நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம்.
23 ஜூலை 2016
20 ஜூலை 2016
தமிழ் வலைப்பதிவர்கள் பட்டியல்-
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கொங்குத்தென்றல் பதிவர் அன்பன் பரமேஸ்வரன் டிரைவர் எழுதுவது.
Mobile: 9585600733 paramesdriver@gmail.com
கடந்த 2015அக்டோபர்11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டையில் உலகளவிலான பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வலைப்பதிவர் திருவிழாவாக கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா தலைமையிலான குழு சிறப்பாக நடத்தியது அனைவரும் அறிந்ததே வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் உட்பட உபசரிப்பு வாழ்நாளிலும் மறக்க முடியாதவை என்றும் நினைவில் நிலைப்பவை.அப்போது புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா குழுவினரும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகளவிலான தமிழ் வலைப்பதிவர்களை அடையாளம் கண்டு தொகுத்து புத்தகமாக உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு WORLD TAMIL BLOGGERS GUIDE BOOK என்ற தலைப்பில் வெளியிட்டனர்.புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு சென்ற அனைவருக்கும் கையேடு மற்றும் பேனா,நோட்டு,கைப்பை இலவசமாக கொடுத்தனர்.நான் பெற்ற வலைப்பதிவர்களின் கையேட்டில் கண்டுள்ளபடி நீங்கள்
இணையத்தில் தமிழில் வலைப்பக்கங்களை படிக்க உதவும் வகையில் இங்கு நான் பதிவிடுகிறேன்.
பிரபல தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளங்கள் பட்டியல்,
(1)எஸ்.ராமகிருஷ்ணன் - http://www.sramakrishnan.com
(2)ஜெயமோகன் http://www.jeyamohan.in ,
(3)நாஞ்சில் நாடன் http://www.nanjilnadan.com,
(4)வண்ணதாசன் http://vannathasan.wordpress.com,
(5)மாமல்லன் http://www.maamallan.com
(6)வண்ண நிலவன் http://wannanilavan.wordpress.com
(7) ஞானக்கூத்தன் http://www.gnanakoothan.com
(8)அப்துல் ரகுமான் http://kavikko.wordpress.com
(9)மு.மேத்தா http://mumetha.blogspot.in
(10)யுகபாரதி http://yugabharathi.wordpress.com
ஆதாரம்; உலகத்தமழ் வலைப்பதிவர் கையேடு-
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம்
(11)அறிவுமதி http://arivumathi.wordpress.com
(12)பாலகுமாரன் http://balakumaranpesukirar.blogspot.in
(13)குட்டி ரேவதி http://kuttyrevathy.blogspot.in
(14)சுகுமாறன் http://vaalnilam.blogspot.in
(15)தேவி பாரதி http://devibharathi.blogspot.in
(16)பா.ராகவன் http://www.writerpara.com/paper
(17)பத்ரி சேஷாத்ரி
(18)நாகூர் ரூமி http://nagoorumi.wordpress.com
(19)புதிய மாதவி http://puthiyamaadhavi.blogspot.in
(20)லீலா மணிமேகலை http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in
(21)கலாப்பிரியா http://kalapria.blogspot.in
(22)டாக்டர் ஷாலினி http://linguamadarasi.blogspot.in
(23)டாக்டர் ருத்ரன் http://tudhrantamil.blogspot.in
(24)ப்ரம்மராஜன் http://brammarajan.wordpress.com
(25)வெ.சா http://vesaamusings.blogspot.in
(26)பிரபஞ்சன் http://www.prapanchan.com
(27)அ.ராமசாமி http://ramasamywritings.blogspot.in
(28)சுதாங்கன் http://sudhanganin.blogspot.in
(29)அ.முத்துலிங்கம் http://amuttu.net/home
(30)சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.in
(31)ரெ.கா. http://reka.anjal.net
(32)அழகிய சிங்கர் http://azhagiyasingar.blogspot.in
(33)தளவாய் சுந்தரம் htp://dhalavaisundaram.blogspot.com
(34)இ.முருகன் http://eramurukan.in/tamil/home.html
(35)தேவதேவன் http://poetdevadevan.blogspot.in
(36)ஷோபாசக்தி http://shobasakthi.com/shobasakthi
(37)லிவ்விங் ஸ்மைல் வித்யா http://livinsmile.blogspot.in
(38)தீபசெல்வன் http://deebam.blogspot.in
(39)மு.இளங்கோவன் http://muelangovan.blogspot.in
(40) பெருந்தேவி http://innapira.blogspot.in
(41)காலபைரவன் http://kalabairavan.blogpot.in
(42)நளாயினி http://nalayinykavithikal.blogspot.in
(43)ஜமாலன் http://jamalantamil.blogspot.in
(44)மாலன் http://jannal.blogspot.in
(45)மருதன் http://marudhang.blogspot.in
(46)சக்தி ஜோதி http://sakthijothi.wordpress.com
(47)ராஜா சந்திரசேகர் http://raajaachandrasekar.blogspot.in
(48)அ.மார்க்ஸ் http://amarx.org
(49)அய்யப்ப மாதவன் http://iyyappamadhavan.blogspot.in
வணக்கம்.
கொங்குத்தென்றல் பதிவர் அன்பன் பரமேஸ்வரன் டிரைவர் எழுதுவது.
Mobile: 9585600733 paramesdriver@gmail.com
கடந்த 2015அக்டோபர்11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டையில் உலகளவிலான பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வலைப்பதிவர் திருவிழாவாக கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா தலைமையிலான குழு சிறப்பாக நடத்தியது அனைவரும் அறிந்ததே வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் உட்பட உபசரிப்பு வாழ்நாளிலும் மறக்க முடியாதவை என்றும் நினைவில் நிலைப்பவை.அப்போது புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா குழுவினரும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகளவிலான தமிழ் வலைப்பதிவர்களை அடையாளம் கண்டு தொகுத்து புத்தகமாக உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு WORLD TAMIL BLOGGERS GUIDE BOOK என்ற தலைப்பில் வெளியிட்டனர்.புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு சென்ற அனைவருக்கும் கையேடு மற்றும் பேனா,நோட்டு,கைப்பை இலவசமாக கொடுத்தனர்.நான் பெற்ற வலைப்பதிவர்களின் கையேட்டில் கண்டுள்ளபடி நீங்கள்
இணையத்தில் தமிழில் வலைப்பக்கங்களை படிக்க உதவும் வகையில் இங்கு நான் பதிவிடுகிறேன்.
பிரபல தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளங்கள் பட்டியல்,
(1)எஸ்.ராமகிருஷ்ணன் - http://www.sramakrishnan.com
(2)ஜெயமோகன் http://www.jeyamohan.in ,
(3)நாஞ்சில் நாடன் http://www.nanjilnadan.com,
(4)வண்ணதாசன் http://vannathasan.wordpress.com,
(5)மாமல்லன் http://www.maamallan.com
(6)வண்ண நிலவன் http://wannanilavan.wordpress.com
(7) ஞானக்கூத்தன் http://www.gnanakoothan.com
(8)அப்துல் ரகுமான் http://kavikko.wordpress.com
(9)மு.மேத்தா http://mumetha.blogspot.in
(10)யுகபாரதி http://yugabharathi.wordpress.com
ஆதாரம்; உலகத்தமழ் வலைப்பதிவர் கையேடு-
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம்
(11)அறிவுமதி http://arivumathi.wordpress.com
(12)பாலகுமாரன் http://balakumaranpesukirar.blogspot.in
(13)குட்டி ரேவதி http://kuttyrevathy.blogspot.in
(14)சுகுமாறன் http://vaalnilam.blogspot.in
(15)தேவி பாரதி http://devibharathi.blogspot.in
(16)பா.ராகவன் http://www.writerpara.com/paper
(17)பத்ரி சேஷாத்ரி
(18)நாகூர் ரூமி http://nagoorumi.wordpress.com
(19)புதிய மாதவி http://puthiyamaadhavi.blogspot.in
(20)லீலா மணிமேகலை http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in
(21)கலாப்பிரியா http://kalapria.blogspot.in
(22)டாக்டர் ஷாலினி http://linguamadarasi.blogspot.in
(23)டாக்டர் ருத்ரன் http://tudhrantamil.blogspot.in
(24)ப்ரம்மராஜன் http://brammarajan.wordpress.com
(25)வெ.சா http://vesaamusings.blogspot.in
(26)பிரபஞ்சன் http://www.prapanchan.com
(27)அ.ராமசாமி http://ramasamywritings.blogspot.in
(28)சுதாங்கன் http://sudhanganin.blogspot.in
(29)அ.முத்துலிங்கம் http://amuttu.net/home
(30)சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.in
(31)ரெ.கா. http://reka.anjal.net
(32)அழகிய சிங்கர் http://azhagiyasingar.blogspot.in
(33)தளவாய் சுந்தரம் htp://dhalavaisundaram.blogspot.com
(34)இ.முருகன் http://eramurukan.in/tamil/home.html
(35)தேவதேவன் http://poetdevadevan.blogspot.in
(36)ஷோபாசக்தி http://shobasakthi.com/shobasakthi
(37)லிவ்விங் ஸ்மைல் வித்யா http://livinsmile.blogspot.in
(38)தீபசெல்வன் http://deebam.blogspot.in
(39)மு.இளங்கோவன் http://muelangovan.blogspot.in
(40) பெருந்தேவி http://innapira.blogspot.in
(41)காலபைரவன் http://kalabairavan.blogpot.in
(42)நளாயினி http://nalayinykavithikal.blogspot.in
(43)ஜமாலன் http://jamalantamil.blogspot.in
(44)மாலன் http://jannal.blogspot.in
(45)மருதன் http://marudhang.blogspot.in
(46)சக்தி ஜோதி http://sakthijothi.wordpress.com
(47)ராஜா சந்திரசேகர் http://raajaachandrasekar.blogspot.in
(48)அ.மார்க்ஸ் http://amarx.org
(49)அய்யப்ப மாதவன் http://iyyappamadhavan.blogspot.in
11 ஜூலை 2016
சமூக ஆர்வலர்களான ஆசிரியப் பெருமக்கள்-தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
15-07-2016 வெள்ளிக்கிழமை இன்று ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி தினவிழா,மாணவர் நூலகம் துவக்கவிழா,மாணவ வாசக வட்டம் துவக்கவிழா ஆகிய முப்பெரும்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றன. திருமிகு. R.மாதேஷ்,பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் அனைவரையும் வரவேற்றார்.திருமிகு.N.நஞ்சுண்ட நாயக்கர் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமை ஏற்றார். பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.அதன்பிறகு தொடங்கிய ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களின தலைமையுரையில் பெருந்தலைவர் காமராஜர் கால் பதித்த பள்ளி தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என பெருமைப்பட்டதோடு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திறந்து வைத்த வகுப்பறைக் கட்டடத்தை நினைவுகூர்ந்தார்.சிறப்புரை ஆற்றிய திருமதி.R. ராஜம்மா A.E.E.O. அவர்கள் மாணவர் நூலகத்தை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது தமிழகம் முழுவதும் கிராமம்தோறும் அதிகளவு பள்ளிகளை திறந்து கல்விக்கண் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என புகழாரம் சூட்டினார்.K.C.T.Matricபள்ளி தாளாளர் திருமிகு சுரேஷ் அவர்கள், READ NGO பொறுப்பாளர் திருமதி சுந்தரி அவர்கள் , மற்றும் ROTARY CLUB OF THALAVADI தலைவர் திருமிகு.வியானி அவர்கள், மற்றும் PALM2NGO நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்கள், மற்றும் மனித உரிமைகள் தலைவர் A. பாபு அவர்கள் T.V.ஆனந்த நாராயணன் செய்தியாளர் தாளவாடி அவர்கள் திருமிகு. A.P.ராஜூ அவர்கள் ,திருமிகு வடிவேல் அவர்கள்,திருமதி லதா ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆசிரியை உட்பட பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர்.திருமிகு.C. பரமேஸ்வரன் அவர்கள் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாணவர் நூலகத்தின் நோக்கம் பற்றிய உரையில் , அனைத்து மாணவர்களையும் வாசிக்க உரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.அப்போதுதான் எழுத்துப்பிழை,சொற்பிழை,கருத்துப்பிழை தவிர்த்து அறிவு வளரும்,சிந்தனை பெருகும்,கற்பனை வளரும்.பாடப்புத்தகங்களையும் விரைவாக வாசித்து நினைவில் வைக்கவும் உதவும். மாணவர்களால் எடுத்துச்செல்லப்படும் புத்தகங்கள் பெற்றோருக்கும் வாசிக்க உதவும்.ஆசிரியப்பெருமக்களும் வாசிக்கும் பழக்கத்தை தொடர்வர் என்றார்.சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு என்பது குழந்தை முதல் குடியரசுத்தலைவர் யாராக இருப்பினும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்று சேவையாற்றுவது.சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பில் எப்போதும்,யாரும்,எங்கிருந்தும் இணையலாம்.சமூகப்பணியாற்றலாம்.ஆலோசனை வழங்கலாம்.புத்தகங்கள் வழங்கலாம். paramesdriver@gmail.com மின்னஞ்சலிலும்,+91 9585600733 என்ற நகர்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.என்றார்.நிறைவாக முதல் கட்டமாக முப்பது மாணவர்களை உறுப்பினர்களாக சேர்த்து வாசிப்பதற்காக சுழல்முறையில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.அப்போது பள்ளியின் இருபால் ஆசிரியப்பெருமக்கள் மாணவர் நூலகத்திற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கி சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பில் இணைந்தனர்.சிற்றுண்டி உட்பட விழா ஏற்பாட்டினை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் இருபால் ஆசிரியப்பெருமக்கள் செய்திருந்தனர்.
சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்,
தாளவாடி - ஈரோடு மாவட்டம்-638461
வணக்கம்.
சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்,
தாளவாடி - ஈரோடு மாவட்டம்-638461
முப்பெரும் விழா-2016 அழைப்பிதழ்!.
மரியாதைக்குரியவர்களே
,வணக்கம்.
ஈரோடு மாவட்டம் நம்ம தாளவாடி வட்டத்தில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக வருகிற 2016ஜூலை மாதம் 15 ந் தேதியன்று காலை 9.00மணிக்கு திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் ,தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா,மாணவர் நூலகம் துவக்கவிழா,மாணவர் வாசகர் வட்டம் துவக்கவிழா ஆகிய முப்பெரும்விழா நடைபெற உள்ளதால் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
கருப்பு வைரம் காமராஜர் பற்றிய 111 அரிய தகவல்கள்...!
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்
போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்
சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்
ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட
பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,
நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற
மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்
சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில
தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்
காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து
போய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,
திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி
கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்
உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக
சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக
ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்
பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட
காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்
காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.
எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்
கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்
அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற
ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்
பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட
சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.
கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''
வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்
மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில்
பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய
தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்
இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை
ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து
வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்
"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை
சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்
அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு
விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்
கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்
ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்
வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்
தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா
வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை
ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை
பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.
அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234
பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்
பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்
8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே
காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை
வைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத
கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்
எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.
இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு
அத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்
முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்
பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்
சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி
இருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்
ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி
சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்
ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல
திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.
"மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்
இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க
காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா
காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்
இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது
குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,
4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்
கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து
போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்
பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய
உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே
பயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை
குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்
மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே
போட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.
`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்
இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்
என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.
பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை
பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,
இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்
ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்
சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று செய்து விட மாட்டார். நிதானமாக
யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த
செயலை எக்காரணம் கொண்டும் செய்து
முடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்
கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்
வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்
தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண
கிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்
உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,
நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்
சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்
காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'
என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்
`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை
முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை
காமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்
வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,
இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்
பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்
பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்
இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு
விட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி
உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,
ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு
விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்
விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்
சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,
செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா
போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்
காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்
முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை
மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக
1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து
வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்
ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள
`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு
நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்
கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்
தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ
வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா
வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற
பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ
கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்
தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி
ஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,
குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி
முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்
தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை
கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்
போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு
பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்
சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்
ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்
விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்
எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு
வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'
என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு
கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு
டிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு
சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்
`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-
ல் சேர்ந்தார்.
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்
உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்
காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி
பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்
கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்
நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக
இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்
காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு
நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய
மூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்
1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்
கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்
சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்
அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை
செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்
திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்
மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்
பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்
ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்
பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு
பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்
திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,
செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்
தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே
இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி
வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,
தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்
இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.
விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே
முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்
மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி
காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"
எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில
்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட
போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய
செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).
நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக
எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்
நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்
பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்
செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்
பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,
முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய
போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்
காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்
ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு
இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து
அனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்
கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்
காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு
நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்
தலையைவெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காம
ராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.
சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்
சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற
மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று
தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'
என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்
காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்
காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக
தமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்
மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,
`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து
இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா
இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்
வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.
என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்
பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு
கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்
கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்
ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது
தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்
சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை
நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி
ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை
மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான
அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை
செய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு
போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து
விடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை
சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படு
வதையோ அவரால் பொறுத்துக் கொள்ள
முடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக
எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்
கொண்டவர் காமராஜர்.
96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்
முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்
`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி
அனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு
எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்
பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்
கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க
முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்
சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே
பிடிக்காது அவருக்கு.
100. சொற்களை வீணாகச் செலவழிக்க
மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்
சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய
செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.
ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்
ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில்
என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்
முக்கியமானவர் என்பதெல்லாம்
அவருக்குத்தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.
தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்
தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாக
இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.
உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்
முழுமையாகப்பெற்றிருந்தார்.
அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பா
க வழிநடத்த முடிந்தது.
106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி
விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்
அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை
மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்
கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு
திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்
எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்
அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.
தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்
இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.
அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான
வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு
விடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்
உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்
செல்வார்.
என
பொது நலனில் அக்கறையுள்ள,
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு-
தாளவாடி வட்டம்,
ஈரோடு மாவட்டம்-638461
தொடர்பு கொள்ள,
(1)C. பரமேஸ்வரன் - 9585600733
(2) P.ராஜூ - 9487430687
(3)T.V.ஆனந்த நாராயணன் - 9442437103
09 ஜூலை 2016
தாளவாடியில் கருத்தரங்கு.
' வாசிப்பே நமது சுவாசிப்பு '
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 2016ஜூலை 9 ந் தேதி சனிக்கிழமை இன்று காலை11.00மணியளவில்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் READ எனப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய அலுவலகத்தில்
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக,
திருமிகுN.நஞ்சுண்ட நாயக்கர்,தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில்,
''வாசிப்பே நமது சுவாசிப்பு'' என்ற தலைப்பில்
கருத்தரங்கம் நடைபெற்றது..
READ அமைப்பின் இயக்குநர் திருமிகு.R.கருப்புசாமி அவர்களும்,
PALM2NGO அமைப்பின் நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வாசிப்பே நமது சுவாசிப்பாக இருக்க வேண்டும் என திருமிகு A..பாபு அவர்கள் மனித உரிமைகள் தலைவர் உரையாற்றினார்.
கருத்தரங்கில் ''மாணவ - மாணவியர் தனி மனித ஒழுங்குடன் துணிந்து செயல்பட்டு தம் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் சமூக ஒற்றுமை காப்பதற்கான வழிகாட்டல்'' என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் திருமிகு. T.V.ஆனந்த நாராயணன் அவர்களும்,திருமிகு அல்போன்ஸ் மணி PALM2NGO அவர்களும் திருமிகுP. ராஜூ TNSTC THALAVADI அவர்களும் உட்பட அனைவரும் விவாதிக்கும்போது, அரசியல்,சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி சமூக ஒற்றுமை காப்பதற்காகவும்,தேச ஒற்றுமை காப்பதற்காகவும்,இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு நல்வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன் பின்னர்
கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(1) மாணவர் நூலகம் வருகிற 2016ஜூலை 15 ந் தேதி காலை 10.30மணியளவில் தாளவாடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துவக்குவது.
(2)சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் சார்பாக மாணவர் நூலகம் செயல்படுவது,மாணவர் நூலகம் அரசியல்,சாதி,மத,இன,மொழி,வேறுபாடின்றி செயல்படுத்துவது.
(3) மாணவர் நூலகத்திற்கு கௌரவ ஆலோசகராக தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமிகு.N.நஞ்சுண்ட நாயக்கர் அவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுப்பது.
மாணவ வாசகர் வட்டம் துவக்கி செயல்பட
.(4)ஆர்வமுள்ள சமூக சேவை அமைப்புகளையும்
விருப்பமுள்ள தன்னார்வலர்களையும் பங்கேற்க அழைப்பது.
(5) கல்வித்துறை உட்பட அரசு சார்ந்த அனைத்து துறைகளையும்,பங்கேற்க அழைப்பது.
(6)முதற்கட்டமாக தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவக்குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்ப்பது.அப்போது 8ம் வகுப்பு மாணவக்குழந்தைகளுக்கு மட்டும் புத்தகங்கள் சுழல்முறையில் வழங்குவது.
(7)வருகிற2016 ஆகஸ்டு 5ந் தேதி ஈரோட்டில் துவங்கும் 12 வது புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கான புத்தகங்களை இயன்றளவு வாங்குவது.
(8) கடம்பூர் தொடங்கி கோட்டமாளம்,கேர்மாளம்,கோட்டாடை,ஆசனூர்,பெஜலட்டி,தலமலை,திகனாரை,
சூசைபுரம்,குன்னன்புரம்,கெட்டவாடி,பனகள்ளி, என தேவைக்கேற்ப செயல்படும் திறனுக்கேற்ப மையங்களை ஏற்படுத்துவது.
(9)அரசு நூலகங்களை அனைவரையும் பயன்படுத்த விழிப்புணர்வு கொடுப்பது.
(10)மாணவ வாசகர் மன்றம் துவக்கி செயல்பட வழிகாட்டுவது.
என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக R.பிலவேந்திரன் PALM 2N.G.O.அவர்கள் தம் நன்றியுரையில் வாசிப்பே நமது சுவாசிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இடவசதி அளித்து உதவிய READ அமைப்பின் இயக்குநர் திருமிகு.R.கருப்புசாமி அவர்களுக்கும், மாணவர் நூலகம் செயல்பட இடவசதி அளிக்க ஒப்புதல் அளித்த திருமிகு. N.நஞ்சுண்ட நாயக்கர் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களுக்கும், PALM2NGO நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்கள் உட்பட கலந்துகொண்டPALM2NGO பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் திருமிகு. A.பாபு அவர்களுக்கும்,T.V.ஆனந்த நாராயணன் அவர்களுக்கும்,P.ராஜூ அவர்களுக்கும் நன்றி கூறினார்.
02 ஜூலை 2016
வாசிப்பது சுவாசிப்பது போன்று தொடர்ச்சியாக இருக்கட்டும்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
எழுத்தறிவு இல்லாமலிருப்பது பெருங்குற்றமல்ல!
.எழுத்தறிவுள்ளவர்கள் வாசிக்காமல் இருப்பதே பெருங்குற்றம்!!
இன்றைய சமூகம் வாசிப்பின் அவசியம் பற்றி தெரியாமலேயே பள்ளிப்படிப்பிலிருந்து பட்டப்படிப்பு முடித்து பலதரப்பட்ட தொழில்களிலும் பலதுறைகளில் பணியாற்றியும் வருகிறார்கள். நிறைய சம்பாதிக்க வேண்டும்,தான் நன்றாக இருக்க வேண்டும்.தம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.paramesdriver@gmail.com
இதுவே இன்றைய சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது.வாசிப்பு என்றால் என்ன?வாசிப்பதால் பயன் என்ன?எதை வாசிப்பது?எப்படி வாசிப்பது? பள்ளிக்கூடத்திலும் பிறகு கல்லூரியிலும் புத்தகங்கள் வாசித்தாயிற்று! இன எதற்கு வாசிக்க வேண்டும்?என்றெல்லாம் கேள்விக்கணைகள் எழுப்புகிறார்கள்.இதனை சமூகத்தின் அறியாமையா அல்லது அறிந்தும் சோம்பலின் காரணமாக இவ்வாறு சாக்காடு பேசுகிறார்களா?எனத்தெரியவில்லை.
பணம் சம்பாதிக்கவும்,வேலைகளுக்கு செல்லவும்,தொழில்களை செய்யவும் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பு உதவுகிறது.ஆனால் பண்பட்ட மனிதனாக,அறிவார்ந்த மனிதனாக,மேம்பட்ட வாழ்க்கை வாழ பலதரப்பட்ட புத்தக வாசிப்பே உறுதுணை செய்கிறது.
வாழுகின்ற நமக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி என்ற வரிகளுக்கேற்ப நம் முன்னோர்கள் அனுபவத்தொகுப்பினை வாசித்து அதன் கருத்தினை நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஏற்று நடக்க முடியும்.
புத்தகங்கள் உயிரற்ற காகிதக்கட்டு அல்ல! புத்தகங்கள் உயிர்ப்புள்ள மனித மனங்கள்.அவ்வாறான நல்ல அறிவு சார்ந்த புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பது மூலமே ஒருவன் தம் வாழ்க்கையில் உயர்வடைய முடியும்.அறிவுக்கு வேர் நல்ல புத்தகங்களே,வாசித்தலால்தான் நமக்கு அறிவு வளர்கிறது.அறிவுடைய சமூதாயத்தை உருவாக்க முடிகிறது.வாசிப்பு என்பது குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல.தனிப்பட்ட மொழிக்கோ,இனத்துக்கோ,சமயத்துக்கோ உட்பட்டதல்ல.சாதி,சமய,மொழி வேறுபாடின்றி ஆண்,பெண் என அனைத்து மக்களும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.வாசிக்க என காலம் நேரம் கிடையாது.எந்நேரமும் வாசிக்கலாம்.அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,''தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு'என்றார்.
என வாசிப்பு பரப்புரையில் ஈடுபாடுகொண்ட
அன்பன்,
C.பரமேஸ்வரன்,
தாளவாடி
9585600733
வணக்கம்.
எழுத்தறிவு இல்லாமலிருப்பது பெருங்குற்றமல்ல!
.எழுத்தறிவுள்ளவர்கள் வாசிக்காமல் இருப்பதே பெருங்குற்றம்!!
இன்றைய சமூகம் வாசிப்பின் அவசியம் பற்றி தெரியாமலேயே பள்ளிப்படிப்பிலிருந்து பட்டப்படிப்பு முடித்து பலதரப்பட்ட தொழில்களிலும் பலதுறைகளில் பணியாற்றியும் வருகிறார்கள். நிறைய சம்பாதிக்க வேண்டும்,தான் நன்றாக இருக்க வேண்டும்.தம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.paramesdriver@gmail.com
இதுவே இன்றைய சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது.வாசிப்பு என்றால் என்ன?வாசிப்பதால் பயன் என்ன?எதை வாசிப்பது?எப்படி வாசிப்பது? பள்ளிக்கூடத்திலும் பிறகு கல்லூரியிலும் புத்தகங்கள் வாசித்தாயிற்று! இன எதற்கு வாசிக்க வேண்டும்?என்றெல்லாம் கேள்விக்கணைகள் எழுப்புகிறார்கள்.இதனை சமூகத்தின் அறியாமையா அல்லது அறிந்தும் சோம்பலின் காரணமாக இவ்வாறு சாக்காடு பேசுகிறார்களா?எனத்தெரியவில்லை.
பணம் சம்பாதிக்கவும்,வேலைகளுக்கு செல்லவும்,தொழில்களை செய்யவும் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பு உதவுகிறது.ஆனால் பண்பட்ட மனிதனாக,அறிவார்ந்த மனிதனாக,மேம்பட்ட வாழ்க்கை வாழ பலதரப்பட்ட புத்தக வாசிப்பே உறுதுணை செய்கிறது.
வாழுகின்ற நமக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி என்ற வரிகளுக்கேற்ப நம் முன்னோர்கள் அனுபவத்தொகுப்பினை வாசித்து அதன் கருத்தினை நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஏற்று நடக்க முடியும்.
புத்தகங்கள் உயிரற்ற காகிதக்கட்டு அல்ல! புத்தகங்கள் உயிர்ப்புள்ள மனித மனங்கள்.அவ்வாறான நல்ல அறிவு சார்ந்த புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பது மூலமே ஒருவன் தம் வாழ்க்கையில் உயர்வடைய முடியும்.அறிவுக்கு வேர் நல்ல புத்தகங்களே,வாசித்தலால்தான் நமக்கு அறிவு வளர்கிறது.அறிவுடைய சமூதாயத்தை உருவாக்க முடிகிறது.வாசிப்பு என்பது குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல.தனிப்பட்ட மொழிக்கோ,இனத்துக்கோ,சமயத்துக்கோ உட்பட்டதல்ல.சாதி,சமய,மொழி வேறுபாடின்றி ஆண்,பெண் என அனைத்து மக்களும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.வாசிக்க என காலம் நேரம் கிடையாது.எந்நேரமும் வாசிக்கலாம்.அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,''தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு'என்றார்.
என வாசிப்பு பரப்புரையில் ஈடுபாடுகொண்ட
அன்பன்,
C.பரமேஸ்வரன்,
தாளவாடி
9585600733
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025
அனைவருக்கும் வணக்கம். கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...

-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...