kavithaigal
திருப்பள்ளி யெழுச்சி 896 tamil kavithaigal
புது நாளினை எண்ணி உழைப்போம் 285 arulsai
நேர்மை வளையுது 244 arulsai
தமிழியக்கம் - கணக்காயர் 162 arulsai
தமிழியக்கம் - பாடகர் 138 arulsai
தமிழியக்கம் - மாணவர் 1873 arulsai
தமிழியக்கம் - பாட்டியற்றுவோர் 114 arulsai

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள்.
தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 29, 1891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
பாரதியார் மீது பற்று
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
பாரதிதாசன் கவிதைகள்
கருத்துரைப் பாட்டு
திருமணம்
பணமும் மணமும்
பெற்றோர் இன்பம்
எமனை எலி விழுங்கிற்று!
சவப்பற்று
மெய்யன்பு!
தன்மான உலகு
பந்துபட்ட தோள்
இருவர் ஒற்றுமை
சொல்லும் செயலும்
காதலி
தென்றல்
மாலை
காலை
மாவலிபுரச் செலவு
வானம்பாடி
இயற்கை
அதிகாலை
இயற்கைச் செல்வம்
கொட்டு முரசே!
வாழ்வு
கசடறக் கற்க
சங்கங்கள்
வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்
படத்தொழிலின் பயன்
மடமை ஓவியம்
குடியானவன்
குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை
தொழில்
குழந்தை
கற்பனை உலகில்
அறம் செய்க
பூசணிக்காய் மகத்துவம்
யாத்திரை போகும் போது!
பத்திரிகை
உன்னை விற்காதே
சுதந்திரம்
எமனை எலி விழுங்கிற்று!
சைவப்பற்று
வீரத் தமிழன்
புத்தகசாலை
வாளினை எடடா!
தமிழ் நாட்டில் சினிமா
பலிபீடம்
நீங்களே சொல்லுங்கள்
வியர்வைக் கடல்
புதிய உலகு செய்வாம்
சாய்ந்த தராசு
உலகம் உன்னுடையது!
உலகப்பன் பாட்டு
முன்னேறு!
மானிட சக்தி
ஆய்ந்து பார்!!
மாண்டவன் மீண்டான்!
வாழ்வில் உயர்வு கொள்!
தொழிலாளர் விண்ணப்பம்
கூடித் தொழில் செய்க
தளை அறு!
பேரிகை
உலக ஒற்றுமை
பெண் குழந்தை தாலாட்டு
ஆண் குழந்தை தாலாட்டு
தவிப்பதற்கோ பிள்ளை
கைம்மை நீக்கம்
கைம்மைத் துயர்
இறந்தவன் மேற் பழி
கைம்பெண் நிலை
பெண்ணுக்கு நீதி
குழந்தை மணத்தின் கொடுமை
எழுச்சியுற்ற பெண்கள்
மூடத் திருமணம்
கைம்மைக் கொடுமை
கைம்மைப் பழி
பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா
தமிழ்க் கனவு
சங்க நாதம்
எந்நாளோ?
தமிழ்க் காதல்
தமிழ் வளர்ச்சி
எங்கள் தமிழ்
தமிழ்ப் பேறு
காதற் கடிதங்கள்
மாந்தோப்பில் மணம்
காட்சி இன்பம்
மக்கள் நிலை
கானல்
காடு
உதய சூரியன்
சிரித்த முல்லை
மயில்
தமிழ் உணவு
தமிழ் வீரரின் எழுச்சி
இனபத் தமிழ்
தமிழின் இனிமை
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
இருண்ட வீடு

தமிழ்-இலக்கியம் சங்க இலக்கியம்
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்
சிறு காப்பியம்
வீரத்தாய் - பகுதி 2
வீரத்தாய் - பகுதி 1
சஞ்சீவி பர்வதத்ததின் சாரல்
காதல் நினைவுகள் - பகுதி 2
காதல் நினைவுகள் - பகுதி 1
தமிழச்சியின் கத்தி - பகுதி 2
தமிழச்சியின் கத்தி - பகுதி 1
புரட்சிக்கவி - பகுதி 2
புரட்சிக்கவி - பகுதி 1
பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 6
பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 5
பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 4
பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 3
பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 2
பாரதிதாசன் கவிதைகள் - பகுதி 1
எதிர்பாராத முத்தம் - பகுதி 2
எதிர்பாராத முத்தம் - பகுதி 1
இசை அமுது - பகுதி 4
இசை அமுது - பகுதி 3
இசை அமுது - பகுதி 2
இசை அமுது - பகுதி 1
மணிமேகலை வெண்பா - பகுதி 2
மணிமேகலை வெண்பா - பகுதி 2
மணிமேகலை வெண்பா - பகுதி 1
அழகின் சிரிப்பு - பகுதி - 1
இளைஞர் இலக்கியம் - பகுதி 2
இளைஞர் இலக்கியம் - பகுதி 1
பாண்டியன் பரிசு
கண்ணகி புரட்சிக் காப்பியம்
இருண்ட வீடு
குடும்ப விளக்கு - ஐந்தாம் பகுதி
குடும்ப விளக்கு - நான்காம் பகுதி
குடும்ப விளக்கு - மூன்றாம் பகுதி
குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி
குடும்ப விளக்கு - முதற் பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...